என் மலர்
செய்திகள்

திருவாரூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
திருவாரூர் அருகே வாந்தி, மயக்கத்தால் அவதிபட்டு வந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே விக்கிரவாண்டியம் காவல் சரகத்திற்கு உட்பட்ட இருள்நீக்கி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சங்கீதா (வயது 23). சங்கீதா கடந்த சில நாட்களாக வாந்தி, மயக்கத்தால் அவதிபட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் நோய் குறையவில்லை. இதனால் விரக்தி அடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து விக்கிரவாண்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story