search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Papanasam Dam"

    • தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • சேர்வலாறு அணை பகுதியில் 39 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு தொடர்ந்து சாரல் மழை கொட்டி வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 1195.26 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 80.25 அடியாக இருந்த நிலையில் இன்று காலை மேலும் 2 அடி உயர்ந்து 82.20 அடியாக அதிகரித்தது. சேர்வலாறு அணை பகுதியில் 39 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1585 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக காலையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மதியத்திற்கு பிறகு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்கிறது.

    இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. புறநகரில் கன்னடியன், சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல் அடித்தது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    மாவட்டத்தில் செங்கோட்டை, ஆய்க்குடி, தென்காசி, சிவகிரி, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அடவிநயினார் அணையில் 12 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 8 மில்லிமீட்டரும், கடனாநதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் தென் மாவட்டங்களின் முக்கிய மற்றும் பிரதான அணையாக பாபநாசம் அணை அமைந்துள்ளது.
    • பாபநாசம் அணை தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1-ந்தேதி முதல் கன மழை பெய்து வருகிறது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 84 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 7 அடி உயர்ந்து 91.60 அடியாக உள்ளது. அணைக்கு 6,921.99 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 நாட்களாக தொடர்மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 25 அடி உயர்ந்துள்ளது.

    மேற்குத்தொடர்ச்சி மலையில் தென் மாவட்டங்களின் முக்கிய மற்றும் பிரதான அணையாக பாபநாசம் அணை அமைந்துள்ளது. இந்த அணை தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. தற்போது நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது பணிகளை தொடங்கி உள்ளனர்.

    இதேபோல் முழு கொள்ளளவு 156 அடி கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் சுமார் 11 அடி உயர்ந்து 128.84 அடியை எட்டி உள்ளது. கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் 78.80 அடியில் இருந்து சுமார் 50 அடி உயர்ந்து 128.84 அடியை எட்டியுள்ளது.

    மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 11 மில்லிமீட்டரும், பாபநாசதத்தில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து 5-வது நாளாக இன்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க இன்றும் தடை நீடிக்கிறது.

    84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 82 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. அந்த அணை நிரம்புவதற்கு 3 அடி நீரே தேவை. இன்று காலை நிலவரப்படி அணை பகுதியில் 50 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அடவிநயினார் அணை பகுதியில் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 112 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 48.89 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை பகுதியில் 62 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் பரவலாக மழை பெய்தது.

    மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 11 சதவீதம் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் மழை குறைந்தது. ஒருசில இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு வரை பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 137.80 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 148.06 அடி நீர் இருப்பு உள்ளது.

    பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்வதால் அணைக்கு 7377.71 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து உபரியாக வினாடிக்கு 7,771 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் இருந்து திறந்துவிடப்படுகிறது.

    இதன் காரணமாக ஆற்றில் அதிகளவு நீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாபநாசம் படித்துறை பகுதியில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் அங்கும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் கோவில் மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்களுக்கும் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    பாபநாசம் படித்துறையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காணலாம்

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 89.30 அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பாபநாசம் அணை 56.14 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 94.15 சதவீதமாக உள்ளது. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 38 சதவீதம் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு 35.15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு இருந்த சேர்வலாறு அணையில் இந்த ஆண்டு 86.68 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 11 சதவீதம் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    மாவட்டத்தில் கொடு முடியாறு அணை தனது முழு கொள்ளளவான 52.50 அடியை எட்டி விட்டதால் அணைக்கு வரும் 700 கனஅடி நீரும் உபரியாக திறந்து விடப்படுகிறது. நம்பியாறு அணையும் தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக சாலைகள் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    மாநகர பகுதியில் சேதமான சாலைகள் குறித்த பொதுமக்களின் புகார் காரணமாக தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலை உள்ளிட்ட சாலைகளில் தற்காலிகமாக சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி நாங்குநேரி, மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 5 மில்லி மீட்டரும், அம்பையில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, ஆய்க்குடி, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை மழை நீடித்தது. அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் அணை தனது முழு கொள்ளளவான 152 அடியை எட்டி இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பி வழிகிறது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பிசான பருவ சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 83 அடியும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 82 அடியும் நீர் இருப்பு உள்ளது. குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் நிரம்பி வழிகின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மழை குறையத்தொடங்கியதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தணிந்தது.

    மெயினருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியது.


    தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மாநகர பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி விட்டது.

    அணைகளில் இருந்து உபரி நீர் மற்றும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் திறக்கப்படுவதால் பிசான பருவ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நேற்று 135.85 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 138.85 அடியானது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 145.44 அடி நீர் இருப்பு உள்ளது. அணைகளுக்கு 4,002.13 கன அடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 1,352 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 86.25 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாகவும் உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அதிகபட்சமாக 39 மில்லி மீட்டர் மழை பெய்தது. கொடுமுடியாறு அணை பகுதியில் 17 மில்லி மீட்டரும், களக்காடு பகுதியில் 12 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    பணகுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆலந்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் காட்டாற்று வெள்ளம் அதிகமாக காணப்படுகிறது.

    வள்ளியூர் பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இன்றும் அதிகாலை முதலே சாரல் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் வள்ளியூர், தெற்கு வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    இதே போல் அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    ராதாபுரம் தாலுகாவில் அதிகபட்ச மழை பெய்துள்ளதால் கடலோர கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் ராதாபுரம் தாலுகா பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வள்ளியூர், பணகுடி, இடிந்தகரை, கூட்டப்புளி, செட்டிகுளம், வடக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நாங்குநேரி, திசையன்விளை தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

    தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவிகளிலும் தண்ணீர் அதிகளவு விழுகிறது.

    அடவிநயினார் அணைப்பகுதியில் அதிகபட்சமாக 32 மில்லி மீட்டரும், தென்காசியில் 10.4 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. ராமநதியில் 80.50 அடியும், கருப்பாநதியில் 68.24 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 124 அடி நீர் இருப்பு உள்ளது.

    மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது.



    பாபநாசம், சேர்வலாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளில் மட்டும் பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்தாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யவில்லை.

    கடந்த மாதம் ஒரே நாளில் பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் 27 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணை, சேர்வலாறு அணை ஆகியவை ஒரேநாளில் 23 அடி நீர்மட்டம் உயர்ந்தது. இதன் காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் மட்டும் நிரம்பும் நிலையை அடைந்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு அணையின் முழுகொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடியாகும். இங்கு தற்போது 2,630 மில்லியன் கனஅடி தண்ணீரே உள்ளது.

    அதாவது 50 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 86 அடி நீர்மட்டம் உள்ளது. 90 அடிக்கு பிறகே மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது மணிமுத்தாறு அணைக்கு மிகவும் குறைந்த அளவாக விநாடிக்கு 62 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

    நெல்லை மாவட்டத்தின் சிறிய அணையான வடக்கு பச்சையாறு அணையின் உச்சநீர்மட்டம் 50 அடியாகும். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நீர்மட்டம் 22 அடியாக உள்ளது. ஆனால் அதன்பிறகு மழை இல்லாததால் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் அணை நீர்மட்டம் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது.

    இதுபோல நம்பியாறு அணையும், உச்சநீர்மட்டம் 22.96 அடியாகும். அங்கு 11.64 அடியே நீர்மட்டம் உள்ளது. அந்த அணைக்கும் தற்போது பெய்த மழையினால் தண்ணீர் வரத்து இல்லை. இன்றுதான் மிகவும் குறைந்த அளவு தண்ணீர் அந்த அணைக்கு செல்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் 6 அணைகள் உள்ளன. இதில் மேற்கண்ட 3 அணைகளில் விவசாயத்திற்கு தேவையான போதிய தண்ணீர் இன்னும் வரவில்லை. பாபநாசம், சேர்வலாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளில் மட்டும் பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்-32, கடனாநதி-7, பாபநாசம்-6, சிவகிரி-6, கொடுமுடியாறு-5, ராதாபுரம்-4, கருப் பாநதி-3, தென்காசி-1, சாத்தான்குளம்-3.2.

    பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அணையில் உள்ள சகதியை அகற்றி தூர்வார வேண்டும் என்று சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    சிங்கை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்த போதிலும் இந்த ஆண்டின் கோடை தாக்குதல் மற்றும் கோடை மழை பெய்யாததால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டு போய்விட்டன. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை. அதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. இதில் பிரதான அணையான பாபநாசம் அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 143 அடி ஆகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 9 அடியாக குறைந்தது. எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வறட்சியின் கோரப்பிடியில் பாபநாசம் அணை சிக்கி தவித்து வருகிறது.

    பாபநாசம் அணை

    அணையின் தற்போதைய நீர்மட்டம் 9 அடியாக குறைந்துள்ள போதிலும் அணை இதுநாள் வரைக்கும் தூர்வாரப்படாததால் சில அடி உயரத்துக்கு சகதி நிரம்பி கிடக்கிறது. கொளுத்தும் வெயிலால் அணையில் தேங்கி கிடக்கும் தண்ணீருக்குள் ஏற்பட்டிருக்கும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மீன்கள் கொத்து கொத்தாக பரிதாபமாக செத்து மிதக்கின்றன.

    அணைகளில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாததோடு இருக்கும் தண்ணீரும் வெகுவாக மாசடைந்து மீன்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இதில் உள்ள மீன்கள் நாள்தோறும் சிறிதுசிறிதாக இறக்கத் தொடங்கின. இவ்வாறு இறந்த ஆயிரக்கணக்கான மீன்கள் அணையின் கரையோரம் மிதப்பதால் அவை அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் அணையில் இருந்து திறந்துவிடப்படும் சிறிதளவு தண்ணீரும் துர்நாற்றத்துடன் செல்வதால் தாமிரபரணியில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக மாறும் நிலை உள்ளது. செத்து மிதக்கும் மீன்களை அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே இந்த மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அணையில் உள்ள சகதியை அகற்றி தூர்வார வேண்டும்.

    இதன் மூலம் தண்ணீர் கொள்ளளவு அதிகரிப்பதோடு அணையில் உள்ள நீர் சுகாதாரமானதாக மாறும் என்று சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். அதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 47.31 அடியாக உள்ளது.

    மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாகும். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.48 அடியாக உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நகர்புறங்களில் மழை பெய்தாலும், பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 12.80 அடியாக மிகவும் குறைந்த நிலையில் உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கோடை மழை பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பெய்து பலத்த சேதம் ஏற்படுத்தியது. கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது முதல் மழை இல்லாமல் வெயில் 105 டிகிரி வரை கொளுத்தியது. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசியது.

    இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் வடபகுதியான சங்கரன்கோவில் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. அப்போது இடி-மின்னலும் முழங்கியது. சங்கரன் கோவிலில் மட்டும் 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 8 மில்லி மீட்டரும், சிவகிரியில் 7 மில்லி மீட்டரும், கருப்பாநதி பகுதியில் 4 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    சங்கரன்கோவிலில் இடி மின்னலுடன் மழை பெய்தபோது, மனோ கல்லூரியில் தேர்வு எழுதி முடித்த பி.ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் மகாலட்சுமி (19). பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு மாணவி அவசரம் அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அந்த பகுதியில் சக்திவாய்ந்த இடி-மின்னல் தாக்கியது. இதில் கட்டிடத்தின் ஒரு சுவர் இடிந்து மாணவி மீது விழுந்தது. மேலும் மாணவி மகாலட்சுமி மீதும் மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மகாலட்சுமி பலியானார்.

    இன்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. பல இடங்களில் இன்று பகல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நகர்புறங்களில் மழை பெய்தாலும், பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 12.80 அடியாக மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 70.07 அடியாகவும், சேர்வலாறு அணையில் 47.51 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.
    144 அடி உச்ச நீர்மட்டம் உள்ள பாபநாசம் அணையில் இன்று மிகவும் குறைந்த அளவான 38 அடியே இருந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு மூலம் தான் பெருவாரியான விவசாயம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகப்படியாக திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறையத்தொடங்கியது. 144 அடி உச்ச நீர்மட்டம் உள்ள பாபநாசம் அணையில் இன்று மிகவும் குறைந்த அளவான 38 அடியே இருந்தது.

    இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 212.25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 50.82 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது. அங்கு 70 சதவீத நீர் இருப்பு உள்ளதால் அதன் மூலம் இந்த கோடை காலத்தை சமாளித்து விடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கடந்த ஆண்டு சேர்வலாறு அணை பழுது பார்க்கும் பணி நடந்ததால் பாபநாசம் அணையில் நீர் திறக்கப்பட்டு வற்ற வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



    பாபநாசம் அணையில் நேற்று 110.70 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 6 அடி உயர்ந்து இன்று காலை 116.70 அடியாக உள்ளது. #PapanasamDam
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. நகர்புறங்களில் மேகமூட்டமாக காணப்பட்டது.

    பாபநாசம் அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், சிவகிரியில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,801 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 110.70 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 6 அடி உயர்ந்து இன்று காலை 116.70 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 127.43 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 129.69 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 93.80 அடியாக இருந்தது. இன்று காலை ஒரு அடி உயர்ந்து 94.95 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,088 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதுபோல மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி -74.20, ராமநதி-68.75, கருப்பாநதி-69.23, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-23, நம்பியாறு-22.63, கொடுமுடியாறு-40, அடவிநயினார்-108.75 என நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இன்று அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தண்ணீர் நன்றாக விழுந்ததால் அனைத்து அருவிகளிலும் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று சில இடங்களில் சாரல் மழை பெய்தது. கடற்கரையோர பகுதிகளில் முழு நேரமும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் உப்பள பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. #PapanasamDam
    பலத்த மழை மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாபநாசம் மலைப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சிங்கை:

    பாபநாசம் மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று பாபநாசம் அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளம் காரணமாக தாமிரபரணி கரையோர மண்டபங்கள் மூழ்கியுள்ளன.

    பாபநாசம் மலைப்பகுதியில் அணைக்கு செல்லும் பாதையில் பழமையான பாலம் 1992-ம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த பகுதியில் தற்போது புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே காரையார் கோவில் மற்றும் அணைபகுதிக்கு செல்ல 1992-ம் ஆண்டிலேயே தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.

    தற்போது இந்த பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியே பொதுமக்கள் மற்றும் சுற்றுல பயணிகள், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அகஸ்தியர் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாபநாசம் செக்போஸ்ட் இன்று காலை மூடப்பட்டது. இதன் காரணமாக மலையில் உள்ள மின்வாரிய ஊழியர்கள், காணிக்குடியிருப்பு கிராம மக்கள் நகருக்குள் வர முடியாமல் தவித்துள்ளனர்.
    நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையினால் மாவட்டத்தில் பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நிரம்பியது. #Papanasamdam
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே நெல்லை மாவட் டத்தில் கடந்த மாதம் பெய்த மழையினால் 6 அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து கார்சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஒடிசா வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஏற்கனவே நிரம்பிய கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவி நயினார் ஆகிய 6 அணைகள் மீண்டும் நிரம்பியுள்ளன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து விடிய விடிய பெய்தது. பகல் முழுவதும் கொட்டி தீர்த்த மழை நேற்றும் தொடர்ந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளில் இருந்து உபரி நீர் கூடுதலாக ஆறுகளில் திறந்து விடப்பட்டன. இதனால் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து பெய்த மழையினால் மாவட்டத்தில் பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நிரம்பியது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 137.80 அடியாக இருந்தது. இன்று பாபநாசம் அணை 141 அடியை எட்டி நிரம்பியது. வினாடிக்கு 12 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பாதுகாப்பு கருதி கீழ் அணையில் இருந்து இன்று காலை 7 ஆயிரத்து 365 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சேர்வலாறு அணை பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் 146.52 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இன்று காலை வரை அங்கு 57 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 910 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை.

    இதனால் நேற்று 75 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 79.6 அடியாக உள்ளது. இது போல கடனாநதி-83, ராம நதி-82.50, கருப்பாநதி-71.20, குண்டாறு-36.10, கொடு முடியாறு-52.50, அடவி நயினார்-132.22 என்று உச்ச நீர்மட்டத்தை அடைந்துள்ளது. தற்போது இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அனைத்தும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    இதுவரை நம்பியாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைக்கு தண்ணீர்வரத்து இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று நம்பியாறு அணை பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் நம்பியாறு அணைக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. வினாடிக்கு 528 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் சிறிய அணையான நம்பியாறு அணை ஒரே நாளில் 9 அடி உயர்ந்து இன்று காலை 20.57 அடியாக உள்ளது.

    வடக்கு பச்சையாறு அணை பகுதியில் மழை இல்லாத தால் அந்த அணையின் நீர்மட்டம் உயரவில்லை.

    மலை பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பாபநாசம் அணை பகுதிகளில் இன்று காலை வரை 58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணை பகுதியில் 121 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நகர்புறங்களில் செங்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 89 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோர மண்டபங்கள் மூழ்கியுள்ளன

    தொடர் மழையினால் தாமிரபரணி ஆற்றில் இன்று 2-வது நாளாகவும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அகஸ்தியர் அருவி மற்றும் பாபநாசம் தாமிரபரணி ஆறு பகுதியில் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    அதுபோல அம்பை, சேரன்மகாதேவி, பாளை, நெல்லை பகுதியிலும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், ஆற்றுக்குள் இறங்கி யாரும் குளிக்கக் கூடாது என்றும் அரசு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    நெல்லை குறுக்குத்துறை முருகன்கோவில் முழுவதும் தண்ணீரில் மூழ்கி மேல்பகுதி மட்டும் தெரிகிறது. தைப்பூச மண்டபங்களும் நீரில் மூழ்கி காட்சியளிக்கிறது. நெல்லை சந்திப்பு ஆற்றுப்பாலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கட்டுமான பகுதிகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.

    ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தண்ணீர் கடலுக்கு செல்கிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய் குளங்களுக்கு இன்னும் முழு அளவு தண்ணீர் செல்லவில்லை என்றும், அந்த பகுதியில் விவசாய பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே கடலுக்கு செல்லும் வெள்ள நீரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய் பாசனத்திற்கு முழு அளவு திருப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டாறு-121, அடவி நயினார்-110, செங்கோட்டை -89, பாபநாசம்-58, மணிமுத்தாறு-57, சேர்வலாறு-50, தென்காசி-35, கடனாநதி- 32, கருப்பாநதி- 30, ராதாபுரம்-24, அம்பை- 22.6, சங்கரன்கோவில்-15, கொடுமுடியாறு-15, ஆய்க்குடி- 13.2, ராமநதி-12, நாங்குநேரி- 8, நம்பியாறு- 6, நெல்லை-5.5, பாளை-5.4, சிவகிரி-4, சேரன்மகாதேவி- 3.2. #Papanasamdam
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்துவருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று காலை 124 அடியாக உள்ளது. #Papanasamdam
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்து வருகிறது. குண்டாறு, அடவிநயினார் அணை பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தினசரி மழை பெய்து வருகிறது.

    பாபநாசம் மலைப் பகுதியில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்று காலை வரை பெய்த மழை அளவு 86 மில்லி மீட்டர் ஆகும். அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 805 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    தண்ணீர் அதிகளவில் வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 119 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று காலை 124 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை பகுதியில் இன்று காலை வரை 59 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று சேர்வலாறு அணை நீர்மட்டம் 138.38 அடியாக இருந்தது. இன்று அது மேலும் 2 அடி உயர்ந்து 140.88 அடியாக உயர்ந்துள்ளது.

    மணிமுத்தாறு அணை பகுதியில் லேசான மழையே பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 926 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 55 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 71.75 அடியாக உள்ளது.

    இதேபோல் கடனாநதி அணை 82.50 அடியாகவும், ராமநதி அணை 80 அடியாகவும், குண்டாறு அணை 36.10 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் 4 அடி அதிகரித்து 132.22 அடியாக உயர்ந்து நிரம்பி வழிகிறது. கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 70.21 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. தற்போது விவசாயத்திற்காக 9 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்- 86, சேர்வலாறு-59, கொடு முடியாறு-55, கருப்பாநதி-43, அடவிநயினார்-35, கடனாநதி-33, குண்டாறு-20, தென்காசி-17, ராதாபுரம்-15, ஆய்க்குடி-10, செங்கோட்டை -9, ராமநதி-5, மணிமுத்தாறு-1.4 #Papanasamdam

    ×