search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani Temple"

    • அரசு தலைமை கொறடா கோவி செழியன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் இன்று பழனி மலைக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், பிரசாத ஸ்டால், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்

    பழனி:
    தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுடமான கோவி செழியன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் இன்று பழனி மலைக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், பிரசாத ஸ்டால், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பா, கார்த்திகேயன், பாபு, பொன்னுச்சாமி, முத்துராஜா, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் சட்டமன்ற மனுக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    • பழனி மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் ‘இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை மீண்டும் வைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
    • கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    பழனி:

    தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிற மதத்தினர் வருவதை தடுக்க 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் மின்இழுவை ரெயில்நிலைய வாயில் பகுதியில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனர் அகற்றப்பட்டது.

    இதற்கிடையே சமீபத்தில் மாற்று மதத்தை சேர்ந்த பெண்கள் சிலர் மின்இழுவை ரெயில் மூலம் பழனி மலைக்கோவிலுக்கு செல்ல முயன்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பழனி மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை மீண்டும் வைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    மேலும் பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்ற பக்தர், பழனி முருகன் கோவிலில் 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை வைக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பழனி முருகன் கோவிலில் மீண்டும் பேனர் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயில்நிலையம் முன்பு 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்ற வாசகம் கொண்ட பேனர் மீண்டும் வைக்கப்பட்டது.

    கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 முதல் 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
    • கோவில்களில் முடி காணிக்கை செலுத்து வோரின் புகைப்படத்துடன் கூடிய இலவச டிக்கெட் வழங்கும் முறை நடைமுறை ப்படுத்த ப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 7 இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது முக்கிய நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.

    திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 முதல் 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகி ன்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முடி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பக்தர்களுக்கு கியூ ஆர் கோடுடன் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. அதனை காண்பித்து முடி காணிக்கை செலுத்தி வந்தனர். இந்நிலையில் முடி காணிக்கை செலுத்த டிக்கெட் வாங்கும்போது பக்தரின் புகைப்படம், முடி இறக்கும் ஊழியரின் பெயர், அவரது பதிவு எண், இடத்தின்பெயர் , நாள், நேரம் குறிப்பிட்டு கியூஆர் கோடுடன் டிக்கெட் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்த ப்பட்டு ள்ளது.

    முடி காணிக்கை செலுத்திய பிறகு மொட்டை தலையுடன் பக்தரை புகைப்படம் எடுத்து அதில் முடி இறக்கும்செய்த தொழிலாளியின் புகைப்பட த்துடன் மற்றொரு டிக்கெட் வழங்கப்படுகிறது. அப்போது அதிலுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து கோவில் பணியாளர்கள், பக்தர்களை வெளியே அனுப்புகின்றனர்.

    மொட்டை அடிக்கும் பக்தர்கள் மட்டுமின்றி பூ முடி காணிக்கை செலுத்தும் பெண்பக்தர்களின் புகைப்படமும் எடுக்கப்படு கிறது. இந்த புதிய நடை முறையால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் அறநிலைய த்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முடி காணிக்கை செலுத்து வோரின் புகைப்படத்துடன் கூடிய இலவச டிக்கெட் வழங்கும் முறை நடைமுறை ப்படுத்த ப்பட்டுள்ளது.

    முடி காணிக்கை செலுத்தவும், முடி இறக்கும் செய்யும் ஊழியர்களுக்கும் கட்டணம் வழங்க தேவை யில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதனை யும் மீறி பக்தர்களிடம் ஊழியர்கள் பணம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. தேவஸ்தானம் சார்பில் மொட்டையடிக்கும் பெண்களுக்கு மூன்று ரூ.100 தரிசன டிக்கெட்டுகளுக்கான பாஸ் வழங்கப்படுகிறது. சிலர் இவவச டிக்கெட்டு களை பெற்று க்கொண்டு வெளியூர் பக்தர்களை வெளியிடங்களில் வைத்து மொட்டையடித்து பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.

    இதுபோன்ற முறைகேடு களை தவிர்க்கும் வகையில் தினமும் எத்தனை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்து கிறார்கள் என்பதை கணக்கிடவும், முடி இறக்கம் செய்யும் பக்தர்களிடம் பணம் கேட்கும் ஊழிய ர்களை அடையாளம் காண வும், இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்றனர்.

    • மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.
    • முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணிசாமி கோவில் செவ்வாய்க்கு உரிய அதிபதியாக விளங்கி வருகிறார். இங்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி இன்று நடந்த பூஜையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா கலந்து கொண்டார். இதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் பழனிக்கு வந்த அவர் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்தார்.

    அவருடன் பழனி எம்.எல்.ஏ செந்தில்குமாரின் மனைவி மெர்சி செந்தில்குமார் வந்தார். மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பூஜையில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று மனமுருக வழிபட்டார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. துர்கா ஸ்டாலின் பழனி கோவிலுக்கு வந்ததை அறிந்ததும் பக்தர்கள் அவருடன் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்தனர். மேலும் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

    • பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
    • முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பழனி:

    பழனி கோவிலில் சிறுவர்கள், வயதான முதியவர்கள் எளிதாகவும், விரைவாகவும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கிருஷ்ணகிரியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் பழனிகோவிலுக்கு சாமிகும்பிட வந்தார். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கீழே இறங்குவதற்காக மின்இழுவை ரெயிலில் ஏற முயன்றபோது அவரை ஊழியர்கள் ஏற்ற மறுத்துள்ளனர்.

    தன்னால் படிப்பாதையில் நடந்து செல்ல முடியாது என அவர் கெஞ்சி கேட்டும் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அந்த முதியவர் படிப்பாதையில் தனது 2 கைகளை ஊன்றியபடியே தவழ்ந்து இறங்கி வந்தார்.

    இதை அங்கிருந்த பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். பழனி கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காகத்தான் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகிறது. பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.

    முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள் என யாரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுமதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல முயற்சித்தனர்.
    • இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் படிப்பாதையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், படிப்பாதையில் சூடம் ஏற்றக் கூடாது, கோவில் வளாகத்தில் டிரம்செட் அடிக்க கூடாது, கைலி அணிந்து வர கூடாது போன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுமதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரெயில் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களை கோவில் பணியாளர்கள் திருப்பி அனுப்பினர். இதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    • பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
    • கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் பகவதிபடி பகுதியை சேர்ந்தவர் சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனி கோவிலுக்கு வந்தார். பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.

    பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர். உண்டியல் சட்டத்தின்படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. ஆனால் பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராமம் எடையுள்ள புதிய தங்கசங்கிலியை வழங்கினார்.

    கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

    • வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும்.
    • தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனிமுருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இதனால் உள்ளூர் பக்தர்கள் பெரும்பாலும் கூட்டம் இல்லாத நாட்களில் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    குறிப்பாக செவ்வாய்க்கு அதிபதியாக விளங்கும் முருகப்பெருமானை உள்ளூர் பக்தர்கள் செவ்வாய்கிழமைகளில் அதிகளவு வந்து தரிசனம் செய்கின்றனர். அதன்படி நேற்று உள்ளூர் பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு வந்தபோது கோவில் கண்காணிப்பாளர் அவர்களை தரக்குறைவாக பேசி சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

    எனவே அனைவருக்கும் பொதுவான கோவிலில் சர்வாதிகாரி போல செயல்படும் கோவில் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அடிவாரம் சன்னதி வீதியில் வர்த்தகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதுகுறித்து வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார். இதனால் அடிவாரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் திருத்தணிகை.
    • அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    திருப்பரங்குன்றம்:

    தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

    திருச்செந்தூர்:

    அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

    பழனி:

    ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக்கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

    சுவாமிமலை:

    தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

    திருத்தணி:

    சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

    பழமுதிர்ச்சோலை:

    தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    • பழனியில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    பழனி :

    பழனி பெரியநாயகி_யம்மன் கோவிலில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாக பெரு_விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி தங்கமயில், வெள்ளியானை, வெள்ளி காமதேனு, சப்பரம் தங்கக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா எழுந்தருளினார்.

    கடந்த 11 ஆம்தேதி இரவு திருக்கல்யாண வைபவமும், 12 ஆம் தேதி மாலை தேரோட்டமும் நடைபெற்றது. விழா நாட்களில் கோவில் வளா_கத்தில் கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இளநீர், மயில், பன்னீர் ஆகிய காவடிகள் எடுத்து மலைக்கு வந்து மூலவர் தண்டாயுதபாணி சாமியை வழிபட்டனர்.

    நேற்று கொடியேற்றுப்பட்டு விழா நிறைவு பெற்றது. முன்னதாக காலையில் ஊடல் வைபவம் நடைபெற்றது. முத்துக்குமாரசாமி வள்ளியம் மகனுடன் திருமணம் செய்ததை அறிந்த தெய்வானை அம்பாள் கோபம் கொண்டு கோயிலுக்கு வந்து நடையை சாத்திக் கொண்டார்.

    பின்பு வள்ளியம்மை_யுடன் வெளியே இருந்து முத்துகுமாரசாமி, நாரதர் வீரபாகுவை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி சமாதானப்படுத்தினார். அதற்கான துதிபாடல்களை நாகராஜன் பாடினார்.

    சாமாதானமடைந்த தெய்வானையம்மன் கோவிலை திறந்து சாமிக்கு வழிவிட சுவாமி கோவில் வளாகத்திற்குள் நுழைந்து வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி உலா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, பேஷ்கார் நாகராஜன், மணியம்சேகர் பரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாதம் தோறும் சராசரியாக ரூ.2 கோடிக்கும் மேல் உண்டியல் பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கிடைக்கின்றன.
    • ஆண் பணியாளர்கள் வேஷ்டி சட்டை அணிந்து வர வேண்டும். அனைவரும் கடிகாரம், மோதிரம், காப்பு, வளையல் போன்ற நகைகளை அணிந்து வரக்கூடாது.

    பழனி:

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது திருட்டு சம்பவங்களை தடுக்க கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை உண்டியல்களில் செலுத்துகின்றனர்.

    பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் உண்டியல் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. மாதம் தோறும் சராசரியாக ரூ.2 கோடிக்கும் மேல் உண்டியல் பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கிடைக்கின்றன. காணிக்கை எண்ணும் பணியில் பழனி கோவில் பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் ஈடுபடுகின்றனர்.

    மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் சமயங்களில் அவ்வப்போது சிலர் அதனை திருடும் சம்பவம் நடந்து வருகிறது.

    இவை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோவில் நிர்வாகம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    வைகாசி விசாகத் திருவிழா நிறைவடைந்து இன்று பழனி மலைக்கோவிலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு வரும் பணியாளர்கள் காலை 6.15 மணிக்கும் மண்டபத்துக்குள் வந்து வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். வராத பணியாளர்களுக்கு விடுப்பு கருதப்பட்டு ஊதியம் பிடிக்கப்படும்.

    ஆண் பணியாளர்கள் வேஷ்டி சட்டை அணிந்து வர வேண்டும். அனைவரும் கடிகாரம், மோதிரம், காப்பு, வளையல் போன்ற நகைகளை அணிந்து வரக்கூடாது.

    காணிக்கை எண்ணும் பணி நிறைவு பெற்ற பின்பு வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு செல்ல வேண்டும். மதிய உணவுக்கு செல்லும் போது கழிப்பறைக்கு சென்று வரும் போதும் வருகைப்பதிவேட்டில் நேரத்தைக் குறிப்பிட்டு கையொப்பமிட வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

    அதன்படி இன்று காணிக்கை எண்ணும் பணியில் கலந்து கொண்ட பணியாளர்கள் அதனை கடைபிடித்து பங்கேற்றனர்.

    கோடை விடுமுறை மற்றும் வாரவிடுமுறை என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கிரிவீதி, அடிவாரம், மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.

    மேலும் படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அரோகரா கோஷங்களுடன் பக்தர்கள் மலையேறினர். வின்ச்நிலையம் மற்றும் ரோப்கார் உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நகர்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கோடை விடுமுறை மற்றும் வாரவிடுமுறை என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    ×