search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறங்காவலர் குழு"

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தகவல்
    • சுசீந்திரம் கோவிலில் ரூ.2 கோடியே 33 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். குமரி மாவட்ட திருக்கோவில் களின் மராமத்து பிரிவு பொறியாளர்கள் ராஜ் குமார், அய்யப்பன், திருக்கோவில்களின் முன்னாள் கண்காணிப்பா ளர் ஜீவானந்தம், குமரி மாவட்ட திருக்கோவில் களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பிறகு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவராக பொறுப் பேற்ற பிறகு இதுவரை 260 கோவில்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். பல இடங்களில் ஆக்கிரமிப் பாளர்கள் கோவில் சொத்துக்களை ஆக்கிர மித்து உள்ளனர். இவர்கள் தாமாக முன்வந்து கோவில் நிர்வா கத்திடம் ஆக்கிர மிப்பு நிலத்தை ஒப்படைக்க வேண் டும். இல்லையென் றால் நிலங்கள் அளவி டப்பட்டு மீட்டெடுக்கப் படும். சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் ரூ.2 கோடியே 33 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

    இந்த கோவிலில் 4 பிரகாரங்களிலும் புதிய கருங்கல் தளம் அமைத்தல், கோவில் தூய்மைப்படுத்து தல், மண்டபங்கள் சீர மைப்பு, மின் இணைப்புகள் சீரமைப்பு, கோவில் விமானங்கள் சீரமைப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட் டுள்ளது. மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் பத்மநாப சுவாமி கோவில், திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், பறக்கை மதுசூதன பெரு மாள் சுவாமி கோவில், திப்பரமலை கரியமா ணிக்கத் தாழ்வார் கோவில் மற்றும் பன்னிப்பாகம் மகாதேவர் கோவில் ஆகிய கோவில்களி லும் விரைவில் கும்பாபி ஷேகம் நடைபெறும்.

    இந்த ஆண்டு ரூ.7 கோடி செலவில் 100 திருக்கோ வில்களுக்கும், அடுத்த ஆண்டு ரூ.10 கோடி செலவில் 100 திருக்கோ வில்களுக்கும் கும்பாபிஷே கம் நடத்தப்ப டும். மேலும் குளம் சீர மைப்பு பணியில் சுசீந்திரம் கோவில் தெப் பக்குளம், பாத்திர குளம், திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோவில் தெப்பக்குளம், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்கு ளம், கன்னியாகுமரி பா பநாச தீர்த்த குளம், பீமநகரி கோவில் தெப்பகுளம் ஆகிய குளங்கள் விரைவில் முழுமையாக சீரமைக்கப் படும்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 27 தேர்களில் 8 தேர்களுக்கு பாதுகாப்பு கூண்டுகள் அமைக்கப்பட் டுள்ளது. மேலும் மீதமுள்ள 19 தேர்களில் 16 தேர்களுக்கான பாதுகாப்பு கூண்டுகள் அமைக்க ஆர்டர் வழங்கப்பட்டுள் ளது.

    மேலும் கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்து வந்த பிறகு ஆண்டுதோறும் அரசால் வழங்கப்படும் மானிய தொகை கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு ரூ.3 கோடியாக இருந்தது. இந்த மானியத்தொகை தற்போதைய அரசின் தொடக்கத்தில் ரூ.6 கோடியாகவும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.8 கோடியாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடிமர பிரதிஷ்டை அரசின் வரை பட அனுமதி, தந்திரி மற்றும் ஸ்தபதி கருத்து களின் அடிப்படையிலும் செய்யப் பட்டுள்ளது.

    வருகிற நவம்பர் 24-ந்தேதி கொடிமரம் நிறுவப் பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படு கிறது. கோவில்களில் நடக் கும் திருப்பணிகளின் வேகத்தை அதிகரிக்க அதிகமான ஒப்பந்த தாரர்கள் நியமிக்கப்படு வார்கள்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • பதவியேற்பு விழாவில் மேயர் மகேஷ் பங்கேற்பு
    • பிரபா ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    உறுப்பினராக இருளப்பபுரம் சிவன் கோவில் தெற்குச்சாலையைச் சேர்ந்த பிரபா ராமகிருஷ்ணன் சீதப்பாலை சேர்ந்த ராஜேஷ் இடைகோட்டை சேர்ந்த ஜோதிஷ்குமார் தோவாளை சண்முகா நகரை சேர்ந்த சுந்தரி கொல்லங்கோட்டை சேர்ந்த துளசிதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி யேற்பு விழா இன்று நடந்தது. சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலகத்தில் வைத்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன்ஆகியோர் முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரபா ராமகிருஷ்ணன், ராஜேஷ், சுந்தரி, ஜோதி ஷ்குமார்,துளசிதரன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

    இதை தொடர்ந்து அறங்கா வலர் குழு தலைவர் தேர்வு நடந்தது. அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பதவி ஏற்று கொண்டார்.நிகழ்ச்சியில் திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் பசலியான், மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, செல்வன், ,திமுகஅணி அமைப்பாளர் அகஸ்தீசன், இ. என்.சங்கர், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்று கொண்ட பிரபாராம கிருஷ்ணன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ளார்.

    • பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
    • கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் பகவதிபடி பகுதியை சேர்ந்தவர் சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனி கோவிலுக்கு வந்தார். பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.

    பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர். உண்டியல் சட்டத்தின்படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. ஆனால் பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராமம் எடையுள்ள புதிய தங்கசங்கிலியை வழங்கினார்.

    கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

    • கோவிலில் ரூ. 300 கோடி செலவில் பக்தர்களுக்கான மெகா திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் சுமார் ரூ. 300 கோடி செலவில் பக்தர்களுக்கான மெகா திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    அடிப்படை வசதிகள்

    இந்நிலையில் தற்போது பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், மேலும் கந்தசஷ்டி விழாவில் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து நேற்று கோவில் பணியாளர்களிடம் கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவில் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் இரா. அருள்முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி, அலுவலக கண்காணிப்பாளர் சீதாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுவாமி தரிசனம்

    கூட்டத்தில் பங்கேற்ற கோவில் பணியாளர்கள், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதியை மேம்படுத்துவது குறித்தும், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதை குறைப்பதற்காக வரிசைப்பாதையில் மாற்றம் செய்திட வேண்டும் எனவும் கூறினர்.

    பின்னர் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் கூறுகையில், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    ×