என் மலர்
நீங்கள் தேடியது "திருக்கோவில்"
- பதவியேற்பு விழாவில் மேயர் மகேஷ் பங்கேற்பு
- பிரபா ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உறுப்பினராக இருளப்பபுரம் சிவன் கோவில் தெற்குச்சாலையைச் சேர்ந்த பிரபா ராமகிருஷ்ணன் சீதப்பாலை சேர்ந்த ராஜேஷ் இடைகோட்டை சேர்ந்த ஜோதிஷ்குமார் தோவாளை சண்முகா நகரை சேர்ந்த சுந்தரி கொல்லங்கோட்டை சேர்ந்த துளசிதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி யேற்பு விழா இன்று நடந்தது. சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலகத்தில் வைத்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன்ஆகியோர் முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரபா ராமகிருஷ்ணன், ராஜேஷ், சுந்தரி, ஜோதி ஷ்குமார்,துளசிதரன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
இதை தொடர்ந்து அறங்கா வலர் குழு தலைவர் தேர்வு நடந்தது. அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பதவி ஏற்று கொண்டார்.நிகழ்ச்சியில் திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் பசலியான், மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, செல்வன், ,திமுகஅணி அமைப்பாளர் அகஸ்தீசன், இ. என்.சங்கர், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்று கொண்ட பிரபாராம கிருஷ்ணன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ளார்.
- ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
- தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.
* திருவரங்கத்தில் தேர்த் திருவிழாவின் போது மான் தோல் பையில் நீரைச் சுமந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு 'தண்ணீர் சேவை' என்று பெயர். இரவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு செய்யும் சேவைக்கு 'பந்த சேவை' என்று பெயர்.
* திருவள்ளூரை அடுத்துள்ளது, சோளிங்கர் என்ற திருத்தலம். இங்கு நரசிம்மர் யோக நிலையில் காட்சி தரும் ஆலயம் மலை மேல் அமைந்துள்ளது. சப்த ரிஷிகள் அனைவரும் மோட்சம் வேண்டி, நரசிம்மரை யோக நிலையில் காண விரும்பினர். அதன்படி நரசிம்ம பெருமாள், யோக நிலையில் மலை மீது அமர்ந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்தது, கடிகைப் (24 நிமிடங்கள்) பொழுது என்பதால் இவ்வூர் 'கடிகாசலம்' என்றும் வழங்கப்படுகிறது.
* கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.

* திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைத்தால் சத்தம் எழும். அது இறைவனின் தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக இங்கே தேங்காய் உடைக்கப்படுவதில்லை. தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.
* திருக்கழுக்குன்றம், திருப்பைஞ்ஞீலி ஆகிய சிவ தலங்களில் வாழை மரம்தான் தல விருட்சம். அதே போல் வைணவத் திருப்பதிகளில் திருக்கரம்பனூர் மற்றும் திருவெள்ளியங்குடி ஆகிய கோவில்களிலும் வாழை மரம் தல விருட்சமாக அமையப்பெற்றுள்ளது.
* கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தட்சிணாயன வாசல், உத்ராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. திருவெள்ளறை தலத்தில் தட்சிணாயனம், உத்திராயனம் என்று இரண்டு படிகள் அமைந்துள்ளன.
* தஞ்சாவூர் தெற்கு வீதியில் கலியுக வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நவக்கிரகங்களின் சன்னிதி இடம் பெற்றுள்ளது. பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் இடம் பெறுவது மிகவும் அபூர்வம்.
- 2 கோவில்களில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும்.
- 2023-24-ம் ஆண்டு நிதியில் இருந்து 8 கோடி ரூபாய் நிதியில் இருந்து 8 திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவு.
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சட்ட சபையில் கேள்வி நேரத்தின்போது, ஆலங்குளம் தொகுதி நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பூலாங்குளம் காளியம்மன் கோவில் மற்றும் பாப்பாக்குடி திருக்கடுக்கை முன்றீஸ்வரர் கோவில் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, "அம்மனுக்கு ஒன்று, ஈஸ்வரனுக்கு ஒன்று, முருகனுக்கு ஒன்று இந்த மூன்று கோவில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்படும். அவர் கேட்ட சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் முடிவு பெற்றது. மற்ற 2 கோவில்களில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என பதில் அளித்தார்.
உச்சி மாகாளியம்மன் கோவிலில் சிலை பாதுகாப்பையும் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கேட்ட திருமனீஸ்வரர் கோவிலில் 1942-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தற்போது, வல்லுனர் குழு தொழில்நுட்ப குழு அனுமதி செய்யப்பட்டு 40 லட்ச ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். நீங்கள் கேட்ட வெங்கடாஜலபதி கோவில் என்பது 1000 ஆண்டுகளுக்கு மேலான கோவிலுக்கு அரசு விடுத்த 2023-24-ம் ஆண்டு நிதியில் இருந்து 8 கோடி ரூபாய் நிதியில் இருந்து 8 திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கும்பாபிஷேகத்திற்கு உண்டான பணிகள் நடைபெறும் என பதிலளித்தார்.
மனோஜ் பாண்டியன் தொடர்ந்து பேசியதாவது, கோவிலில் பயன்படுத்த முடியாத தங்க ஆபரணங்களை உருக்கி அதை தங்க கட்டிகளாக மாற்றி அதை டெபாசிட் செய்வதற்கான திட்டங்கள் அரசிடம் உள்ள தா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கூறியதாவது:-
தங்க நகைகளை உருக்குவதற்கான அரசாணை 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பக்தர்களிடம் இருந்து வரும் பயன்பாட்டு இல்லாத தங்க நகைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்தார். 3 நீதிபதிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த திட்டம் அறிவிக்கப் பட்டவுடன் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அனைத்து கோவில் வாசல்களில் அம்மன் சிலையை அமைத்து அதில் நகைகளை பறிப்பது போல் கார்ட்டூன் வைத்தார்கள்.
நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். அதைவிடாதே பிடி என்றார். அதை பிடித்ததின் காரண மாக இன்று 1,100 கிலோ அளவிற்கு வங்கியில் வைப்பு நிதியாக தங்கம் வைக்கப்பட்டு ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் கோவிலுக்கு வருமானமாக வருகிறது.
மேலும் இந்த திட்டம் தொடரும். 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி இதுவரை யில் கோவில்களில் வைக்கப் பட்டுள்ள மொத்த அளவு 610 கிலோ. ஆனால் இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் வைப்பு நிதியாக வைக்கப் பட்டுள்ள தங்கத்தின் அளவு 1,110 கிலோ என பதில் அளித்தார்.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- இரவு 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 2 மணிக்கு திருக்கொடியிறக்கமும் அதனைத் தொடர்ந்து இனிப்பு வழங்குதல்
கன்னியாகுமரி :
நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா கடந்த 17-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
விழா நாட்களில் பணி விடையும், உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், நாதஸ்வர கச்சேரியும், அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் நிகழ்ச்சியும், அய்யாவின் ஆன்மீக அருளிசை கச்சேரியும், அய்யா குதிரை வாகனத்தில் ்டையாடித்தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தல் நிகழ்ச்சியும், சமூக நாடகமும், திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11 -ம் திருவிழாவான நேற்று முன்தினம் 27-ம் தேதி திங்கள் கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், நண்பகல் 1 மணிக்கு பணிவிடையும், மாலை 3 மணிக்கு யானை முன்னே செல்ல மயிலாட்டம், கோலாட்டம், சிங்காரி மேளம், நாதஸ்வரத்துடன் ஆஞ்சநேயர் திருத்தேர் முன்னே செல்ல தெய்வத்திரு டாக்டர் எஸ். லெட்சுமணன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட செம்பவள பஞ்சவர்ண திருத் தேர் வீதி உலா வந்தது.
செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் பவனியின் போது வழிநெடுகிலும் மோர் தர்மமும், பழதர்மமும், இனிப்பு தர்மங்களும், கோயில்விளை சந்திப்பில் வைத்து மாபெரும் அன்னதர்மமும் நடைபெற்றது.
திருத்தேர் வீதி உலாவின் போது அய்யாவின் அன்பு கொடிமக்கள் வழிநெடுகிலும் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர். அய்யாவின் அன்புக்கொடி மக்கள் காவி உடை அணிந்து, முத்துக்கொடைஏந்தி, கைகளில் காவி கொடி பிடித்தபடி, அய்யா சிவ சிவ அரகரா என்ற மந்திரம் ஒலித்தபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
திருத்தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு மேல உடையப்பன்குடியிருப்பு வழியாக கோயில் விளை சந்திப்பு வந்து பின்னர் கோயிலை வந்தடைந்தது. இரவு 7 மணிக்கு மாபெரும் அன்னதர்மமும், 10 மணிக்கு உடையப்பன்குடியிருப்பு ஊரில் 2021- 2022 கல்வி ஆண்டில் 12 மற்றும் 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இரவு 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், இரவு 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 2 மணிக்கு திருக்கொடியிறக்கமும் அதனைத் தொடர்ந்து இனிப்பு வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.
திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் எம். ஆர். காந்தி எம்.எல்.ஏ, பாஜக மாநில செயலாளரும், நாகர்கோவில் நகராட்சியின் முன்னாள் தலைவருமான மீனாதேவ், நாகர்கோவில் மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவர் முத்துராமன், நாகர்கோவில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், வீரசூர பெருமாள், ரமேஷ், பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் அருள், பாஜக நாகர்கோவில் தெற்கு மண்டல தலைவர் முரளிமனோகர்லால், வள்ளியூர் ஈஸ்வரி நர்சிங் ஹோம் சரவணன், களியக்காவிளை கிஷோர்குமார், மயிலாடி புதூர் தர்மசீடர் ராஜு, நாகர்கோவில் மேஜர் நாகமணி, சின்னணைந்தான்விளை அழகன் மார்டன் அரிசி ஆலை உரிமையாளரும், தொழிலதிபருமான டாக்டர் முத்தழகன், இன்ஜினியர் ஈஸ்வர்சிங், கீழகிருஷ்ணன் புதூர் ஸ்ரீ காந்திஅன்பு, மேலதர்மபுரம் பத்திர எழுத்தர் பால்நாடார், நங்கூரன்பிலாவிளையை சேர்ந்த தொழிலதிபரும், கந்தசுவாமி சன்ஸ் உரிமையாளருமான இராஜலிங்கம், தேர் கொடிமர சிற்ப கலை வல்லுனர் பீச்ரோடு பெரியவிளையை சேர்ந்த முத்துராஜன், மேலக்காட்டுவிளை இராஜகோபாலன், மணக்குடி பீட்டர்ஜாண் உட்பட பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருத்தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் தங்ககிருஷ்ணன், உபதலைவர் சந்திரசேகர், செயலாளர் துரைச்சாமி, இணைச் செயலாளர் சிவசுப்பிர மணியன், பொருளாளர் உதயகுமார், துணைப் பொருளாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணமணி, நாராயணப் பெருமாள், மணிகண்டன், ஸ்ரீதரன், நாராயணமணி, ராஜேஸ்வரன், சுரேந்திரன், தங்கலிங்கம், மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
திருத்தேரோட்டத்தை முன்னிட்டு சுசீந்திரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






