search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக  அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் தேர்வு
    X

    கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் தேர்வு

    • பதவியேற்பு விழாவில் மேயர் மகேஷ் பங்கேற்பு
    • பிரபா ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    உறுப்பினராக இருளப்பபுரம் சிவன் கோவில் தெற்குச்சாலையைச் சேர்ந்த பிரபா ராமகிருஷ்ணன் சீதப்பாலை சேர்ந்த ராஜேஷ் இடைகோட்டை சேர்ந்த ஜோதிஷ்குமார் தோவாளை சண்முகா நகரை சேர்ந்த சுந்தரி கொல்லங்கோட்டை சேர்ந்த துளசிதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி யேற்பு விழா இன்று நடந்தது. சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலகத்தில் வைத்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன்ஆகியோர் முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரபா ராமகிருஷ்ணன், ராஜேஷ், சுந்தரி, ஜோதி ஷ்குமார்,துளசிதரன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

    இதை தொடர்ந்து அறங்கா வலர் குழு தலைவர் தேர்வு நடந்தது. அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பதவி ஏற்று கொண்டார்.நிகழ்ச்சியில் திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் பசலியான், மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, செல்வன், ,திமுகஅணி அமைப்பாளர் அகஸ்தீசன், இ. என்.சங்கர், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்று கொண்ட பிரபாராம கிருஷ்ணன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ளார்.

    Next Story
    ×