search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் ரூ.17 கோடி செலவில் 200 கோவில்களில் கும்பாபிஷேக திருப்பணிகள்
    X

    குமரி மாவட்டத்தில் ரூ.17 கோடி செலவில் 200 கோவில்களில் கும்பாபிஷேக திருப்பணிகள்

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தகவல்
    • சுசீந்திரம் கோவிலில் ரூ.2 கோடியே 33 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். குமரி மாவட்ட திருக்கோவில் களின் மராமத்து பிரிவு பொறியாளர்கள் ராஜ் குமார், அய்யப்பன், திருக்கோவில்களின் முன்னாள் கண்காணிப்பா ளர் ஜீவானந்தம், குமரி மாவட்ட திருக்கோவில் களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பிறகு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவராக பொறுப் பேற்ற பிறகு இதுவரை 260 கோவில்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். பல இடங்களில் ஆக்கிரமிப் பாளர்கள் கோவில் சொத்துக்களை ஆக்கிர மித்து உள்ளனர். இவர்கள் தாமாக முன்வந்து கோவில் நிர்வா கத்திடம் ஆக்கிர மிப்பு நிலத்தை ஒப்படைக்க வேண் டும். இல்லையென் றால் நிலங்கள் அளவி டப்பட்டு மீட்டெடுக்கப் படும். சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் ரூ.2 கோடியே 33 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

    இந்த கோவிலில் 4 பிரகாரங்களிலும் புதிய கருங்கல் தளம் அமைத்தல், கோவில் தூய்மைப்படுத்து தல், மண்டபங்கள் சீர மைப்பு, மின் இணைப்புகள் சீரமைப்பு, கோவில் விமானங்கள் சீரமைப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட் டுள்ளது. மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் பத்மநாப சுவாமி கோவில், திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், பறக்கை மதுசூதன பெரு மாள் சுவாமி கோவில், திப்பரமலை கரியமா ணிக்கத் தாழ்வார் கோவில் மற்றும் பன்னிப்பாகம் மகாதேவர் கோவில் ஆகிய கோவில்களி லும் விரைவில் கும்பாபி ஷேகம் நடைபெறும்.

    இந்த ஆண்டு ரூ.7 கோடி செலவில் 100 திருக்கோ வில்களுக்கும், அடுத்த ஆண்டு ரூ.10 கோடி செலவில் 100 திருக்கோ வில்களுக்கும் கும்பாபிஷே கம் நடத்தப்ப டும். மேலும் குளம் சீர மைப்பு பணியில் சுசீந்திரம் கோவில் தெப் பக்குளம், பாத்திர குளம், திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோவில் தெப்பக்குளம், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்கு ளம், கன்னியாகுமரி பா பநாச தீர்த்த குளம், பீமநகரி கோவில் தெப்பகுளம் ஆகிய குளங்கள் விரைவில் முழுமையாக சீரமைக்கப் படும்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 27 தேர்களில் 8 தேர்களுக்கு பாதுகாப்பு கூண்டுகள் அமைக்கப்பட் டுள்ளது. மேலும் மீதமுள்ள 19 தேர்களில் 16 தேர்களுக்கான பாதுகாப்பு கூண்டுகள் அமைக்க ஆர்டர் வழங்கப்பட்டுள் ளது.

    மேலும் கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்து வந்த பிறகு ஆண்டுதோறும் அரசால் வழங்கப்படும் மானிய தொகை கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு ரூ.3 கோடியாக இருந்தது. இந்த மானியத்தொகை தற்போதைய அரசின் தொடக்கத்தில் ரூ.6 கோடியாகவும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.8 கோடியாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடிமர பிரதிஷ்டை அரசின் வரை பட அனுமதி, தந்திரி மற்றும் ஸ்தபதி கருத்து களின் அடிப்படையிலும் செய்யப் பட்டுள்ளது.

    வருகிற நவம்பர் 24-ந்தேதி கொடிமரம் நிறுவப் பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படு கிறது. கோவில்களில் நடக் கும் திருப்பணிகளின் வேகத்தை அதிகரிக்க அதிகமான ஒப்பந்த தாரர்கள் நியமிக்கப்படு வார்கள்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×