என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "old man death"
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனம் உடைந்து அருணாசலம் கீழ்காங்கேயன்குப்பம் தகன மேடை அருகே மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் கருகி இறந்தார்.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
நாசரேத்:
சாத்தான்குளம் அருகே உள்ள குறுகால்பேரியை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 87). இவருக்கு 4 மகன்கள் மற்றும்3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
இந்நிலையில் பால்ராஜ் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு நாசரேத்திற்கு வந்து பொருட்கள் வாங்கிவிட்டு பின்னர் மீண்டும் சாத்தான்குளம் சென்று கொண்டிருந்தார். அவர் வாலசுப்பிரமணியபுரம்- சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள தடுப்பில் பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் விரைந்து வந்து பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்