search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் தீக்குளித்து முதியவர் தற்கொலை
    X

    பண்ருட்டியில் தீக்குளித்து முதியவர் தற்கொலை

    பண்ருட்டியில் உடல்நலம் பாதிப்படைந்த முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனம் உடைந்து அருணாசலம் கீழ்காங்கேயன்குப்பம் தகன மேடை அருகே மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் கருகி இறந்தார்.

    இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×