search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவாமிமலை அருகே முதியவர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை
    X

    சுவாமிமலை அருகே முதியவர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

    சுவாமிமலை அருகே உள்ள கோணக்கரை அரசலாற்று கரையில் 55 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள கோணக்கரை அரசலாற்று கரையில் 55 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. 

    இதுபற்றி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் வடிவேலனிடம் புகார் செய்தனர். அவர் இதுபற்றி சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். 

    அதன்பேரில் சுவாமி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×