என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாசரேத்தில் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் மரணம்
Byமாலை மலர்11 Jun 2018 2:26 PM GMT (Updated: 11 Jun 2018 2:26 PM GMT)
நாசரேத் பஸ் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துக்கிடந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
நாசரேத்:
நாசரேத் பஸ் நிலையம் அருகே நேற்று காலை அனாதையாக 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துக்கிடந்தார். உடனே நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
அனாதையாக கிடந்து இறந்துபோன அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X