என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "New Zealand"
தெற்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் நியூசிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 24 ஆயிரம் தீவு கூட்டம் அமைந்துள்ளது. பனைமரங்கள் சூழ்ந்த இந்த தீவு கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் இயற்கை எழிலை கண்டு மகிழ்வதற்காக ஏராளமான உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நீர் சறுக்கு விளையாட்டுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த தீவு கூட்டத்தில் உள்ள முக்கிய பகுதியான நியூ கலிடோனியாவில் (உள்நாட்டு நேரப்படி) மாலை சுமார் 3.30 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812051413026688_1_fdg._L_styvpf.jpg)
அருகாமையில் உள்ள தீவு நாடுகளான வனாது, பிஜி ஆகியவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோரத்தில் தங்கியிருக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
நியூகலிடோனியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் நியூசிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அது வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கம் தாக்கிய சுமார் இரண்டு மணிநேரத்துக்கு பின்னர் 6.6 அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. இந்த இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. #earthquake #newcaledonia
16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன.
இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி, 20-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் டிமோத்தீ கிளமென்ட் கோல் அடித்தார். ஸ்பெயின் அணியினர் பதில் கோல் திருப்ப கடும் முயற்சி மேற்கொண்டனர். பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் மற்றும் கோல் கீப்பர் ஆர்துர் தைப்ரே அபாரமாக செயல்பட்டு பெனால்டி கார்னர் உள்பட பல வாய்ப்புகளை முறியடித்தனர். முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
48-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் அல்வரோ இக்லிசியஸ் இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர் குய்சோ கோர்டஸ் லாவகமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.
முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவிடமும், பிரான்ஸ் அணி நியூசிலாந்திடமும் தோல்வி கண்டு இருந்தன.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812040156419294_1_m5gx3rad._L_styvpf.jpg)
மற்றொரு லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியுமான அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுவது பிரகாசமாகி இருக்கிறது. அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வென்று இருந்தது. நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் பிரான்சை சாய்த்து இருந்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா (மாலை 5 மணி), அயர்லாந்து-சீனா (இரவு 7 மணி) அணியும் மோதுகின்றன.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811281358374460_1_zq96d7ix._L_styvpf.jpg)
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா நேற்று ஒரே நாளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 2-வது நாளில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோகைல் 147 ரன்னும், பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் 127 ரன்னும் எடுத்தனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811270510193968_1_npidaczi._L_styvpf.jpg)
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்து இருந்தது. ஜீத் ராவல் 17 ரன்னுடனும், டாம் லாதம் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. அணியின் ஸ்கோர் 50 ரன்னாக இருந்த போது ஜீத் ராவல் (31 ரன்கள்) யாசிர் ஷா பந்து வீச்சில் போல்டு ஆனார். அதன் பின்னர் விக்கெட்டுகள் மள, மளவென்று சரிந்தன. 35.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. கடைசி 40 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 22 ரன்களும், கேப்டன் கனே வில்லியம்சன் 28 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதில் 6 வீரர்கள் ரன் கணக்கை தொடங்காமல் ஆட்டம் இழந்ததும் அடங்கும். பாகிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 8 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
‘பாலோ-ஆன்’ ஆகி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. ஜீத் ராவல் 2 ரன்னிலும், கேப்டன் கனே வில்லியம்சன் 30 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இரண்டு விக்கெட்டையும் யாசிர் ஷா வீழ்த்தினார். டாம் லாதம் 44 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 10 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரேநாளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் பெருமையை யாசிர் ஷா பெற்றார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பவுலரின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சாகவும் இது பதிவானது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
தனது கடைசி ஆட்டத்தில் ஒரு ரன்னில் கேட்ச் ஆன சிசிலியா மொத்தத்தில் 43 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி 659 ரன்கள் எடுத்துள்ளார். இதே போல் ரன் ஏதுமின்றி வீழ்ந்த இசோபெல் 55 ஆட்டங்களில் ஆடி 944 ரன்கள் சேர்த்து இருக்கிறார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த ஒரே அயர்லாந்து வீராங்கனையான 37 வயதான கிளார் ஷில்லிங்டன், சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான சியாரா மெட்கால்ப் ஆகியோரும் இதுவே தங்களது கடைசி சர்வதேச போட்டி என்று ஏற்கனவே கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது. #ICCWomensWorldT20 #Ireland
பாகிஸ்தான்-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 63 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ‘அவுட்’ ஆனார்கள். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் சோகைல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811180630287435_1_av4va9sc._L_styvpf.jpg)
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து இருந்தது. அசார் அலி 10 ரன்னுடனும், ஹாரிஸ் சோகைல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 83.2 ஓவர்களில் 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சற்று தாக்குப்பிடித்து ஆடிய பாபர் அசாம் 62 ரன்னும், ஆசாத் ஷபிக் 43 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 38 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினார்கள். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், கிரான்ட்ஹோம், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
74 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமல் ஹசன் அலி பந்து வீச்சில் போல்டு ஆனார். நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 22.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. அப்போது ஜீத் ராவல் 26 ரன்னுடனும், கேப்டன் கனே வில்லியம்சன் 27 ரன்னுடனும் இருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
புரோடென்ஸ்:
6-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ‘பி’பிரிவில் உள்ள இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்தியாவுக்கு இது 3-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது.
நேற்று நள்ளிரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் (பி பிரிவு) மோதின. முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. பேட்ஸ் 35 ரன்னும், டேவின் 32 ரன்னும் எடுத்தனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811161248394604_1_newsdsd._L_styvpf.jpg)
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 90 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ‘பி’ பிரிவில் இருந்து ஏற்கனவே ஆஸ்திரேலியா இந்தியா ஆகிய அணிகள் அலை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்துவிட்டன. #WomenWorldT20 #Pakistan #NewZealand
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று பகல்-இரவாக நடந்தது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811121153506053_1_rain._L_styvpf.jpg)
பின்னர் விளையாடிய நியூசிலாந்து 6.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. எனவே ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அபுதாபியில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. #PAKvNZ #NZvPAK
அபுதாபி:
பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல் -இரவாக நடந்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்னே எடுக்க முடிந்தது. ரோஸ் டெய்லர் அதிக பட்சமாக 86 ரன்னும், நிக்கோலஸ் 33 ரன்னும் எடுத்தனர். சகீன்ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 40.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஹர் ஜமான் 88 பந்தில் 88 ரன்னும் (11 பவுண்டரி), பாபர் ஆசம் 50 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். பெர்குசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811101555388613_1_pakdsd._L_styvpf.jpg)
இந்தப்போட்டியின் போது பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்- ஹக் காயம் அடைந்தார். 16 ரன்னில் இருந்தபோது நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பெகுசன் வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டை பலமாக தாக்கியது. இதில் நிலை குலைந்து அவர் கீழே விழுந்தார். ஆட்டத்தின் 13-வது ஓவரில் முதல் பந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனடியாக அவருக்கு ஆடுகளத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சக வீரர் பஹர்ஜமானும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் அருகே வந்து அவரது உடல் நலம் பற்றி கேட்டு அறிந்தனர்.
சிறிது நேரத்தில் இமாம்- உல்-ஹக் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்க்கப்பட்டது. இதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று தெரியவந்தது. #PAKvNZ #NZvPAK
பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811090031375198_1_c80ml8sn._L_styvpf.jpg)
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
20 ஓவர் உலக கோப்பையை அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 3 முறை (2010, 2012, 2014) வென்றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை வாகை சூடியுள்ளன. இந்திய அணி உலக கோப்பையை வென்றதில்லை. இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறியதில்லை. 2009, 2010-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகளில் அரைஇறுதியை எட்டியதே இந்தியாவின் சிறப்பான செயல்பாடாகும்.
50 ஓவர் போட்டியில் ஓரளவு நன்றாக ஆடும் இந்திய அணி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலித்ததில்லை. கடந்த ஜூன் மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி சுற்றில் வங்காளதேசத்திடம் மண்ணை கவ்வியது. ஆனாலும் தற்போதைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரைத் தான் இந்திய அணி பேட்டிங்கில் மலை போல் நம்பி இருக்கிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ், எக்தா பிஷ்ட், தீப்தி ஷர்மா ஆகியோர் மிரட்டினால் இந்தியாவின் கை ஓங்கும்.
இந்த போட்டியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் தான் வலுமிக்கதாக திகழ்கிறது. எனவே இந்திய அணி தனது பிரிவில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தை தோற்கடித்தால் மட்டுமே அரை இறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கடந்த மூன்று உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி லீக் சுற்றை தாண்டவில்லை. இந்த முறையாவது எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
இந்திய துணை கேப்டன் மந்தனா கூறுகையில், ‘சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றினோம். தனிப்பட்ட முறையில் நான் அந்த தொடரில் போதிய ரன்கள் எடுக்கவில்லை. ஒரு ஆட்டத்தில் நானும், ஹர்மன்பிரீத் கவுரும் சரியாக ஆடவில்லை. ஆனாலும் மற்ற வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தால் 170 ரன்கள் குவித்தோம். இதே போல் கடந்த மூன்று மாதங்களில் பந்துவீச்சிலும் பெரிய அளவில் மேம்பட்டு இருக்கிறோம். கடந்த உலக கோப்பையுடன் ஒப்பிடும் போது பீல்டிங்கிலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்’ என்றார்.
இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார், இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். எதை பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக ஆட வேண்டும் என்று வீராங்கனைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ள ரமேஷ் பவார், ‘தனிப்பட்ட வீராங்கனைகளின் திறமை மேம்பட்டால், அணியும் வளர்ச்சி அடையும். அந்த வகையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இது போன்ற ‘மெகா’ போட்டிகளில் சாதனைகள் முறியடிக்கப்படும் போது தான் அனைவராலும் கவனிக்கப்படுவார்கள். அதைத் தான் இந்த தொடரில் எதிர்பார்க்கிறேன். யாராவது ஒரு இந்திய வீராங்கனை சதம் அடிக்க வேண்டும், மற்றொருவர் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
தொடக்க நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கின்றன. புரோவிடென்சில் நடக்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி), வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் (இந்திய நேரப்படி மறுநாள் அதிகாலை 5.30 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா, தான்யா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பட்டீல், எக்தா பிஷ்ட், ஹேமலதா, மன்சி ஜோஷி, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி.
இந்திய அணி மற்ற ஆட்டங்களில் 11-ந்தேதி பாகிஸ்தானையும், 15-ந்தேதி அயர்லாந்தையும், 17-ந்தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இந்திய அணி ஆடும் ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பெண்கள் 20 ஓவர் உலக கோப்பையில் முதல்முறையாக பயன்படுத்தப்பட இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பையோடு தான் பெண்கள் உலக கோப்பையும் நடத்தப்படும். இந்த தடவை தான் பெண்கள் உலக கோப்பை தனியாக நடத்தப்படுகிறது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் (80 ரன்), டாம் லாதம் (68 ரன்) அரைசதம் அடித்தனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811081239310062_1_tikxwfdp._L_styvpf.jpg)
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்கள் விளாசினார். லாதம் 68 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடீ, சதாப் கான் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து 267 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். குறிப்பாக மூன்றாவது ஓவரில் பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான், ரன் குவிக்க திணறியது. கடுமையாக போராடிய சர்பிராஸ் அகமது 64 ரன்களும், இமாத் வாசிம் 50 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 47.2 ஓவர்களில் 219 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. இதனால், நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. #PAKvNZ
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)