search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naveen Patnaik"

    • மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார்.
    • இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.

    புவனேஸ்வர் :

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக கடந்த 21-ந் தேதி ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள புரியில் தங்கி இருந்தபோது, ஜெகநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டார்.

    வங்காள பவன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். நேற்று மேற்கு வங்காளத்துக்கு திரும்பும் முன்பு, ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.

    நவீன் பட்நாயக்குக்கு வங்காளத்தில் தயாரிக்கப்பட்ட விசேஷ சால்வையை வழங்கினார்.

    மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார். 3 ரதங்களின் மாதிரி வடிவத்தையும், ஒடிசாவின் பிரபலமான இனிப்பு வகையையும் அளித்தார்.

    இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர், இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நவீன் பட்நாயக் கூறியதாவது:-

    இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிகாரபூர்வமற்ற சந்திப்பு. நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    நவீன் பட்நாயக் உயர்ந்த தலைவர். அவருடன் எப்போதும் நல்லுறவு உள்ளது. கூட்டாட்சி முறை பற்றிய அவரது கருத்தை ஆதரிக்கிறேன்.

    3-வது அணி பற்றி எதுவும் பேசவில்லை. மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றித்தான் பேசினோம். அவர் அளித்த வரவேற்பு, விருந்தோம்பல் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஜெகநாதர் ஆலயத்துக்கு வருமாறு அவரை அழைத்தேன். புரியில் வங்காள பவன் கட்ட 2 ஏக்கர் நிலம் அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்-ஐ உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்
    • அங்குள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

    புவனேஸ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், உலக கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளைப் பார்வையிடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம் சென்றுள்ளார்.

    ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.

    • 15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13 முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
    • உலக கோப்பையை இந்தியா வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் ஒடிசா முதல்வர்.

    புவனேஷ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற உள்ளது.

    மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா, தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி ஸ்பெயினைச் சந்திக்க உள்ளது.

    இந்நிலையில், ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    • ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    • தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிசா மாநில முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விழைகிறேன்.

    சென்னை:

    ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இயற்கைப் பேரிடர்களைச் சீரிய முறையில் தாங்கள் கையாள்வதும், விளையாட்டுத்துறைக்கு ஊக்கமளித்து, இளம் திறமையாளர்களை வளர்த்தெடுப்பதும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

    தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிசா மாநில முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விழைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒடிசா முதல்வர் கேட்டுக் கொண்டபடி, அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
    • ஒடிசா வரலாற்றில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்வது இதுவே முதல்முறை.

    புவனேஸ்வர்:

    2024 ஆண்டு நடைபெறும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு முன் தன் அமைச்சரவையை மாற்றி அமைக்க ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் திட்டமிட்டிருந்தார்.  ஜூன் 20 முதல் ரோம் மற்றும் துபாய்க்கு நவீன் பட்நாயக் பயணம் மேற்கொள்கிறார். அதற்கு முன்பு அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார்.

    அதன்படி தற்போதைய அமைச்சர்களை ராஜினாமா செய்யும்படி அவர் கூறியிருந்தார். இதையடுத்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 20 அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்கள் நேற்று இரவு முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். ஒடிசா அரசியல் வரலாற்றில் அனைத்து அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது இதுவே முதல்முறை.

    இதனையடுத்து இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பட்டியல் அம்மாநில ஆளுநர் பேராசிரியர் கணேஷிலாலிடம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்களாக இருந்த சிலருக்கு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பு விழாவிற்கு தயாராக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எனினும் பதவியை ராஜினாமா செய்த 20 அமைச்சர்களில் 6-க்கும் மேற்பட்டோர் புதிய அமைச்சரவையில் இடம் பெற மாட்டார்கள் என்று ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இன்று லோக் சேவா பவன் வளாகத்தில் உள்ள மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று ஆளுநர் மாளிகை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
    புவனேஸ்வர்:

    நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மார்ச் 26-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மானிய விலை உணவு தானியத்துக்குமேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. 

    இதற்கிடையே, இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையை பொருளாதார நடவடிக்கைகள் இன்னும் எட்டவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் அனைவருக்கும் உணவு கிடைப்பதை இத்திட்டம்தான் உறுதி செய்தது. ஆகவே, இலவச உணவு தானியம் வழங்குவதை மேலும் 8 மாதங்களுக்காவது நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

    முதல்வராக பதவி ஏற்று கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக்கிற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.
    சென்னை:

    ஒடிசா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நவீன் பட்நாயக்கிற்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஒடிசாவில் 5-வது முறை முதல்-மந்திரியாக பதவி ஏற்று சாதனை நிகழ்த்தியுள்ள உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    உங்களது உறுதியான தலைமையின் கீழ் ஒடிசாவின் மேம்பாடு மேலும் ஸ்திரமடையும் என்றும், நமது மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுறவு மேலும் புதிய உயரத்தை அடையும் என்றும் நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆந்திர பிரதேசத்தின் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளதற்கு, தமிழக மக்களின் சார்பாகவும், எனது தனிப்பட்ட சார்பிலும் வாழ்த்து கூறுகிறேன். ஆந்திர பிரதேச மக்களுக்கு சேவை செய்வதில் உங்கள் தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும், ஆந்திர பிரதேசமும், கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியாக நூற்றாண்டு காலமாக நெருங்கிய உறவு கொண்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளிலும் நமது மக்களின் நலனுக்காக இரண்டு மாநிலங்களின் உறவும் பரஸ்பரம் தொடரும் என்று எண்ணுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 5-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

    மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 117 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பா.ஜனதா 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

    இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் முதல் - மந்திரியாக நவீன் பட்நாயக் இன்று பதவி ஏற்றார். தலைநகர் புவனேஷ்வரில் உள்ள இட்கோ கண்காட்சி மைதானத்தில் நடந்த விழாவில் அவருக்கு கவர்னர் கணேஷிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


    நவீன் பட்நாயக் முதல் முறையாக பொது மைதானத்தில் பதவி ஏற்றார்.

    அவர் இதற்கு முன்பு 2000, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் முதல் மந்திரியாக பதவி ஏற்று இருந்தார். தற்போது தொடர்ந்து 5-வது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்று உள்ளார்.

    இதற்கு முன்பு 4 முறையும் அவர் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்று இருந்தார்.

    பதவி ஏற்பு விழாவில் நவீன்பட்நாயக்கின் சகோதரரும், தொழில் அதிபருமான பிரேம் பட்நாயக், சகோதரியும், பிரபல எழுத்தாளருமான கீதா மேத்தா உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான பி.ஜு ஜனதா தள தொண்டர்களும் திரண்டு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    ஒடிசா மாநிலத்துக்கு தொடர்ந்து 5-வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஒடிசா மாநிலத்துக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
    ஒடிசா முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள நவீன் பட்நாயக், பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி 112 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். நாளை மறுநாள் காலை 10.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்படுகின்றன.

    நவீன் பட்நாயக் தனது பதவியேற்பு விழாவிற்காக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்ளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கும் அழைப்பு அனுப்பி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    ஒடிசாவில் மோடி பிரசாரம் செய்தபோது, நவீன் பட்நாயக் ஆட்சி அகற்றப்படும் என்றும், அடுத்து பாஜக அரசு பதவியேற்பு விழாவிற்காக ஒடிசாவிற்கு வருவதாகவும் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் ஏற்கனவே மெஜாரிட்டியை உறுதி செய்துவிட்டதாகவும், புதிய பிஜு ஜனதா தளம் அரசு பதவியேற்பு விழாவிற்கு மோடி வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். 

    அவர் கூறியபடி, பிஜு ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில்,  மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    ஒடிசா சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் இன்று கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அளித்தார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

    பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.  

    இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.



    இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஒடிசா கவர்னர் கணேஷி லால்-ஐ சந்தித்த நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களின் கையொப்பத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை அவரிடம் அளித்தார். ஆட்சி அமைக்க வருமாறு நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

    பிஜு ஜனதா தளம் கட்சி பிரமுகர்கள் முன்னர் தெரிவித்திருப்பதைப்போல் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக வரும் 29-ம் தேதி அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்பார் என தெரிகிறது.  
    ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நவீன் பட்நாயக் 29-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29-ம் தேதி பதவியேற்கும் என்றும், தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பிஜு ஜனதா தளம் தலைமை இன்று தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுகிறார்.



    இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒடிசாவின் முதல்-மந்திரியாக 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன் பட்நாயக், ஆந்திர முதல் மந்திரியாக பொறுப்பேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நவீன் பட்நாயக்குக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    “ஒடிசாவின் முதல்-மந்திரியாக 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன் பட்நாயக்குக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நவீன் பட்நாயக்கின் அரசியல் தலைமை பண்புகள் மற்றும் அனுபவத்தால் ஒடிசா மாநிலம் மிகுந்த செழிப்படையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

    ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பான செயல்திறன் அளித்த என்னுடைய நண்பரும், ஆந்திர முதல்-மந்திரியுமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை பாராட்டுகிறேன். முதல்-மந்திரியாக பொறுப்பு வகிக்கும் வெற்றிகரமான காலத்தில் ஆந்திர மாநிலத்தை தென் இந்தியாவில் சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    ×