என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Naveen Patnaik"
- மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார்.
- இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.
புவனேஸ்வர் :
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக கடந்த 21-ந் தேதி ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள புரியில் தங்கி இருந்தபோது, ஜெகநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டார்.
வங்காள பவன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். நேற்று மேற்கு வங்காளத்துக்கு திரும்பும் முன்பு, ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.
நவீன் பட்நாயக்குக்கு வங்காளத்தில் தயாரிக்கப்பட்ட விசேஷ சால்வையை வழங்கினார்.
மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார். 3 ரதங்களின் மாதிரி வடிவத்தையும், ஒடிசாவின் பிரபலமான இனிப்பு வகையையும் அளித்தார்.
இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நவீன் பட்நாயக் கூறியதாவது:-
இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிகாரபூர்வமற்ற சந்திப்பு. நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி கூறியதாவது:-
நவீன் பட்நாயக் உயர்ந்த தலைவர். அவருடன் எப்போதும் நல்லுறவு உள்ளது. கூட்டாட்சி முறை பற்றிய அவரது கருத்தை ஆதரிக்கிறேன்.
3-வது அணி பற்றி எதுவும் பேசவில்லை. மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றித்தான் பேசினோம். அவர் அளித்த வரவேற்பு, விருந்தோம்பல் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேற்கு வங்காளத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஜெகநாதர் ஆலயத்துக்கு வருமாறு அவரை அழைத்தேன். புரியில் வங்காள பவன் கட்ட 2 ஏக்கர் நிலம் அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்-ஐ உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்
- அங்குள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
புவனேஸ்வர்:
15-வது உலக கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், உலக கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளைப் பார்வையிடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம் சென்றுள்ளார்.
ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
- 15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13 முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
- உலக கோப்பையை இந்தியா வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் ஒடிசா முதல்வர்.
புவனேஷ்வர்:
15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற உள்ளது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா, தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி ஸ்பெயினைச் சந்திக்க உள்ளது.
இந்நிலையில், ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
- ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிசா மாநில முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விழைகிறேன்.
சென்னை:
ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இயற்கைப் பேரிடர்களைச் சீரிய முறையில் தாங்கள் கையாள்வதும், விளையாட்டுத்துறைக்கு ஊக்கமளித்து, இளம் திறமையாளர்களை வளர்த்தெடுப்பதும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிசா மாநில முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விழைகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஒடிசா முதல்வர் கேட்டுக் கொண்டபடி, அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
- ஒடிசா வரலாற்றில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்வது இதுவே முதல்முறை.
புவனேஸ்வர்:
2024 ஆண்டு நடைபெறும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு முன் தன் அமைச்சரவையை மாற்றி அமைக்க ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் திட்டமிட்டிருந்தார். ஜூன் 20 முதல் ரோம் மற்றும் துபாய்க்கு நவீன் பட்நாயக் பயணம் மேற்கொள்கிறார். அதற்கு முன்பு அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி தற்போதைய அமைச்சர்களை ராஜினாமா செய்யும்படி அவர் கூறியிருந்தார். இதையடுத்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 20 அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்கள் நேற்று இரவு முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். ஒடிசா அரசியல் வரலாற்றில் அனைத்து அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது இதுவே முதல்முறை.
இதனையடுத்து இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பட்டியல் அம்மாநில ஆளுநர் பேராசிரியர் கணேஷிலாலிடம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்களாக இருந்த சிலருக்கு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பு விழாவிற்கு தயாராக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் பதவியை ராஜினாமா செய்த 20 அமைச்சர்களில் 6-க்கும் மேற்பட்டோர் புதிய அமைச்சரவையில் இடம் பெற மாட்டார்கள் என்று ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று லோக் சேவா பவன் வளாகத்தில் உள்ள மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று ஆளுநர் மாளிகை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 5-வது முறையாக ஆட்சியை பிடித்தது.
மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 117 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பா.ஜனதா 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
அவர் இதற்கு முன்பு 2000, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் முதல் மந்திரியாக பதவி ஏற்று இருந்தார். தற்போது தொடர்ந்து 5-வது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்று உள்ளார்.
இதற்கு முன்பு 4 முறையும் அவர் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்று இருந்தார்.
பதவி ஏற்பு விழாவில் நவீன்பட்நாயக்கின் சகோதரரும், தொழில் அதிபருமான பிரேம் பட்நாயக், சகோதரியும், பிரபல எழுத்தாளருமான கீதா மேத்தா உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான பி.ஜு ஜனதா தள தொண்டர்களும் திரண்டு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒடிசா மாநிலத்துக்கு தொடர்ந்து 5-வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்துக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நவீன் பட்நாயக்குக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
“ஒடிசாவின் முதல்-மந்திரியாக 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன் பட்நாயக்குக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நவீன் பட்நாயக்கின் அரசியல் தலைமை பண்புகள் மற்றும் அனுபவத்தால் ஒடிசா மாநிலம் மிகுந்த செழிப்படையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பான செயல்திறன் அளித்த என்னுடைய நண்பரும், ஆந்திர முதல்-மந்திரியுமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை பாராட்டுகிறேன். முதல்-மந்திரியாக பொறுப்பு வகிக்கும் வெற்றிகரமான காலத்தில் ஆந்திர மாநிலத்தை தென் இந்தியாவில் சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்