search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐந்தாவது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக நவீன் பட்நாயக் பதவியேற்பு- பிரதமர் மோடி வாழ்த்து
    X

    ஐந்தாவது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக நவீன் பட்நாயக் பதவியேற்பு- பிரதமர் மோடி வாழ்த்து

    சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 5-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

    மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 117 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பா.ஜனதா 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

    இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் முதல் - மந்திரியாக நவீன் பட்நாயக் இன்று பதவி ஏற்றார். தலைநகர் புவனேஷ்வரில் உள்ள இட்கோ கண்காட்சி மைதானத்தில் நடந்த விழாவில் அவருக்கு கவர்னர் கணேஷிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


    நவீன் பட்நாயக் முதல் முறையாக பொது மைதானத்தில் பதவி ஏற்றார்.

    அவர் இதற்கு முன்பு 2000, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் முதல் மந்திரியாக பதவி ஏற்று இருந்தார். தற்போது தொடர்ந்து 5-வது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்று உள்ளார்.

    இதற்கு முன்பு 4 முறையும் அவர் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்று இருந்தார்.

    பதவி ஏற்பு விழாவில் நவீன்பட்நாயக்கின் சகோதரரும், தொழில் அதிபருமான பிரேம் பட்நாயக், சகோதரியும், பிரபல எழுத்தாளருமான கீதா மேத்தா உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான பி.ஜு ஜனதா தள தொண்டர்களும் திரண்டு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    ஒடிசா மாநிலத்துக்கு தொடர்ந்து 5-வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஒடிசா மாநிலத்துக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×