search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan"

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது.
    • முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்

    1. முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும்.

    2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

    3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அதுபோல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

    4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

    5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டது.

    6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

    7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன் றவையும் இருக்கும்.

    8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந் தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

    9. முருகன் இறைபணிச் செல்வர்கள்: 1. அகத்தியர், 2. அருணகிரி நாதர், 3. ஒளவையார், 4. பாம்பன் சுவாமிகள், 5. அப்பர் அடிகளார், 6. நக்கீரர், 7. முசுகுந்தர், 8. சிகண்டி முனிவர், 9. குணசீலர், 10. முருகம்மையார், 11. திருமுருக கிருபானந்த வாரியார், 12. வள்ளிமலைச் சுவாமிகள், 13. குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆவார்கள்.

    10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

    11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

    12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

    13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

    14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் `கார்த்திகேயன்' என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

    15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

    16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

    17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான `திருப்புகழ்' நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

    18.`முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்' என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

    19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

    20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

    21. முருகனைக் குறித்துக் `குமார சம்பவம்' என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

    22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட் டுள் ளது.

    23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழி பட்டனர்.

    24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலி யோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

    25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

    26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

    27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

    28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

    29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

    30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

    31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

    32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

    33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

    34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

    35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

    36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

    37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறு கின்றன.

    38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகை யாற்றுப் படை கூறுகின்றது.

    39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

    40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

    41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

    42. முருகனைப் போன்று கருப்¬ப வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

    43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

    44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முத லாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்த கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறு கையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.

    45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன் னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

    46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கள் ஆகும்.

    47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.

    48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.

    49. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

    50. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல் லப்படுகின்றது.

    51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

    52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

    53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

    54. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

    55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

    56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

    57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.

    58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.

    59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.

    60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.

    • கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
    • கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

    சஷ்டி விரதம் மிகவும் விசேஷம். அதிலும் ஆடி மாத சஷ்டி அற்புதமான நன்னாள். இந்தநாளில், கந்தபெருமானை வழிபடுவோம். கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பான்

    பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனைப் போற்றுவார்கள்.

    செவ்வாய்க்கிழமை என்பதும் கந்தனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.

    ஆடி மாத சஷ்டி தினமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது விசேஷம்.

    விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் படியுங்கள். எதிர்ப்புகள் விலகும். கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும். வேண்டியது அனைத்தையும் தந்தருள்வான் வேலவன்.

    இன்னும் இயலுமெனில், இந்த சஷ்டி நாளில், நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். நமக்கு வந்த தடைகளையெல்லாம் தகர்த்துவிடுவான் வேலவன். கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் எதிர்ப்புகளையும் விரட்டி அருள்வான் முருகப்பெருமான்!

    • திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார்.
    • இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    வானுலா வும்மதி வந்துலா வும்மதில் மாளிகை

    தேனுலா வும்மலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்

    வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி

    ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே.

    வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த

    மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும்

    நிறைந்து விளங்கும்.

    திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற் காலத்துக் குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பக்தி ஞானத்தாலே நினைப்பவர் வினைகள் நைந்துஅறும்.

    மடங்கொள்வா ளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்

    திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்

    விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே

    அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.

    இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக் களிக்கும் மணம்

    பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும்

    மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான

    சிக்கலில் எழுந்தருளிய, விடம் தங்கிய கண்டத்தினை உடைய

    வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய்

    அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.

    நீலநெய் தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய

    சேலுமா லுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்

    வேலவொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்

    பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.

    நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.

    கந்தமுந் தக்கைதை பூத்துக் கமழ்ந்து சேரும்பொழிற்

    செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்

    வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்

    சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.

    மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள் பூத்துக் கமழும்

    பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப் பண்ணோடு பாடும்.

    பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில், கற்பம்

    செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமையாளனாகிய

    வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை நினைபவர்

    வினைப்கள் தேய்வது திண்ணம்.

    மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு

    தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்

    வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே

    தங்குமேன் மைசர தந்திரு நாளுந்த கையுமே.

    மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே

    உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும்

    கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில்

    சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய

    வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான

    கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.

    வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்

    தெண்டிரைக் கொள்புனல் வந்தொழு கும்வயற் சிக்கலுள்

    விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப் பெருமானடி

    கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.

    மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப் பதியுள் தோன்றிய

    ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த

    சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி

    இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்

    சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.

    • ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது.
    • முருகனின் 3-ம் படைவீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.

    முருகப் பெருமானின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதர்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆறுபடை வீடுகளை கொண்ட முருகப்பெருமானுக்கு அதன் ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    முதல்படை வீடு

    ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகன், சூரபத்மனை போரில் வென்ற பின்னர் இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து வைக்கிறார். இங்கு தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மலைவடிவில் சிவபெருமான் அருள் புரிகிறார். அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பது சிறப்பாகும்.

    இரண்டாம் படைவீடு

    முருகனின் 2-ம் படைவீடான திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால் திருச்சீலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு முருகப்பெருமான் சூரபத்மனை அழித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. குரு தலமாகவும் விளங்குகிறது.

    மூன்றாம் படைவீடு

    முருகனின் 3-ம் படைவீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். பழநி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. ஞானப்பழம் அடைய வேண்டிய போட்டியில், தமையன் பிள்ளையாருடன் தோற்ற கோபத்தில் பழநியில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இவரின் தோற்றம் உலக உண்மைகளை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இங்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் பிரசாதமாக சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும்.

    நான்காம் படைவீடு

    தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியை தரும். அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கும் அப்படி தான் போலும். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க பிள்ளையை குருவாக ஏற்று, தான் சீடனாக அமர்ந்து குருவின் விளக்கத்தை கேட்ட இடம் சுவாமிமலை.அதனால் இந்த சுவாமிமலை முருகன் 'சிவகுருநாதன்' என்ற பெயரால் வணங்கப்பட்டு வருகின்றார்.

    ஐந்தாவது படைவீடு

    திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் திருத்தணிக்கு சென்று தன் கோபத்தை தணித்துக் கொண்டு சாந்தமானதால், தணிகை என்று இந்த ஊருக்கு பெயர் வந்தது. மேலும், வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை, அண்ணன் கணேசனின் உதவியுடன் காதல் திருமணம் செய்து கொண்ட இடம் திருத்தணி ஆகும். இந்த கோவில் அருணகிரிநாதர், முத்துச்சாமி தீட்சிதர் உள்ளிட்டோரால் பாடல் பெற்ற தலம்.

    ஆறாவது படைவீடு

    அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு அழகர் மலை மீது இருக்கக்கூடிய சோலைமலையாகும். இங்கு ஒளவை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்ட முருகனின் ஞானத்தை பார்த்து நீ சாதாரண மானிடராக இருக்க முடியாது என தெரிந்து கொண்டார். இந்த தலத்தில் உலக வாழ்கைக்கு தேவை கல்வி அறிவு மட்டும் போதாது இறையருள் என்ற மெய் அறிவை உணர வேண்டும் என்பதை தன் திருவிளையாடலால் உணர்த்திய இடம்.

    • இத்தல பெருமாள் “கோலவாமனப் பெருமாள்’ என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
    • நவநீதேஸ்வரர் கோவிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறும்.

    சிக்கல் சிவாலயத்தில் சைவ, வைணவ பேதமில்லாமல் அமையப்பெற்றுள்ள தனிக்கோவிலில் கோலவாமனப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிப்பதும், ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருவதும் குறிப்பிடத் தக்கவையாகும்.

    பெருமாள் தல வரலாறு:

    ஒரு முறை தேவர்கள் அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்து மகாவிஷ்ணுவின் திருவடியில் விண்ணப்பம் ஒன்றை வைத்தார்கள்.

    அதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இங்கு வந்து இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவனை வழிபட்டு அசுரகுரு சுக்ராச்சாரியார் அருள் பெற்ற மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக புராணங்கள் வாயிலாக கூறப்படுகிறது.

    எனவே இத்தல பெருமாள் "கோலவாமனப் பெருமாள்' என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஆதலால் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள சிவனை, மகாசக்தி, முருகன், பெருமாள் மற்றும் அனுமனையும் தரிசனம் செய்பவர்களுக்கு எந்த ஒரு துஷ்ட சக்திகளின் பாதிப்பும் ஏற்படாது என்பது ஐதீகம்.

    நவநீதேஸ்வரர் கோவிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறும். இவ்வாலயத்தில் வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறியதும் இத்தல இறைவன் வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.

    • டெல்டா மாவட்டங்களில் பல்வேறு முருகன் கோவில்கள் உள்ளன.
    • பிரசித்திபெற்ற கோவில்கள் வருமாறு:-

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு முருகன் கோவில்கள் உள்ளன. அவற்றுள் பிரசித்திபெற்ற கோவில்கள் வருமாறு:-

    1. சுவாமிநாதசாமி கோவில், சுவாமிமலை.

    2. முருகன் கோவில், எட்டுக்குடி.

    3. சுப்பிரமணியசாமி கோவில், எண்கண்.

    4. திருக்குராத்துடையார் கோவில், திருவிடைக்கழி.

    5. குமரக்கட்டனை சுப்ரமணியசாமி கோவில், மயிலாடுதுறை

    6. பழநியாண்டீஸ்வரர் கோவில், ஆமப்பள்ளம், சீர்காழி.

    7. குமரேஸ்வரசாமி கோவில், தேவர்கண்டநல்லூர், குடவாசல்.

    • முருகனின் வாகனம் மயில்.
    • மயிலுக்கு சிகி என்றொரு பெயரும் உண்டு.

    * முருகனின் வாகனம் மயில். மயிலுக்கு சிகி என்றொரு பெயரும் உண்டு. சிகி வாகனன் என்பதில் இருந்து இத்தலம் சிக்கல் என்றானது.

    * இத்தல சிங்கார வேலவனின் ஆபரணங்களும், அவன் பெயரை போலவே சிங்காரமானவைதான்.

    * ரத்தினங்கள் இழைத்த கொண்டை, பொன்னால் ஆன கவசம், வெள்ளியிலான குடை, வைரவேல், ஆனவட்டம் என அற்புத வேலைபாடுகள் அமைந்த ஆபரணங்கள் இந்த வேலவனுக்கு உண்டு.

    * தட்சிணாமூர்த்தி கோஷ்டத்திற்கு அருகே தல விருட்சமான மல்லிகைக் கொடி உள்ளது.

    * இத்தல கார்த்திகை மண்டபத்தில் கந்த புராண நிகழ்ச்சிகளை ஓவியங்களாகவும், ராமாயண நிகழ்ச்சிகளை சுதைச் சிற்பங்களாகவும் தரிசிக்கலாம்.

    * ஆணவமும், மந்த புத்தியும் உள்ளது ஆடு. நம்மிடம் உள்ள ஆணவத்தையும், மந்த புத்தியையும் அடக்குவேன் என்பதை கூறாமல் கூறுவது போல இத்தல முருகன் ஆட்டு கிடா வாகனத்தில் பவனி வருகிறார்.

    * இத்தலத்தில் விருத்த காவிரி எனும் ஓடம்போக்கியாறு, காமதேனு தீர்த்தம், கயா தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், அம்மா தீர்த்தம் என 5 தலதீர்த்தங்கள் உள்ளன.

    * திலோத்தமையின் மீது காதல் கொண்டு அதனால் தவபலனை இழந்த விஸ்வாமித்திரர் இத்தலத்திற்கு வந்து அந்த பாவத்தை தீர்த்துக் கொண்டதாக தல புராணம் கூறுகிறது.

    * வசிஷ்டர் சீடர்களோடு இருப்பதும், காமதேனு நவநீதேஸ்வரரை வழிபடுவதும் ஆகிய தலபுராணச் சிற்பங்களை பிராகாரத்தில் காணலாம்.

    * வசந்த மண்டபத்தில் கார்த்திகை திருநாள் உற்சவத்தின் போது தேவியருடன் சிங்கார வேலவன் எழுந்தருள்வது வழக்கம். அப்போது நிலைக்கண்ணாடி முன் நடத்தப்படும் ஒய்யாளி சேவை அற்புதமானது.

    • இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும்.

    நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சிங்காராவேலவரை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதில் கந்தசஷ்டி விழா தேரோட்டமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும். விழாவின் 5-ம் நாள் தேரோட்டம் நடக்கும். அன்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளுவார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்படும்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வர். நான்கு வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை வந்தடையும். தேர் அசைந்தாடி வரும் காட்சி பிரமிப்பாக இருக்கும்.தேரோட்டத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சிக்கல் கிராமத்தில் குவிவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டும் கந்தசஷ்டி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிங்காரவேலவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.
    • பக்தர்கள் முருகனின் அழகில் மெய்மறந்து மனமுருகி தரிசிப்பர்.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    அன்றைய தினத்தில் சிங்காரவேலவருக்கு மஞ்சள், பால், தயிர், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

    அதனை தொடர்ந்து, சிங்காரவேலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

    அந்த அலங்காரத்தில் முருகனை தரிசிக்கும் பக்தர்கள் 'அழகென்ற சொல்லுக்கு முருகா'.. என்ற பாடல் வரிகளுக்கேற்ப அவரின் அழகில் மெய்மறந்து முருகனை மனமுருகி தரிசிப்பர்.

    • 2-வது சிலை எட்டுக்குடி தலத்தில் ஸ்தாபிதம் செய்தார்.
    • 3-வதாக சிலை எண்கண் தலத்தில் ஸ்தாபிதம் செய்தார்.

    நாகை மாவட்டம், சிக்கல் அருகில் உள்ள பொரவாச்சேரியில் சிற்பியால் வடிக்கப்பட்ட முதல் முருகப்பெருமானின் அழகிய சிலை வடிவம் கண்டு இதுபோல் வேறு சிலை செய்யக்கூடாது என மன்னன் சிற்பியின் கட்டை விரலை வெட்டினான்.

    முருகனின் அருளோடு சிற்பி அதே அமைப்புடைய 2-வது சிலை செய்து எட்டுக்குடி தலத்தில் ஸ்தாபிதம் செய்தார். அதனை கேள்விப்பட்ட அரசன் சிற்பியின் கண்களை பறிக்க தொடர்ந்து, முருகன் அருளால் 3-வதாக சிலை செய்து எண்கண் தலத்தில் ஸ்தாபித்த சிற்பிக்கு முருகப்பெருமான் கண்ணொளி அளித்தான் என்பது வரலாறாகும்.

    • சோழ வள நாட்டில் இயற்கையில் மலைகள் கிடையாது.
    • இந்தத் தலம், அறுபடை வீடுகளுக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.

    நாகை மாவட்டம், நாகை- – திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் கிராமம். இங்கு 80 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிலில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார் சிங்காரவேலவர்.

    சோழ வள நாட்டில் இயற்கையில் மலைகள் கிடையாது. செயற்கையாக அமைக்கப்பட்ட மலைக் கோயிலான இந்தத் தலம், அறுபடை வீடுகளுக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.

    வலப்புறம் சிவனாகிய 'நவநீதேஸ்வரர்', இடப்புறம் பார்வதிதேவியான 'வேல் நெடுங்கண்ணி'. இப்படி அம்மை – அப்பனுக்கு இடையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிங்காரவேலரின் பார்வை பட்டாலே மலையளவு சிக்கல்களும் பனி போல மாயமாகி விடுமாம்.

    ''ஒருகாலத்தில் சூரபத்மன் என்ற அரசன், மக்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அழியா வரம் பெற்ற அவனை வதம் செய்ய முருகனால் மட்டுமே முடியும் என்று கருதிய தேவர்கள் முருகனிடம் மன்றாட, முருகனும் சூரனை வதம் செய்ய சம்மதித்தார்.

    சூரன் சிவனிடம் அழியா வரம் பெற்றதால், அவனை அழிப்பதற்கான வேல் வேண்டி இந்தத் தலத்தில் அம்மை – அப்பன் முன் தவமிருந்தார் முருகன். இறுதியில் மகனின் தவத்தை மெச்சிய பார்வதிதேவி, சக்தி மிக்க வேலை வழங்க, அந்த வேலுடன் திருச் செந்தூர் சென்று சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அன்று முதல் சிங்காரவேலன் ஆனார் முருகன்.

    ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டியன்று சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் காட்சி, 'சக்தி – வேலன் புறப்பாடு'களுடன் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

    இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும். அப்படி வழியும் வியர்வையை அர்ச்சகர்கள் துடைப்பதும், துடைக்கத் துடைக்க வியர்வை துளிர்ப்பதும் மிகவும் ஆச்சர்யமானது. இந்த அதிசயத்தைக் காண வெளி நாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் குவிந்து விடுவார்கள்''

    பக்தர்கள் கூறிய உண்மை தகவல்கள்

    தன் மைத்துனருக்குத் திருமணமாக வேண்டும் என்ற வேண்டுதலோடு கோவையிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்தார் கணேசன் குருக்கள்.

    ''என் மைத்துனர் மகாராஜன், அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குருக்களாக இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக இவருக்கு கல்யாணத்துக்கு பெண் பார்க்கிறோம். ஏதோ ஒரு சிக்கல் வந்து கல்யாணம் தடைபட்டு கொண்டே செல்கிறது. அதனால் தான் எல்லா சிக்கல்களும் தீர்ந்து சீக்கிரமே இவருக்கு 'டும் டும்' கொட்டணும்னு வேண்டிக்க வந்தோம்'' என்றார். அவர் வேண்டிய சில நாட்களிலே மகாராஜனுக்கு திருமணம் நடந்து முடிந்த அதிசயம் நிகழ்ந்தது.

    ஏழாவது திருமண தினத்தை முன்னிட்டு தேவூரில் இருந்து மகனுடன் வந்திருந்தனர் ராஜலிங்கம்- – பாக்ய லட்சுமி தம்பதி. ''ஒவ்வொரு கல்யாண நாளன்றும் சிங்காரவேலவரைத் தரிசிப்பது எங்கள் வழக்கம். இவர் கருணையால் எங்கள் வாழ்வில் எந்த சிக்கலும் இல்லை. சண்டை, சச்சரவுகளும் இல்லை. ஒரு மகன், ஒரு மகளுடன் தெளிந்த நீரோடை போல போகிறது எங்கள் வாழ்க்கை'' என்று மகிழ்ந்த படியே சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலவரின் வரலாற்று மகிமையை சொல்லத் தொடங்கினார் ராஜலிங்கம்.

    ''சூரபத்மனின் முரட்டுப் பிடியில் சிக்கித் தவித்த தேவர்களையே காப்பாற்றிக் கரை சேர்த்தவர் இந்த சிங்காரவேலவர்.அப்பேர்ப் பட்டவருக்கு சாதாரண மானுட பக்தனின் சிக்கல்களெல்லாம் எம்மாத்திரம்? இவரது அருட் பார்வை பட்டதுமே எப்பேர்ப்பட்ட சிக்கலும் சுக்கு நூறாகிவிடும்''

    பாண்டிச்சேரியிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த ஆசிரியை தமிழரசி, ''டீச்சர் டிரெயினிங் முடிச்சிருந்த எனக்கு, போஸ்ட்டிங் போடாமல் 3 ஆண்டுகளாக அலைக்கழிச்சுட்டு இருந்தாங்க. ஆறு மாதத்துக்கு முன்னாடி இங்க வந்து 'சத்ரு சம்ஹார பூஜை' செஞ்சு சிங்காரவேலரை வழிபட்டுப் சென்றோம். இப்போது எனக்கு வேலை கிடைச்சு ரெண்டு மாசமாகுது. அதான்.. நன்றிக் கடன் செலுத்திட்டுப் போகலாம்னு வந்திருக்கோம்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

    இப்படி சிக்கல் சிங்காரவேலரை மனமுருகி வேண்டி கொண்டு தரிசித்த பக்தர்களை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பது நிதர்சனமான உண்மை. மேற்கூறியவர்களை போல் இன்னும் லட்சகணக்கானோர் மனமுருகி சிங்காரவேலவரை தரிசனம் செய்து பயன் அடைந்து வருகின்றனர்.

    • திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.
    • திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவில் முருகப் பெருமானின் அறிவிக்கப்படாத 7-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது.

    விஸ்வாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

    'கன்னல் ஒத்த மொழிச் சொல்' எனத் தொடங்கும் திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.

    'அற்ப குணம் படைத்தவர்கள் பக்கம் என் மனதை செலுத்தவிடாமல், இயல், இசை, நாடகம் என்று முத்தமிழில் விருப்பம் கொண்டவனாக விளங்கும் நீ, எனக்கு அருள் புரிவாயாக!

    அரக்கர்களின் தலைகளை பூமியில் உருளச் செய்யும் வீரம் கொண்டவனே!

    கொடிய பாம்பின் விஷத்தைப் போன்ற மனம் கொண்ட சூரனை, வெற்றி காண வேலாயுதத்தை உடையவனே! செம்மை குணம் கொண்ட பெரியோரின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிக்கல் சிங்கார வேலவரே!'

    - என்று தனது திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.

    இங்கு வரும் பக்தர்கள், 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்கார வேலவனை நித்தம் பாடுவோம்' என்று கூறியும், திருப்புகழைப் பாடியும் தங்கள் வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.

    ×