என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Molestation"
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 24). இவர் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மலையம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சுபாசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார். இதைத்தொடர்ந்து சுபாஷ் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை:
நெல்லையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு வங்கி அதிகாரி ஒருவருடன் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் வங்கி அதிகாரி வேளாங்கண்ணி பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டார். இளம்பெண் மாமனார்- மாமியாருடன் கூட்டு குடித்தனமாக வசித்து வந்தார்.
அப்போது அந்த இளம்பெண்ணின் மாமனார் அவருக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் தனது கணவர் மற்றும் மாமியாரிடம் கூறி உள்ளார். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அந்த இளம்பெண்ணின் கணவர் அந்த பெண் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனால் பெண்ணின் பெற்றோர் கணவர் குடும்பத்தினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் அவதூறாக பேசி இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இளம்பெண் பாளையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணுக்கு ‘செக்ஸ்’ தொல்லை செய்த மாமனார் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த கணவர் மற்றும் மாமியார் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் கோட்டை வாசல் மேல வீதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 26). இவர் டூவீலர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
இவர் வடகடல் பகுதியைச் சேர்ந்த தத்தனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி. சிறுமியை கர்ப்பமாக்கிய விக்னேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகிறார்.
சென்னை:
மணலி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 1-ந்தேதி மாயமாகி இருந்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் மணலி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் சிறுமி வீடு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரித்தனர்.
அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான திருவாரூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.
பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 1-ந்தேதி மாயமாகி இருந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ்பிரபாகரன் என்பவர் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து மனோஜ் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் அருகில் உள்ள தோப்புபட்டியை சேர்ந்த மாயாண்டி மகன் வேல்முருகன் (வயது22). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுடன் பழகி வந்தார். அவரை காதலிப்பதாக கூறி கடந்த 4.3.2019-ம் தேதியன்று கடத்தி சென்றார்.
பின்னர் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து திருமணம் செய்து யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்தார். தனது மகளை காணாமல் பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே திருமணமான ஒரு மாதத்திலேயே உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என கூறி விட்டு அவரை பெற்றோர் வீட்டிற்கு செல்லுமாறு வேல்முருகன் கூறி உள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வாழ்க்கையை சீரழித்த வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இன்ஸ்பெக்டர் தேன்மொழி வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை தேடி வருகிறார்.
மேலும் பணி நேரத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகார் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு வந்தது. கலெக்டர் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் மோகன்ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முறைகேடு சம்பந்தமாக காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் பஞ்சாயத்து, சமயன்குடிக்காடு, ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 39). இவர் வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவி ஜெயமாலா (35). அந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அதில் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர் கிராம கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி வைத்து முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டமும் நடைபெற்றது என்றும், அதில் ஏதும் முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் மற்றொரு பிரிவினர் ஒரு பிரிவினரிலிருந்து ஒரு சாராரை மட்டும் சேர்த்துக்கொண்டும் பலரை சேர்க்காமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ நாளன்று ஜெயமாலா தனியாக வீட்டில் இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த செல்லையன் மகன்கள் பழனிவேல், ஆறுமுகம், சுமுக்கன் மகன் சொட்டு என்கிற மதியழகன், சிங்காரம் மகன் காசி என்கிற காசிநாதன், வைத்திலிங்கம் மகன் அல்லிமுத்து, ராசு மகன் சேகர், சாமிக்கண்ணு மகன் குமார் மற்றும் மூவர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டின் உள்ளே நுழைந்து ஜெயமாலாவை தாக்கி மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மற்றொரு பிரிவினர் தூண்டியதால்தான் தன்னை தாக்கியதாகவும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்துள்ளார்.
இப்புகாரின் பேரில் ஒரத்தநாடு ஏட்டு ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேற்படி சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜெயமாலா அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரத்தநாடு அருகே பெண்ணை 10 பேர் கும்பல் மானபங்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 52). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.
மனைவி இறந்ததால் தன்னால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று கூறி, அலகுமலையில் உள்ள தனியார் விடுதியில் 3 பேரையும் சேர்த்தார்.அவ்வப்போது சென்று அவர்களை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி விடுதிக்கு சென்ற தந்தை, கோவிலுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறி, விடுதியில் இருந்து தனது 3 குழந்தைகளையும் அழைத்து வந்தார். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் குழந்தைகளை விடுதியில் கொண்டு விட்டுள்ளார். அப்போது அவரின் 12 வயது மகள் அழுதபடியே இருந்தார்.
விடுதி நிர்வாகிகள், அந்த சிறுமியிடம் விசாரித்தனர். தங்களை அழைத்து சென்ற தந்தை திருப்பூர் காதர்பேட்டையில் சரக்கு ஆட்டோவில் மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகிகள் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், 2 மகன்கள் முன்னிலையில் தந்தையே தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தந்தையை கடந்த 13.2.2014- அன்று போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உரியன் கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகளிம் அதே ஊரை சேர்ந்த சிவா (18), வசந்த் (19) ஆகிய 2 பேரும் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தனர்.
2 பேரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து அவரது தாயாரிடம் கூறினார்கள்.
மாணவிகளின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த வாலிபர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சாந்தா வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
திருவள்ளூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும், 17 வயது சிறுமியும் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியேறினர். இருவரும் கடலூரில் இருந்து சென்னைக்கு பஸ்சில் ஏறி சென்றனர்.
அந்த பஸ்சில் திருவள்ளூர் அடுத்த மேலானூரை சேர்ந்த ராஜா என்பவர் பயணம் செய்தார். அப்போது சிறுமிகள் பேசிக் கொண்டிருப்பதை ராஜா கவனித்தார். சிறுமிகள் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறியதை அறிந்து கொண்ட ராஜா அவர்களிடம் பேச்சு கொடுத்தார்.
தனக்கு கம்பெனிகளில் வேலை செய்யும் நண்பர்கள் நிறைய பேரை தெரியும். அவர்களிடம் சொல்லி உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். அவரது பேச்சை சிறுமிகள் நம்பினர். இதையடுத்து சிறுமிகளை பஸ்சில் இருந்து இறக்கி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அப்போது ராஜா தனது நண்பர்களிடம் வேலை தொடர்பாக பேசினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த சிறுமிகள் இருவரும் தாங்கள் ஊருக்கே செல்வதாக கூறினர். தங்களை திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கொண்டு சென்று விடும்படி ராஜாவிடம் கூறினார்கள்.
இதையடுத்து இளம்பெண் ஒருவரை முதலில் பஸ்நிலையத்துக்கு அழைத்து சென்றுவிட்டுள்ளார். பின்னர் மற்றொரு பெண்ணை பஸ்நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
அப்போது வெயில் அதிகமாக இருப்பதாக கூறி ஈக்காடு கண்டிகை அருகே உள்ள சவுக்கு தோப்பில் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்று அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த பெண்ணை ராஜா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் பதறிய அந்த பெண் அழுது கொண்டே சவுக்கு தோப்பில் இருந்து வெளியே ஓடிவந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராஜாவை மடக்கி பிடித்தனர்.
அந்த பெண்ணிடம் விசாரித்த போது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து ராஜாவை புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இளம்பெண்கள் இருவரையும் போலீசார் மீட்டனர். அவர்களது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
தெலங்கானாவின் யாதகிரி புவனகிரி மாவட்டம் ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமானார். அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் சிறுமியின் கைப்பை பாழடைந்த கிணறு ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றை ஆய்வு செய்தபோது, அதில் மாயமான சிறுமியின் உடல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மற்றொரு கிணற்றில் சோதனையிட்டபோது, மேலும் ஒரு சிறுமியின் எலும்புகூடு கைப்பற்றப்பட்டது. இதேபோல கடந்த 4 ஆண்டுகளாக மேலும் சில பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தகவலை அறிந்து ஆத்திரமடைந்த ஊர் மக்கள் சீனிவாசன் வீட்டை தீயிட்டு கொளுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீனிவாசனின் குடும்பத்தினர் ஏற்கனவே ஊரைவிட்டு சென்றுவிட்டதால் அவர்கள் உயிர்தப்பினர். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர். மாவட்ட கலெக்டர் அந்த கிராமத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். #TelenganaTwinMurders
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பொன்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 27). இவர் சென்னையில் கைப்பை தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வந்தார்.
அப்போது பொன்னம் பூண்டி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பள்ளி விட்டு வீடு திரும்பிய அந்த மாணவியை ரகுநாதன் ஏமாற்றி தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரி டம் கூறி அழுதார். அதனை தொடர்ந்து அவர்கள் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரகுநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பின்னர் கைதான ரகுநாதனை விழுப்புரம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ரகுநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்