என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர் கோவை சிறையில் அடைப்பு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 24). இவர் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மலையம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சுபாசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார். இதைத்தொடர்ந்து சுபாஷ் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்