search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை சிறையில் அடைப்பு
    X
    கோவை சிறையில் அடைப்பு

    சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர் கோவை சிறையில் அடைப்பு

    ஈரோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 24). இவர் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். 

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மலையம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

    இந்த வழக்கில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சுபாசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார். இதைத்தொடர்ந்து சுபாஷ் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×