search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur Women's Court"

    பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருப்பூர்:

    திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 52). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.

    மனைவி இறந்ததால் தன்னால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று கூறி, அலகுமலையில் உள்ள தனியார் விடுதியில் 3 பேரையும் சேர்த்தார்.அவ்வப்போது சென்று அவர்களை பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி விடுதிக்கு சென்ற தந்தை, கோவிலுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறி, விடுதியில் இருந்து தனது 3 குழந்தைகளையும் அழைத்து வந்தார். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் குழந்தைகளை விடுதியில் கொண்டு விட்டுள்ளார். அப்போது அவரின் 12 வயது மகள் அழுதபடியே இருந்தார்.

    விடுதி நிர்வாகிகள், அந்த சிறுமியிடம் விசாரித்தனர். தங்களை அழைத்து சென்ற தந்தை திருப்பூர் காதர்பேட்டையில் சரக்கு ஆட்டோவில் மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகிகள் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், 2 மகன்கள் முன்னிலையில் தந்தையே தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தந்தையை கடந்த 13.2.2014- அன்று போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    காங்கயம் அருகே மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் எபிநேசன் துரைராஜ் (44) வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். அவருடன் முதல் மகளும் சென்று விட்டார். 13 வயதான 2-வது மகள் தந்தையுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2015-ம் ஆண்டு 13 வயது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த விவரம் சைல்டு லைன் அமைப்பினர் கவனத்துக்கு தெரிய வந்தது. அவர்கள் குழந்தையை சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டனர்.

    சிறுமியிடம் விசாரித்த போது அவரது தந்தை எபிநேசன் துரைராஜ் பல முறை பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில நடைபெற்றது.

    இதில் எபிநேசன் துரைராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு ஒவ்வொரு பிரிவின் கீழும் தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 3 ஆயுள் தண்டனைகளும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து எபிநேசன் துரை ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    ×