என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டிவனம் அருகே பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்- தனியார் நிறுவன ஊழியர் கைது
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பொன்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 27). இவர் சென்னையில் கைப்பை தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வந்தார்.
அப்போது பொன்னம் பூண்டி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பள்ளி விட்டு வீடு திரும்பிய அந்த மாணவியை ரகுநாதன் ஏமாற்றி தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரி டம் கூறி அழுதார். அதனை தொடர்ந்து அவர்கள் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரகுநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பின்னர் கைதான ரகுநாதனை விழுப்புரம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ரகுநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்