search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missing"

    கூடலூர் ஊராட்சிகுழந்தையுடன் பெண் மாயம்

    கரூர்,  

    குளித்தலை அடுத்த, கூடலூர் ஊராட்சி ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் (வயது 37), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (22).

    இவர்களுக்கு விகா என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த, 5-ந் தேதி காலை, 11 மணியளவில் பாக்கியலட்சுமி தன் குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை.

    பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம், ராயனுார் வேலக வுண்டனுாரை சேர்ந்தவர் ஆனந்த் பொன்ராஜ் (வயது 41). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளில் தேடிய போது அவர் அங்கும் செல்லவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கேன்டில் டிரஸ்ட் காப்பகத்தில் கடந்த, 2022 முதல் தங்கியிருந்தான்.
    • தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர், 

    கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் கரூர் அருகே காந்தி கிராமத்தில் உள்ள கேன்டில் டிரஸ்ட் காப்பகத்தில் கடந்த, 2022 முதல் தங்கியிருந்தான். இந்நிலையில் கடந்த, 6-ந்தேதி காப்பகத்தில் இருந்து வெளியே சென்ற அவன், திரும்பி வரவில்லை. இதுகுறித்து, காப்பகத்தின் இயக்குனர் தர்மராஜ், கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவன் இறந்தது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த பெண் சம்பவத்தன்று தனது 11 வயது மகன் சக்திவேல் உடன் மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகே ஸ்வரன் மனைவி சத்யா (வயது 28). இவர்களுக்கு சக்திவேல், ராமர்லெட்சு மணன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரன் கடந்த 1 வருட த்துக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது முதல் சத்யா தனது 3 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கணவன் இறந்தது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த சத்யா சம்பவத்தன்று தனது மகன் சக்திவேல் (வயது 11) உடன் மாயமானார்.

    அவரது தாய் மாரியம்மாள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரை யும் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காஜா மைதின் மகள் சூரத் நிஷா (18). இவர் உத்தமபாளை யத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். பல இடங்க ளில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தந்தை உத்தம பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    • காதல் திருமணம் செய்த இளம் பெண் மாயம்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி,

    திருச்சி செந்தண்ணீர்புரம் 3-வது தெருவை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி நித்யா (வயது 38).

    இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு நித்ராதேவி என்கிற ஒரு மகள் உள்ளார். அவர் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் ஈரோட்டில் உள்ள சகோதரி வீட்டில் நித்யா விட்டுவிட்டு திருச்சிக்கு திரும்பியவர் வீடு திரும்பவில்லை. இது குறித்துஅவரது கணவர் தனபால் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 25 ) என்பவர் திருச்சி காஜாபேட்டையில் தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோது மாயமானார். இது குறித்து அவரது தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? எப்படி மாயமானார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தும் ரேவதியை கண்டுபிடிக்க முடியவில்லை

     வேலா யுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே குட்டைக்கடை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் தனபாலன் (வயது 67) .இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ரேவதி (48). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தனபாலனின் மகள் சற்று மன வளர்ச்சி குன்றியவராக இருந்து வருகிறார். மனவளர்ச்சி குன்றிய மகளை தாயார் ரேவதி கவனித்து வந்தார். இந்நிலையில் ரேவதி தனது மனவளர்ச்சி குன்றிய மகளை தன்னால் இனி பார்த்துக் கொள்ள முடியா து என்று தொடர்ந்து கூறி வந்தார்.

    அதற்கு விரைவில் ஒரு முடிவு செய்வதாகவும், மாற்று ஏற்பாடு செய்வ தாகவும் அவரது கணவர் தனபாலன் தெரி வித்துள்ளார். இந்நிலையில் தனபாலன் வீட்டிலிருந்து வெளியில் சென்று விட்டு பின்பு வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டில் இருந்து அவரது மனைவி ரேவதியை காணவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரித்தும் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விசாரித்தும், பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தும் ரேவதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    ரேவதி வீட்டிற்கும் வரவில்லை .அதனால் அதிர்ச்சி அடைந்த தனபாலன் இதுகுறித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரேவதி வீட்டில் இருந்து தானாக எங்காவது சென்று விட்டாரா ? அல்லது வீட்டில் இருந்தபோது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? எப்படி மாயமானார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

    காங்டாக்:

    வடக்கு சிக்கிம் மாநிலம் லோனாக் ஏரி பகுதியில் கடந்த 4-ந்தேதி அதிகாலை மேகவெடிப்பால் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது.

    இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுங்தாங் பகுதியில் நீர் மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக மங்கன், கேங்டாக், நாம்லி,பாக்யாங் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. தீஸ்தா ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல பாலங்கள் இடிந்தது.

    பர்டாங் என்ற இடத்தில் 23 ராணுவ வீரர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டனர். ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் வெள்ளத்தோடு வெள்ளமாக சென்றது. இதையடுத்து மீட்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. மாயமானவர்களை தேடும் பணி நடந்தது. இதில் பலர் சடலமாக மீட்கப்பட்டனர்.

    கடந்த 3 நாட்களில் சிக்கிமின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளம் தீஸ்தா ஆற்றில் இருந்து ராணுவ வீரர்கள் உள்பட 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் வெள்ளத்தில் சிக்கி 53 பேர் இறந்துவிட்டதாக அம்மா நில அரசு தெரிவித்துள்ளது.

    இன்னும் 140 -க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அம்மாநில முதல் - மந்திரி பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

    லாச்சென் மற்றும் லாச்சுங் பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கி தவிக்கும் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகளை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் இந்திய விமான படையை சேர்ந்த ராணுவ ஹெலி காப்டர்கள் பயன்படுத்தபட்டு உள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    மங்கன் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னும் 5 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கூலித் தொழிலாளி மாயம்

       வேலாயுதம்பா ளையம், 

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ ராமாபுரம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மணிமுத்து( வயது 35). இவர் கரூரை சேர்ந்த ஒரு தனியார் தார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது மணிமுத்து, கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே சின்ன ரெங்க ம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    அந்தப் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாய்த்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக கோபித்துக் கொண்டு மணி முத்து விட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மணி முத்துவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர் வீடுகளிலும், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மணி முத்துவை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமுத்து தானாக எங்காவது சென்று விட்டாரா ? அல்லது வேறு காரணத்தால் அவரை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கந்தர்வகோட்டையில் இருந்து புறப்பட்டு திருச்சியில் உள்ள கல்லூரிக்கு சென்ற மாணவிகள் மாயமானார்கள்
    • கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை சின்ன அரிசிக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா பஷீர் மகள் யாஸ்மீனா (வயது 19). அதே பகுதியை சேர்ந்த அப்துல் காதர் மகள் சபீனா (18) இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கல்லூரி விடுமுறை முடிந்து கடந்த 2-ந் தேதி காலை இவர்கள் இருவரும் கந்தர்வகோட்டையில் இருந்து திருச்சி கல்லூரிக்கு சென்றனர். ஆனால் மாணவிகள் இருவரும் கல்லூரிக்கு வரவில்லை என்று பெற்றோருக்கு தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவிகளை அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். எந்த தகவலும் கிடைக்காததால் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி-மருந்துகடை ஊழியர் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகள் மாரிசெல்வி (வயது 22). இவர் நெல்லை அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் எப்பொதும் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த மாரிசெல்வி திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதைத் தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருந்துகடை ஊழியர்

    விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பிரகாஷ் ராஜ் (26) மருந்தாளுனர் படிப்பு முடித்துவிட்டு சூலக்கரையில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனது கல்வி சான்றிதழ்களை புதுப்பிப்பதற்காக கோவை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

    பின்னர் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் விசாரித்தபோது விரைவில் வந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் எங்கு சென்றார் என விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் ஜவகர்ராஜ். இவரது மனைவி எலிசபெத் ராணி (40). தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்ல வில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதைத் தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு ஜவகர் ராஜ் ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.

    திருச்சியில் 10-ம் வகுப்பு மாணவன் மாயம்

    திருச்சி, 

    திருச்சி ஏர்போர்ட் கலைஞர் நகரை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். இவரது மகன் அஸ்வின் ராஜ் (வயது 14) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் படிப்பில் சரியாக அஸ்வின் ராஜ் கவனம் செலுத்தாத காரணத்தால் அவரது சகோதரர் தனுஷ் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஸ்வின் ராஜ் வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்றார்.

    பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்து எங்கும் கிடைக்கவில்லை இது குறித்து அவரது சகோதரர் தனுஷ் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவிதாவுக்கும், வெற்றிவேல் என்பவருக்கும் 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
    • வீட்டில் இருந்து செல்போனுடன் சென்ற பவிதா மீண்டும் வீடு திரும்பவில்லை.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பை சேர்ந்தவர் பூமிநாதன் மகள் பவிதா (வயது29). இவருக்கும், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். வெற்றிவேல் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இதனால் பவிதா, ராமகிருஷ்ணாபுரத்தில் தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் வெற்றிவேலுக்கும், பவிதாவிற்கும் செல்போனில் பேசும் போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பவிதா வன்னியன்குடியிருப்பில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து செல்போனுடன் சென்ற பவிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் பவிதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரது தாயார் சாந்தி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி மாயமான பவிதாவை தேடி வருகிறார்.

    • திருச்சி ராம்ஜிநகரில் இளம்பெண் மாயம்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     ராம்ஜிநகர்

    திருச்சி அருகே உள்ள ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்தவர் சாந்தி (வயது 50). இவரது கணவர் ராமச்சந்திரன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் தீபிகா (26) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தீபிகா கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற தீபிகா வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்து அக்கம் பக்கத்தில் தேடிய போது அவர் எங்கும் காணவில்லை. தனது மகள் காணாமல் போனது குறித்து சாந்தி ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×