என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி செந்தண்ணீர்புரத்தில் காதல் திருமணம் செய்த இளம் பெண் மாயம்
- காதல் திருமணம் செய்த இளம் பெண் மாயம்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி செந்தண்ணீர்புரம் 3-வது தெருவை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி நித்யா (வயது 38).
இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு நித்ராதேவி என்கிற ஒரு மகள் உள்ளார். அவர் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் ஈரோட்டில் உள்ள சகோதரி வீட்டில் நித்யா விட்டுவிட்டு திருச்சிக்கு திரும்பியவர் வீடு திரும்பவில்லை. இது குறித்துஅவரது கணவர் தனபால் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 25 ) என்பவர் திருச்சி காஜாபேட்டையில் தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோது மாயமானார். இது குறித்து அவரது தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்