கூடலூரில் கணவர் இறந்ததால் குழந்தையுடன் பெண் மாயம்

கணவன் இறந்தது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த பெண் சம்பவத்தன்று தனது 11 வயது மகன் சக்திவேல் உடன் மாயமானார். புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகே ஸ்வரன் மனைவி சத்யா (வயது 28). இவர்களுக்கு சக்திவேல், ராமர்லெட்சு மணன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரன் கடந்த 1 வருட த்துக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது முதல் சத்யா தனது 3 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கணவன் இறந்தது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த சத்யா சம்பவத்தன்று தனது மகன் சக்திவேல் (வயது 11) உடன் மாயமானார்.

அவரது தாய் மாரியம்மாள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரை யும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com