search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missing"

    • எல்லகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி திடீர் மாயமானார்
    • குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கள்ளை பஞ்., எல்லகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50), கூலி தொழிலாளி. இவரது மகன் பழனிவேலு, கடந்த, 10-ந் தேதி காலை, 10 மணியளவில் தோகைமலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை.பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து கணேசன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்.,ராக்கம்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 48), கூலி தொழிலாளி. இவரது மகள் அந்த பகுதி பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இவரை காணவில்லை. இதுபற்றி கருப்பன் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டியில் அடைக்கப்பட்ட ஆடு ஒன்றை காணவில்லை
    • போலீசில் புகார் கொடுத்தார்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை


    கரூர், 


    க.பரமத்தி அடுத்த நஞ்சைகாள குறிச்சி பகுதியில் வசிப்பவர் புக்கராண்டி (வயது 60). இவர் சம்பவத்தன்று பட்டியில் அடைக்கப்பட்ட தனது ஆடு ஒன்றை காணவில்லை என சின்னதாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்சக்தி. தொழிலாளி. இவரது மனைவி தவசிகனி (வயது 24).
    • வீட்டில் இருந்த தவசிகனி தனது நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, தனது 3 வயது மகனுடன் மாயமானார்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்சக்தி. தொழிலாளி. இவரது மனைவி தவசிகனி (வயது 24). சம்பவத்தன்று வேல்சக்தி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த தவசிகனி தனது நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, தனது 3 வயது மகனுடன் மாயமானார்.

    வீட்டிற்கு திரும்பி வந்த வேல்சக்தி மனைவி மற்றும் மகனை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான தவசிகனியை தேடி வருகின்றனர்.

    • தோகைமலை அருகே திருமணம் ஆன 5 மாதத்தில் தந்தை வீட்டிற்கு வந்த பெண் மாயமானார்
    • தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், 

    தோகைமலை அருகே தெற்கு வருந்திப்பட்டியில் திருமணம் ஆன 5 மாதத்தில் தந்தை வீட்டிற்கு வந்த பெண் மாயமானார்.

    தோகைமலை அருகே தெற்கு வருந்திப்பட்டி வீரமலை என்பவரது மகள் சரண்யா (வயது 22). இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கீழக்கல்மேடு பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரை திருமணம் செய்து உள்ளனர். குமரேசன், தற்போது காரைக்கால் பகுதியில் வெல்டி ங்வேலை செய்கி றார்.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதி, தோகைமலை அருகே வருந்திப்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சரண்யா வந்ததாக தெரிகிறது. பின்னர் அன்று இரவு வீட்டில் தூங்கிய சரண்யா, திடீர் என்று மாயமாகி உள்ளார். அதி காலை 5 மணிக்கு சரண்யா வின் சகோதரர் சக்திவேல் எழுந்து பார்த்த போது தூங்கிக்கொண்டு இருந்த சரண்யா மாயமா னதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தங்களது உறவி னர்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் சரண்யா கிடைக்கவில்லை.

    இதனால் தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற்று 5 மாதத்தில் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெவ்வேறு சம்பவம்
    • திருச்சியில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மாயம்
    • போலீசார் விசாரணை


    திருச்சி,


    திருச்சி சுப்பிரமணியபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய அமல்தாஸ். இவரது மனைவி இந்திரா பிரியதர்ஷினி (வயது 34) இவர் கருரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி திருச்சி மத்திய பேருந்து சென்றவர் கரூர் போய் சேரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆரோக்கிய அமல்தாஸ் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திரா பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.


    இதே போன்று ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் சேர்ந்தவர் ரெங்கன் இவரது மகள் பூமாதேவி ( 14) இவர் ஸ்ரீரங்கம்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் . சம்பவத்தன்று அவரது தாய் மாரியாயி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது மகள் பூமாதேவி காணவில்லை.


    பல இடங்களில் தேடிப் பார்த்தோம் இன்னும் கிடைக்கவில்லை. இது குறித்து மாரியாயி ஸ்ரீரங்கம் அரசு போலீசில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூமாதேவியை கேடி வருகின்றனர்.


    திருச்சி பொன்மலை சீதாபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் ( 69) சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜோசப் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் ஆரோக்கியசாமி, பொன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.





    கரூரில் கணவனை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்

    கரூர்,  

    கரூர் மாவட்டம், சணப்பிரட்டி வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்த, ஜெயகாந்தன் மனைவி மதுமதி (வயது 26) இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த, 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுமதி, திரும்பி வர வில்லை.

    உறவினர்களின் வீடுகளுக்கும், மதுமதி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் ஜெயகாந்தன், போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுமதி எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகின்றனர்.

    • தூத்துக்குடி ஜெப கூட்டம்
    • ஜெப கூட்டத்திற்கு சென்ற தாய்-மகன் மாயம்


    திருச்சி, 


    திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் ராஜ். இவரது மனைவி ஜெயராணி (வயது 57). இந்த தம்பதியரின் மகன் அந்தோணி விஜய் (27).


    தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயராணி, தனது மகன் ஆண்டனி உடன் சென்றார்.பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஜெயராணியின் மூத்த மகன் ஆரோக்கிய பெலிக்ஸ் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் தாய் மகன் இருவரையும் தேடி வருகின்றனர்


    • திருச்சியில் மாயம்
    • 2 கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்


    திருச்சி


    துறையூர் சிங்களாந்தபுரம் முத்துராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் சந்துரு (வயது19 ). இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.


    2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற அந்த மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் இல்லை. அதைத் தொடர்ந்து பெரியண்ணன் துறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.


    உப்பிலியபுரம் கொப்பம்பட்டி ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகள் நித்யா (19).இவர் துறையூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற அவர் மாலை வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    நர்சிங் மாணவி


    திருச்சி வையம்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை. இவர் வையம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தாயார் தெக்கம்மாள் வையம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.


    போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.


    இதனை போல மணச்சநல்லூர் திருப்பட்டூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகள் அபிப்பிரியா (19).


    இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படித்து வந்தார். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அபிப்பிரியா மாயமானார். இது குறித்து அவரது சகோதரர் கண்ணன் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைய நடத்தி வருகிறார்கள்.





    • கரூர் ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,  

    கரூர் ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67) அரிசி கடை உரிமையாளர். கடந்த 11-ந்தேதி வீட்டில் இருந்து அரிசி கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள், நண்பர்களது வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வராஜின் மனைவி மணிமேகலை, போலீசில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தொட்டியில் கிடந்தது எலும்புதானா ? அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அதிகாரிகள் விரைந்து கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்டது காளிபாளையம் கிராமம்.

    இந்த கிராமத்தின் மேற்கு பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து காளிபாளையம் கிராமம் முழுவதற்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேல்நிலைதொட்டி பல நாட்களாகவே மூடி இல்லாமல் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே இருக்கிறது.

    நேற்று காலை வெள்ளமடை ஊராட்சி சார்பில் பணியாளர்கள் சிலர் மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்வதற்காக வந்தனர்.அவர்கள் தொட்டியின் மீது ஏறி உள்ளே சென்று சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.அப்போது தொட்டிக்குள் எலும்புதுண்டுகள் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியாகினர்.

    உடனடியாக சம்பவம் குறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா, ஊராட்சித்தலைவர் பிரபாகரன் உட்பட வார்டு உறுப்பினர்கள் விரைந்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் தொட்டியை பார்த்தபோது அங்கிருந்த எலும்பு துண்டுகள் மாயமாகி விட்டன. அக்கம்பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    நாய்கள் அதனை எடுத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. இருந்தபோதிலும் அதனை தேடும் பணி நடக்கிறது.

    இந்த தகவல் அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் நேரில் வந்து விசாரணை செய்தார். தொடர்ந்து மேல்நிலை தொட்டிக்கு மூடி போட ஏற்பாடு செய்தார்.

    இதனை தொடர்ந்து வட்டார சுகாதார ஆய்வாளர் தலைமையிலான சுகாதார குழுவினர் வந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பிளிசிங் பவுடர் அடித்தனர். மேலும் தொட்டியில் கிடந்தது எலும்புதானா ? அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் குடிநீர் தொட்டியின் முன்பு திரண்டனர். பின்னர் தொட்டியில் கிடந்த எலும்பை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்கு மார், பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொட்டியில் கிடந்த எலும்பு எப்படி மாயமானது என்பது தெரிய வேண்டும். அதனை உடனே கண்டு பிடித்து தர வேண்டும். அதுவரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என மக்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் விரைந்து கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • வடிவேல்-மதிஷாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
    • மதிஷாவை வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் வடிவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மதிஷா (23). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் மதிஷா கடந்த 11-ந் தேதி வள்ளியூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் மதிஷா குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை. இதையடுத்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்ம ராஜ் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி மாயமான மதிஷாவை தேடி வரு கின்றனர்.

    • கரூரில் வியாபாரி உள்பட 2 பேர் மாயம்
    • பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், தரகம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38), கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி மனைவி சித்ராதேவி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை தேடிவருகின்றனர். இதே போல் கரூர் சணப்பிரட்டி அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 43), துணி வியாபாரியான இவர், சம்பவத்தன்று வியாபாரத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி யசோதை கொடுத்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×