என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருக்குறுங்குடி அருகே இளம்பெண் மாயம்
- பவிதாவுக்கும், வெற்றிவேல் என்பவருக்கும் 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
- வீட்டில் இருந்து செல்போனுடன் சென்ற பவிதா மீண்டும் வீடு திரும்பவில்லை.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பை சேர்ந்தவர் பூமிநாதன் மகள் பவிதா (வயது29). இவருக்கும், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். வெற்றிவேல் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இதனால் பவிதா, ராமகிருஷ்ணாபுரத்தில் தனது மகன்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் வெற்றிவேலுக்கும், பவிதாவிற்கும் செல்போனில் பேசும் போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பவிதா வன்னியன்குடியிருப்பில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து செல்போனுடன் சென்ற பவிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் பவிதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரது தாயார் சாந்தி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி மாயமான பவிதாவை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்