search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mehul Choksi"

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்பாக மெகுல் சோக்சியின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என நிதி மோசடி தடுப்பு சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. #PNBFraud #MehulChoksi #PMLA
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரும், தொழிலதிபருமான மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.



    இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் இருவரின் சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. இதில் மெகுல் சோக்சியின் அடுக்குமாடி வீடுகள், அலுவலகங்கள், நிலம் என ரூ.1,210 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை பி.எம்.எல்.ஏ. ஆணையம் விசாரித்தது.

    இதில் அமலாக்கத்துறை அளித்த சான்றுகள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலித்த இந்த ஆணையம், முடக்கப்பட்ட மெகுல் சோக்சியின் சொத்துகள் அனைத்தும் பணமோசடி சொத்துகள் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்து உள்ளது. எனவே இந்த முடக்க நடவடிக்கை தொடர வேண்டும் என உத்தரவிடுவதாகவும் ஆணையம் அறிவித்தது.

    மெகுல் சோக்சியின் முடக்கப்பட்ட சொத்துகளில், விழுப்புரத்தில் உள்ள நிலமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  #PNBFraud #MehulChoksi #PMLA
    வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் சட்டவிரோத பங்களா இடிக்கப்படும் என மராட்டிய மந்திரி ராம்தாஸ் கதம் தெரிவித்துள்ளார். #NiravModi #RamdasKadam #PNBScam #MehulChoksi
    மும்பை:

    மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக், முருட் ஆகிய கடலோர பகுதிகளில் கட்டப்பட்டு இருக்கும் சட்டவிரோத பங்களாக்களை அகற்ற மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.



    இது குறித்து மராட்டிய மந்திரி ராம்தாஸ் கதம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

    அலிபாக் பகுதியில் வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 121 பங்களாக்களும், முருட் பகுதியில் 151 பங்களாக்களும் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளன. அதை அகற்றுவதற்கு சிலர் மாவட்ட கோர்ட்டுகளில் தடை உத்தரவு பெற்று உள்ளனர்.

    எனவே இது தொடர்பான அனைத்து வழக்குகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாற்றப்படும். அங்கு 3 மாதங்களுக்குள் நல்ல தீர்வு காணப்படும். அதன் பிறகு அங்குள்ள சட்டவிரோத பங்களாக்கள் அகற்றப்படும். நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் பங்களாக்களை அமலாக்க பிரிவிடம் தகவல் தெரிவித்து இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.   #NiravModi #RamdasKadam #PNBScam #MehulChoksi
    வங்கிக்கடன் மோசடியில் சிக்கி ஆண்டிகுவாவில் தற்போது வசிக்கும் மெஹுல் சோஸ்கியை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா அந்நாட்டு அரசிடம் முறைப்படி கோரிக்கை சமர்பித்துள்ளது. #MehulChoksi
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி கடந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு ஆண்டிகுவா அரசு பதில் தெரிவித்தது. 

    மெஹுல் சோஸ்கிக்கு குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் இந்திய விசாரணை அமைப்புகள் மெஹுல் சோஸ்கிக்கு உதவியதால் ஆண்டிகுவா அரசு குடியுரிமை வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. 

    இதற்கிடையே, சோஸ்கியை இந்தியா கொண்டு வருவதற்கு சிபிஐ உள்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி கோரிக்கை விடுத்தது. உள்துறை அமைச்சகம் இதற்கான கடிதத்தை வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியது. 

    இந்நிலையில், சோஸ்கியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆண்டிகுவா அரசுக்கு முறைப்படி மத்திய அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    வங்கியில் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மெஹுல் சோஸ்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இந்திய விசாரணை அமைப்புகள் கேட்டுக்கொண்டதாக ஆண்டிகுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #MehulChoksi #PNBScam
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். 

    இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி கடந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு ஆண்டிகுவா அரசு பதில் தெரிவித்தது. 

    இந்நிலையில், மெஹுல் சோஸ்கிக்கு குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களை டெய்லி அப்சர்வர் என்ற அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில், பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


    2018 ஏப்ரலில் ஆண்டிகுவா பிரதமரை சந்தித்த மோடி

    அதாவது, இந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பிஎன்பி மோசடி குறித்த புகார் சிபிஐ.யில் அளிக்கப்படுகிறது. ஆனால், 4-ம் தேதியே மெஹுல் சோஸ்கி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். 15-ம் தேதி ஆண்டிகுவா நாட்டின் குடிமகனாக அவர் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே மெஹுல் சோஸ்கிக்கான குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு ஆண்டிகுவா அரசு குடியுரிமை அளித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மெஹுல் சோஸ்கி மற்றும் அவரது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பெங்களூரை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு விரிவான புகார் அளித்துள்ளார். 

    ஹரி பிரசாத் புகார் அளித்த மூன்று மாதங்கள் கழித்து மெஹுல் சோஸ்கிக்கு ஆண்டிகுவா அரசு குடியுரிமை அளித்துள்ளது. மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் சோஸ்கி ஆண்டிகுவா சென்று பாஸ்போர் வரை பெற்ற பின்னரே வெளியே கசிய தொடங்கியது.

    ஆண்டிகுவாவில் சோஸ்கி குடியேறினாலும், அவர் மீது பாதகமான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என இந்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை கேட்டுக்கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
    பஞ்சாப் நேஷனல் வங்கி மோடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியை கைது செய்யுமாறு ஆண்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #PNBFraud #MehulChoksi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக ரூ.13,400 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.



    இந்தநிலையில் கரீபிய தீவு நாடான ஆண்டிகுவா-பர்புடாவின் குடியுரிமையை பெற்றுள்ளதாக மெகுல் சோக்சி கடந்த வாரம் அறிவித்தார். இதன் மூலம் அவர் ஆண்டிகுவாவில் வசித்து வருவது உறுதியாகி உள்ளது. எனவே அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி மெகுல் சோக்சியை கைது செய்யுமாறு ஆண்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆண்டிகுவா-பர்புடா அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பாக வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் தரை, கடல், வான் வழியான அவரது பயணங்களுக்கு தடை விதிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  #PNBFraud #MehulChoksi #Tamilnews
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி பெற்று மோசடி செய்த மெஹுல் சோஸ்கி அமெரிக்காவில் இருந்து ஆன்டிகுவா சென்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. #MehulChoksi #PNBScam
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். 

    இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி இந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட நிரவ்மோடி ஹாங்காங்கில் இருப்பதாகவும், அங்கிருந்து அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
    ரூ.13,000 கோடி கடன் மோசடியில் சிக்கியுள்ள பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி தன்மீதான கைது உத்தரவுக்கு எதிராக மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார்.

    இதைத்தொடர்ந்து மெஹுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் விடுவிக்க முடியாத கைது வாரன்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தது.

    இந்நிலையில், தன்மீதான கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மெஹுல் சோக்சி சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #MehulChoksi #nonbailablewarrant
    வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வினியோகிக்க சர்வதேச போலிசை சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது. #NiravModi
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    நிரவ் மோடியின் மோசடி தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடி, மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா அனந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் உள்பட 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச்சென்றுவிட்டதாகவும், அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தை சுட்டிக்காட்டி பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வினியோகிக்க சர்வதேச போலிசை (இண்டர்போல்) சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது. ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது, குற்றம் சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சொந்த நாட்டுக்கு அவரை கடத்த வேண்டும் என்பதாகும். 
    துபாயில் இயங்கும் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நகைக்கடை நிறுவனத்தில் இருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 34 ஆயிரம் தங்க நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. #PNBScam #MehulChoksi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர். அவர்கள் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் சி.பி.ஐ. மும்பை கோர்ட்டில் 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. அதே சமயம் மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்களின் சொத்துகளை முடக்கி, பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் துபாயில் இயங்கும் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நகைக்கடை நிறுவனத்தில் இருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 34 ஆயிரம் தங்க நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து கொண்டு வந்து இருப்பதாகவும், விரைவில் தாங்களும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  #PNBScam #MehulChoksi
     
    ×