என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » megha akash
நீங்கள் தேடியது "Megha Akash"
நடிகர் சிம்புவுக்கு சினிமாவில் ரெட் கார்டு போடப்போவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு சிம்பு பாடல் மூலம் பதிலளித்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
நடிகர் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார்.
இந்த புகார் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) போடப்போவதாக செய்திகள் வெளியாயின.
நடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சிம்பு. எனவே விஷால் சிம்புவை பழி வாங்குகிறார் என்று சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.
தற்போது மீண்டும் கைவசம் நிறைய படங்களோடு வலம் வருகிறார் சிம்பு. சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்து வரும், ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படம் உருவாகிறது.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ படம் தான் தமிழில் இந்த பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் டிரைலர் ரஜினியின் 2.0 வோடு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது.
விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.
இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வருகின்றன.
இந்த பாடல் தான் விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது. இந்த வரிகள் விஷாலை வம்புக்கு இழுப்பது போல் உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. #STR #Simbu #VanthaRajavathaanVaruven
சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீசரை ரஜினிகாந்தின் 2.0 படத்துடன் இணைக்க லைகா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR
`செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி. இயக்கும் இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மகத் ராகவேந்திரா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் டீசருக்கு சிம்பு டப்பிங் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், படத்தின் டீசர் புரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அந்த புரோமோ வீடியோவில் படத்தின் டீசர் வருகிற 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
#VandhaRajavadhanVaruven Teaser Releasing ON.....#VRVTeaser#STR#SundarC#MASS 🔥🔥🔥 https://t.co/tkgubmP7il
— Lyca Productions (@LycaProductions) November 22, 2018
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள 2.0 படம் வருகிற 29-ஆம் தேதி உலகமெங்கம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், 2.0 படத்துடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசரை இணைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR
‘அத்தாரின்டிகி தாரேதி’ தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடித்து வரும் நிலையில், இரண்டு நாயகிகளில் மேகா ஆகாஷ் ஏற்கனவே நடித்து வரும் நிலையில், மற்றொரு நாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகி உள்ளார். #STR #CatherineTresa
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியாவில் தொடங்கிய இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.
தற்போது மற்றொரு கதாநாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்குப் பதிப்பில் பவண் கல்யாண், சமந்தா, ப்ரனிதா சுபாஷ் நடித்திருந்தனர். இதில் சமந்தா கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷும், பிரணிதாவின் கதாபாத்திரத்தில் கேத்தரீன் தெரசாவும் நடிக்க உள்ளனர்.
ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்து. அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கேத்தரீன் தெரசா இணைய உள்ளார். சிம்புவுடன் முதன்முறையாக இணைந்தாலும் கேத்தரீன், ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் `கலகலப்பு 2' படத்தில் நடித்துள்ளார். இது தவிர `நீயா 2' படத்தில் ஜெய்யுடன் கேத்தரீன் தெரசா நடித்து வருகிறார். #STR #MeghaAkash #CatherineTresa
எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங் படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷ், ரஜினியுடன் நடிப்பது மூலம் கனவு நினைவானது என்று கூறியிருக்கிறார். #Rajini #MeghaAkash
ஒரு பக்க கதை படத்துக்காக முதலில் ஒப்பந்தம் ஆனவர் மேகா ஆகாஷ். அந்த படம் வெளியாவதற்குள் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘பூமராங்’ என 2 படங்களில் நடித்துவிட்டார்.
அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தில் ஒரு வேடத்தில் நடித்து வருகிறார். ரஜினியால் காப்பாற்றப்படும் இளம் ஜோடியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ் ரஜினியுடன் பங்கேற்கும் காட்சிகள் நேற்று முதல் படமாக்கப்பட்டு வருகின்றன.
அப்போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்து இருக்கும் மேகா ஆகாஷ், என் கனவுகள் நிறைவேறிவிட்டன. நட்சத்திரத்தின் அருகில் நிற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்று துவங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பில் சிம்பு புதிய தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். #STR #Simbu
திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அத்தாரின்டிகி தாரேதி’. பவன் கல்யாண் - சமந்தா - பிரணிதா இணைந்து நடித்த அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகிய நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்று துவங்கியிருக்கிறது.
படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்புவின் புதிய தோற்றம் தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். சமந்தா கதாபாத்திரம் தெலுங்கில் கவனம் பெற்ற நிலையில், மேகா ஆகாஷ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #STR #Simbu #AttarintikiDaredi
தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்திருக்கும் மேகா ஆகாஷ், ஒருத்தரிடம் மட்டும் இவ்வளவு திறமையா.. என ட்விட் செய்திருக்கிறார். #MeghaAkash
தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். இவர் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பாடல்கள் வெளியானதால், தமிழ் ரசிகர்களிடையே மேகா ஆகாஷ் மிகவும் பிரபலமானார்.
தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தனுஷுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மேகா ஆகாஷ், என்னுடைய திறமையான சக நடிகர். இவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இவர் ஒருத்தரிடம் மட்டுமே நிறைய திறமைகள் இருக்கிறது என்று புகழ்ந்து ட்விட் செய்துள்ளார்.
With my brilliant costar. Learnt so much from him. How much talent can one person have 🤔 #myfangirlmoment#enainokipaayumthotapic.twitter.com/hpZnGUX3F9
— Megha Akash (@akash_megha) September 5, 2018
மேகா ஆகாஷ் நடிப்பில், ‘ஒரு பக்க கதை’, ‘பூமராங்’, ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார்.
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்கவிருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். #STR #Simbu #MeghaAkash
திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அத்தாரின்டிகி தாரேதி’. பவன் கல்யாண் - சமந்தா - பிரணிதா இணைந்து நடித்த அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க உள்ளார்.
சுந்தர்.சி இயக்கவுள்ள இப்படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். சமந்தா கதாபாத்திரம் தெலுங்கில் கவனம் பெற்ற நிலையில், மேகா ஆகாஷ் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட உள்ளன.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #STR #Simbu #MeghaAkash #AttarintikiDaredi
தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறியுள்ள இயக்குநர் கவுதம் மேனன், படத்தின் ரிலீஸ் அறிவிப்பையும் வெளியிட்டார். #ENPT #Dhanush
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும், படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் நேற்று அறிவித்தார். படப்பிடிப்பின் கடைசி நாளான நேற்று படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய கவுதம் மேனன், இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
`கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நன்றி தனுஷ், எங்களுடன் இந்த பயணத்தில் இணைந்த சசிகுமாருக்கு மிக்க நன்றி. இனி தர்புகா சிவா, எடிட்டர் பிரவீன் படத்தை பார்த்துக் கொள்வார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சசிகுமார், தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.
அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே படங்கள் தீபாவளி ரேசில் இருந்து தள்ளிப்போனதால், விஜய்யின் சர்கார் படத்துடன் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா மோதவிருக்கிறது. #ENPT #Dhanush #SasiKumar #MeghaAakash
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. #ENPT #Dhanush
விக்ரமின் துருவ நட்சத்திரம், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன்.
இதில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில காரணங்களால் படம் முழுமையடையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் சமரசமாகித் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து, “இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடு இரவில் மும்பையில் உள்ள உயரமான கூரையில் நடைபெற்றது. அழகிய மேகா, ‘டஃப்பி’ சசிகுமார் ஆகியோர் காட்சியுடன் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்கான உங்களது (சசிக்குமார்) பங்களிப்பை பாராட்டத்தான் வேண்டும்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தனுஷ் அண்ணன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சசிகுமார் நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி.மதனுடன் இணைந்து கவுதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளது. #ENPT #Dhanush #SasiKumar #MeghaAakash
செக்கச்சிவந்த வானம், மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில், தனுஷ் பட நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. #Simbu #Dhanush
சிம்பு அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற அரசியல் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் மங்காத்தா படத்தில் அஜித் நடித்தது போன்ற நெகட்டிவ் கதாபாத்திரம். அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.
இது சமந்தா, பவன் கல்யாண் இணைந்து தெலுங்கில் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக். இந்த படத்தில் பவன் கல்யாண் மாமியாராக நதியா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். படத்தை சுந்தர்.சி இயக்குவதால் இந்த வேடத்தில் குஷ்பு நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேகா ஆகாஷ் தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர். இவை தவிர கார்த்திக் நரேனின் படம் மற்றும் கவுதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள செக்க சிவந்த வானம் செப்டம்பர் 28 ம் தேதி வெளியாக உள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
படத்தின் 90 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து விசிறி சூட் என்ற ஆடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
#VisiriSuite Releasing on July 26th at 6pm. #ENPT#EnaiNokiPaayumThota@dhanushkraja@akash_megha@DarbukaSiva@menongautham@Madan2791@senveeraasamy@divomoviespic.twitter.com/OeTIOeqYFm
— OndragaEntertainment (@OndragaEnt) July 24, 2018
தர்புகா சிவா இசையில் விசிறி, நான் பிழைப்பேனோ என இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். #ENPT #Dhanush
கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமராங்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Boomerang
கண்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பூமராங்’. அதர்வா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். குறிப்பாக, சமீபத்திய 'அர்ஜுன் ரெட்டி' ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசையமைத்திருப்பதால், பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
"மிகச்சரியாக, நேர்மையாக சொல்வதென்றால், நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பே ரதனின் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார். வெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன் செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த 'பூமராங்' குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் இயக்குனர் கண்ணன்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி படத்தின் இசையோடு சேர்த்து படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட இருக்கிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X