search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vantha Rajavathaan Varuven"

    கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று சிம்பு வெளியிட்ட வீடியோ சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

    சிம்பு தனது ரசிகர்களிடம் ’இந்த படத்தின் வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள்’ என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இது சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் ‘சிம்புவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா, விளம்பரத்துக்காகத்தான் இதை அவர் செய்கிறார் எனவும் விமர்சித்தார்கள். இதனால் கோபமான சிம்பு ‘என் கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள்’ என்று பேசி ஒரு வீடியோ வெளியிட்டார். இது சர்ச்சையானது. இதுபற்றி பால் முகவர் சங்கத்தினர் கமி‌ஷனரிடம் புகார் கொடுக்கும் வரை சென்றது.

    தேனாம்பேட்டை குடிசை பகுதியை சேர்ந்த மதன் என்ற சிம்பு ரசிகர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு சிம்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் படம் வைரல் ஆனது. அந்த ரசிகரின் வீட்டுக்கு இன்று வந்த சிம்பு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு உடைகள் வழங்கினார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.



    அப்போது ‘கட்அவுட் வைக்கும்போது ஏற்பட்ட பிரச்சினையால் என் ரசிகர் பலியானதால் நான் வேதனையில் இருந்தேன். அதனால் தான் பால் அபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். அது எல்லோரையும் சென்று சேரவில்லை. சிலர் விமர்சித்ததற்கு பதிலடியாக எதிர்மறையாக சில வி‌ஷயங்கள் கூறினேன். அது எல்லோரையும் சென்று சேர்ந்து சர்ச்சையாகிவிட்டது.

    பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன். படம் பார்க்க வருபவர்களுக்கு அண்டாவில் பால் காய்ச்சி ஊற்றுங்கள் என்றுதான் சொன்னேன். நான் மாற்றி பேசவில்லை. எல்லோரையும் மாற்றுவதற்காக பேசுகிறேன்.

    இப்போதும் சொல்கிறேன். அண்டா நிறைய பால் ஊற்றுங்கள். வாய் இல்லாத கட் அவுட்டுக்கு ஊற்றுவதற்கு பதிலாக படம் பார்க்க வரும் வாய் உள்ள மனிதர்களுக்கு ஊற்றிக் கொடுங்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கூற்றை மதிப்பவன் நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை’.

    இவ்வாறு அவர் கூறினார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven

    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

    இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் இன்று வெளியாகிறது. லைகா புரொக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #STR #VRV#MeghaAkash #STRTheKing #SundarCBonanza #VRVHappyFamily #VRVFromFeb1st 

    கேலி, கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இதுவரை செய்யாத அளவில், ‘என் கட்அவுட் வைத்து, அண்டாவில் பால் ஊற்றுங்கள்’ என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். #STR #Simbu
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

    இந்த படம் பற்றி சிம்பு கடந்த வாரம் ஒரு வீடியோவில் பேசியதாவது:-

    பட வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் எல்லாம் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள்’ என்று கூறி இருந்தார்.

    இந்த வீடியோ பதிவைக் குறிப்பிட்டு இணையத்தில் பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினர். இருப்பதே ஒன்று, இரண்டு ரசிகர்கள் தான், இதற்கே இப்படியா என்று கேலி செய்தனர்.

    இதற்கு பதிலடியாக சிம்பு தற்போது புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு வீடியோ வெளியிட்டேன். அதில் என் படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி பார்க்காதீர்கள். கட்அவுட், பேனர் எல்லாம் வைத்து பால் அபிஷேகம் எல்லாம் பண்ணாதீர்கள் என்றேன்.

    சிம்பு பேசிய வீடியோ:


    அதற்கு பதிலாக உங்களுடைய அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு ஒரு சட்டை என எடுத்துக் கொடுத்தீர்கள் என்றால் சந்தோ‌ஷப்படுவேன் எனச் சொல்லியிருந்தேன். இவருக்கு எல்லாம் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் இதை விளம்பரத்துக்காகத் தான் சொல்கிறார்கள். எனக்கு இருக்கிறதே 2, 3 ரசிகர்கள் தான் என்கிறார்கள். நாம் ஒரு தப்பு செய்தால், அதை திருத்திக் கொள்ள வேண்டும்.

    2, 3 ரசிகர்கள் தான் என்னும் போது ஏன் இதெல்லாம் பேச வேண்டும். எனவே அந்த 2, 3 ரசிகர்களுக்கு மட்டும் சொல்கிறேன். இது என்னோட அன்புக் கட்டளை. இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு பிளெக்ஸ் வையுங்கள், பேனர் வையுங்கள். கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள். வேற லெவலில் செய்யுங்கள்.

    இதைத் தான் நான் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன். எனக்கு தான் 2, 3 ரசிகர்கள் தானே இருக்கிறார்கள். அதனால் இதை செய்வது தப்பு கிடையாது. அந்த அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆளும் கிடையாது. யாரும் கேள்வியும் கேட்கப்போறது கிடையாது. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட ரிலீசுக்கு வேற லெவலில் செய்யுங்கள்.

    இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven

    `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ரெட்கார்டு பாடல் மூலம். சினிமாவில் சிம்புவுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்ட சர்ச்சைக்கு சிம்பு பதில் அளித்துள்ளார். #VanthaRajavathaanVaruven #STR
    சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து இருக்கும் படம், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இதில், சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யாகிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ரெட்கார்டு எனத் தொடங்கும் இந்த பாடலை அறிவு எழுத, சிம்பு பாடியுள்ளார்.



    ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில், சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட விவகாரத்தில், சிம்புவுக்கு நடிக்க ‘ரெட் கார்டு’ (தடை) போடப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, இந்த பாடலின் வரிகள் எழுதப்பட்டு இருப்பது, சிம்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. #VanthaRajavathaanVaruven #STR #VRV #RedCardu #MeghaAkash

    சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் முன்னோட்டம். #VanthaRajavathaanVaruven #STR
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

    சிம்பு நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ், விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், நடனம் - பிருந்தா, சதீஷ்,  கலை இயக்குநர் - குருராஜ், தயாரிப்பாளர் - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்‌ஷன்ஸ், கதை - திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், திரைக்கதை, இயக்கம் - சுந்தர்.சி.

    தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

    படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

    வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர்:

    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #VanthaRajavathaanVaruven #RedCardu
    `செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மகத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.



    படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1-ந்தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘ரெட் கார்டு’ என்ற சிங்கிள் ட்ராக்கை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிம்பு பாடியிருக்கும் இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். #VanthaRajavathaanVaruven #RedCardu
    என்னுடைய படம் வெளியாகும் போது பிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
    `செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

    படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் வைத்துள்ளார்.

    அதில், ``வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1-ந்தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிக பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும்.



    அதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட்-அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம். அது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் போன்றவற்றை வாங்கித்தந்து அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும். திரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை தான் காப்பாற்றுவேன்.

    எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும்” என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். சிம்புவின் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
    சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
    `செக்கச்சிவந்த வானம்' படத்திற்கு பிறகு சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி. இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே படத்தை பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

    வந்தா ராஜாவாதான் வருவேன், மாநாடு படங்களை முடித்த பிறகு சிம்பு அடுத்ததாக சீமான் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STR #Seeman
    செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

    இந்த படத்தை முடித்தபிறகு சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் துவங்கவிருக்கிறது. தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்திலும் சிம்பு நடிக்கவிருக்கிறார்.



    இந்த நிலையில், சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதய சூழலுக்கு ஏற்ப அந்த படம் உருவாகுவதாகவும், இதில் சிம்பு மருத்துவராக நடிப்பதாகவும் கூறப்படும் நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. #STR #Seeman

    2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில், சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. #STR #VanthaRajavathanVaruven
    பொங்கல் வெளியீடாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாக இருக்கின்றன. பேட்ட படத்துக்கு இசை வெளியீடு முடிந்து விளம்பரப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், ‘விஸ்வாசம்’ தொடர்பாக இதுவரை பாடலோ, டீசரோ வெளியிடப்படவில்லை. இந்த வாரம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆனால், பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் முடியவில்லை. அத்துடன் ரஜினி, அஜித் படங்கள் வெளியாவதால் திரையரங்குகளும் போதிய அளவில் கிடைக்காது என்பதால், பொங்கல் போட்டியில் இருந்து இந்தப் படம் விலகி இருக்கிறது. 

    சுந்தர்.சி இயக்கிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம், பவன் கல்யாண் நடித்த ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். சிம்பு ஜோடியாக கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். 



    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது ‘பொங்கல் வெளியீடு’ என குறிப்பிட்டார்கள். ஆனால் ‘பேட்ட’ படத்தின் பொங்கல் வெளியீடு அறிவிப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட டீசரில் விரைவில் வெளியீடு என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் பொங்கல் வெளியீட்டிலிருந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ விலகி உள்ளது உறுதியாகி இருக்கிறது. #STR #VanthaRajavathanVaruven

    நடிகர் சிம்புவுக்கு சினிமாவில் ரெட் கார்டு போடப்போவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு சிம்பு பாடல் மூலம் பதிலளித்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
    நடிகர் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார்.

    இந்த புகார் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) போடப்போவதாக செய்திகள் வெளியாயின.

    நடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சிம்பு. எனவே விஷால் சிம்புவை பழி வாங்குகிறார் என்று சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.

    தற்போது மீண்டும் கைவசம் நிறைய படங்களோடு வலம் வருகிறார் சிம்பு. சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்து வரும், ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படம் உருவாகிறது.

    தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ படம் தான் தமிழில் இந்த பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் டிரைலர் ரஜினியின் 2.0 வோடு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது.



    விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.

    இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வருகின்றன.

    இந்த பாடல் தான் விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது. இந்த வரிகள் விஷாலை வம்புக்கு இழுப்பது போல் உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. #STR #Simbu #VanthaRajavathaanVaruven

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட படம் பொங்கல் ரேசில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #Viswasam
    அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னணி நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்துள்ளன. அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீசாகவிருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினியின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி உள்ளிட்ட படங்கள் பொங்களுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டன.

    இவ்வாறாக பெரிய படங்கள் பொங்கலுக்கு படையெடுத்துள்ளதால் கடைசி நேரத்தில் எந்த படமாவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று உறுதி என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தகவல்படி ரஜினிகாந்தின் பேட்ட, பொங்கல் ரேசில் இருந்து விலகவிருப்பதாக கூறப்படுகிறது. 

    பேட்ட படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் பலரும் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். மேலும், தயாரிப்பாளர் சங்கமும் பேட்ட படத்தை பொங்கலில் இருந்து வேறு தேதிக்கு மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 



    எனவே பேட்ட படம் பொங்கல் ரேசில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பேட்ட பொங்கல் ரேசில் இருந்து விலகும் பட்சத்தில் மற்ற மூன்று படங்களும் திரையரங்குகளை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களும் ரிலீசாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #Viswasam

    ×