search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medal"

    • தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவி சீதளாதேவிக்கு பாராட்டு ெதரிவித்து பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார்.
    • தேவையான உதவிகளை செய்ய அரசும், ெதாண்டு நிறுவனங்களும், வசதி படைத்தவர்களும் முன்வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பிரின்ஸ் லயன்ஸ் சங்கத்தினர், தஞ்சை ஈஸ்வரிநகர் பாரதியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராம் வித்யாஸ்ரமம் நர்சரி, பிரைமரி பள்ளியில் நடந்த 75-வது சுதந்திரதின விழாவில் பங்கேற்று நேபாள நாட்டில் நடந்த இண்டர்நேஷனல் தடகள 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் வென்ற தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்த மாணவி சீதளாதேவிக்கு, பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார்.

    சங்க தலைவர் ேசாமசுந்தரம் பல்வேறு போட்டிகளில் வென்ற ஸ்ரீராம் வித்யாஸ்ரமம் நர்சரி, பிரைமரி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக நேபாள நாட்டில் நடந்த தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவி சீதளாதேவிக்கு, பாராட்டு ெதரிவித்து, பதக்கம் அணிவித்தும், கேடயம் வழங்கியும் கவுரவித்தார். அத்துடன் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இம்மாணவியை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அடுத்தடுத்து போட்டிகளில் முன்னேறி செல்வதற்கும், மேலும் பல பதக்கங்களை வெல்லவும், வாழ்த்தியதுடன் இவருக்கு தேவையான உதவிகளை செய்ய அரசும், ெதாண்டு நிறுவனங்களும், வசதி படைத்தவர்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    விழாவில் மாவட்ட நிர்வாக அலுவலர் லயன் டாக்டர் ஸ்டாலின், ஸ்ரீராம் வித்யாஸ்ரமம் பள்ளி தாளாளர் ராமதாஸ், தலைமை ஆசிரியை சாந்தி ராமதாஸ், சங்க மண்டல தலைவர் சிவக்குமார், வட்டார தலைவர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் பழனிவேல், சந்தானக்குமார், செல்லப்பன், சிவகாமி செல்லப்பன், ேமாகனப்பிரியா ஸ்டாலின் மற்றும் லயன் சுகுமார், புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துைர வழங்கினர்.

    முன்னதாக சங்க செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். பொருளாளர் என்.சோமசுந்தரம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை சக்திவேல் தொகுத்து வழங்கினார்.

    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஓ.என்.ஜி.சி நிர்வாகம் மூலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியத்தில் உள்ள திருமருகல், திருப்புகலூர், கணபதிபுரம், ஏர்வாடி, திருக்கண்ணபுரம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஓ.என்.ஜி.சி நிர்வாகம் மூலம் டேக்வாண்டோ பயிற்சி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கொரோ னா பாதிப்பினால்இரண்டு வருடங்களாக தடைப்ப ட்டிருந்த இப்பயிற்சி தற்போது திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ -மாணவி களுக்கு அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும்பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்க ங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சிக்குபள்ளி யின் தலைமை ஆசிரிய ர்நிர்ம லாராணி, உதவித லைமை ஆசிரியர்சங்கர் முன்னிலையில் டேக்வா ண்டோ பயிற்சி யாளர் மாஸ்டர் பாண்டியன் பயிற்சி அளித்தார்.

    • விருத்தாசலத்தில் செஸ்போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    • செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் நிலை பெற்ற 137 மாணவர்கள் பங்குபெற்றனர்.

    கடலூர்:

    உலக செஸ் தினம் மற்றும் சென்னையில் நடைபெறும் 44வது நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது. உலக செஸ் தினம் மற்றும் சென்னையில் வருகிற 28ம் தேதி தொடங்க உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளில் பயிலும், செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் நிலை பெற்ற 137 மாணவர்கள் பங்குபெற்றனர். போட்டியில் முதல் 3 இடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, விமலா, வட்டார வளமை மேற்பார்வையாளர் செந்தில்குமார், உதவி தலைமையாசிரியர் கலையரசன், உடற்கல்வி அலுவலர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், தியாகு உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 750 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • உயர்கல்வி படிக்கும் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் நடைமுறைப்படுத்தபட்டு உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 750 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் அளிக்கும் விழாவானது நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அறிவொளி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீ ர்செல்வம், கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், கல்லூரி செயலாளர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் பேசும்போது, இந்த ஆண்டு உயர்கல்வி படிக்கும் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக த்தில் தான் நடை முறை ப்படுத்தபட்டு உள்ளது. ஒரே ஆண்டில் 21 கல்லூரிகளை தொடக்கி வைத்த பெருமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தான் சேரும் என்றார்.இவ்விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் ஜோதி தேவேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், பிரபாகரன், நகர செயலா ளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், ஊராட்சி தலைவர் புஷ்ப வல்லி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சஞ்சய், சாதனா, கீர்த்தனா வெண்கல பதக்கம் பெற்றனர்.
    • வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், சிலம்ப பள்ளி நிர்வாகிகளுக்கும், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் ஒன்றியம் இலுப்பநகரம் கிராமத்தில், வீரத்தமிழன் சிலம்பாட்ட பள்ளி சார்பில் தன்னார்வ முறையில், குழந்தைகளுக்கு சிலம்பம் கற்பிக்கப்படுகிறது.இப்பயிற்சி பெற்று வரும் கிராம குழந்தைகள், கோவை நேரு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த, தென்னிந்திய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்று அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர். சபரி, மான்ஷிதா, மகிஷா, வைஸ்ணவ் தங்கப்பதக்கமும், சுவாதி, ஸ்ரீஅகிலன், சர்வேஷ் வெள்ளிப்பதக்கமும், சஞ்சய், சாதனா, கீர்த்தனா வெண்கல பதக்கமும் பெற்றனர்.வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், சிலம்ப பள்ளி நிர்வாகிகளுக்கும், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள விளையாட்டுகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். #AsianGames
    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் 570 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 36 விளையாட்டில் கலந்து கொள்கிறது.

    கபடி, தடகளம், குத்துச்சண்டை, பேட்மின்டன், துப்பாக் சுடுதல், ஆக்கி, மல்யுத்தம், டென்னிஸ், வில்வித்தை மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா பதக்கங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்மின்டனில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. தடகளத்தில் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா முத்திரை பதிக்கலாம். அவர் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.



    துப்பாக்கிசுடும் போட்டியில் மனுபாக்கா, அனிஷ் பன்வாலா, இளவேனில் ஆகியோரும், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, சுஷில்குமார், வினிஷ்போகத், சாக்ஷி மாலிக் ஆகியோரும் பதக்கங்களை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கபடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் கிடைக்கும். டென்னிசில் ராம்குமார் ராமநாதன் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வாய்ப்பு இருக்கிறது. #AsianGames
    ஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட நாய் பதக்கம் வென்று அனைவரின் மனதையும் கவர்ந்தது. #Dog #HalfMarathon
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் கால்கூர்லி நகரில் மராத்தான் போட்டி நடைபெற்றது. அதில் 21 கி.மீ. தூரம் (13 மைல்) ஓட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் அனைவரும் ஒடினார்கள்.



    அவர்களுடன் சேர்ந்த ஒரு நாயும் ஓடியது. போட்டியாளர்களுடன் அந்த நாய் இறுதிவரை ஓடி முடித்தது. எனவே, அந்த நாய்க்கு பதக்கம் வழங்கப்பட்டது. அந்த நாயின் பெயர் ஸ்டார்மி. கருப்பும், பிரவுன் நிறமும் கொண்ட அந்த நாய் கலப்பின வகையை சேர்ந்தது. மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்த நாய் அனைவரின் மனதையும் கவர்ந்தது. #Dog #HalfMarathon
    தேசிய அளவில் பதக்கம் வெல்லும் புதுவை விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்க வேண்டும் என்று புதுவை ஒலிம்பிக் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டம் காந்தி வீதியில் உள்ள ஒட்டல் செண்பகாவில் நடந்தது. ஒலிம்பிக் சங்க தலைவர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் வேல்முருகன், வாழ்நாள் தலைவர் பூங்காவனம், மூத்த துணை தலைவர் உதயகுமார், துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், ஜெயராஜ், பொருளாளர் சுப்ரமணி, இணை செயலாளர்கள் சூரியமூர்த்தி, ஸ்டாலின் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் ஊழியர்களுக்கு 8 மாத காலமாக சம்பளம் கொடுக்காமலும், அங்கீகாரம் பெற்றுள்ள விளையாட்டு சங்கங்களுக்கு 2012 முதல் நிதி ஏதும் கொடுக்காமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

    பல ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பண பரிசு வழங்கப்படவில்லை. இதனை அரசு உடனே வழங்க வேண்டும்.

    புதிய விளையாட்டு சங்கங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவை மாநில விளையாட்டு குழு மத்திடம் அங்கீகாரம் கோரியும் அங்கீகாரம் தராமல், அவர்களுக்கு வேண்டிய சங்கங்களுக்கு மட்டும் புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக அங்கீகாரம் கொடுத்து உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

    விளையாட்டின் மீது அக்கறையே செலுத்தாமல் விளையாட்டு சங்கங்களுக்கு சரியான நிதி கொடுக்காமல் அனுபவமிக்க உறுப்பினர் செயலாளரை கொண்ட புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன் இது குறித்து முதல்-அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் துணை தலைவர் மற்றும் கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் மனு கொடுப்பது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ×