search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medal"

    • பல்வேறு நிலைகளை கற்றுத்தேர்ந்த மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
    • மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டி னம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் சாய் காய் டூ அட்வ ர்ஷர் அகாடமியில் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியை அகில இந்திய கராத்தே சங்கத்தின் டெக்னிக்கல் டைரக்டரும் தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவருமான சாய் புருஸ் தொடக்கி வைத்தார்.

    போட்டியில் கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக், குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், உள்ளிட்ட பல்வேறு நிலைகளை கற்று தேர்ந்த மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

    அதை தொடர்ந்து பல்வேறு நிலைகளை முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் பிளாக் பெல்ட் பெற்ற பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியினை நாகை மாவட்ட கராத்தே சங்கத் தலைவரும் பயிற்சியாளருமான சென்சாய் ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக தாமஸ் ஆல்வா எடிசன் சென்சாய் சாய் புரூஸ் கலந்து கொண்டார்.

    இதில் ஆசியன் கராத்தே நடுவர் அறிவழகன், மரிய சார்லஸ், டாக்டர் உமா, மார்ட்டின் பாக்யராஜ், இளம்பரிதி, பூமாலை, சென்சை அன்பழகன் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வினை தலைமை ஆசிரியர் ஆறு துரைக்கண்ணன் தொகுத்து வழங்கினார்.

    • இந்திய தேசிய அளவிலான கர்லிங் போட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மர்கில் நடைபெற்றது.
    • வீரர்களுக்கு இன்ஸ்பெக்டர் இனியன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

    புதுச்சேரி:

    இந்திய தேசிய அளவிலான கர்லிங் போட்டி கடந்த 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மர்கில் நடைபெற்றது. இதில் புதுவை வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் புதுவையை சேர்ந்த ஷினிவாஸ், தேவதர்ஷினி ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இவர்கள் கர்லிங் சங்க கவுரவ தலைவர் மாஸ்டர் வினோத் தலைமையில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வீரர்களுக்கு இன்ஸ்பெக்டர் இனியன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியின் போது புதுவை கர்லிங் பயிற்சியாளர்கள் ஹேமா, வசந்த் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொருளாளர் ஜெயஸ்டூ செய்திருந்தார்.

    • முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கம், 2-ம் பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கம்.
    • மாணவ- மாணவிகளுக்கு விளையாடும் திறனை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பள்ளிகளில் இருந்து 150 மாணவ- மாணவிகள் சுமார் 9-க்கும் மேற்பட்ட குழுக்களாக கலந்து கொண்டனர்.

    இக்குழுக்கள் மாணவ- மாணவிகளுக்கு என தனி பிரிவாகவும், 8, 10, 12, 14 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    போட்டியில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கமும், 2-வது பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு விளையாடும் திறனை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.

    போட்டி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் எஸ்.ஏ.கார்த்திகேயன் மற்றும் பூர்ணிமா கார்த்திகேயன் சிறப்பாக செய்திருந்தனர்.

    • விருதுநகரில் குடியரசு தின விழாவில் 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.
    • அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தினவிழா நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டு காலை 8.15 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற விழாவில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. பாண்டி உள்பட 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 247 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முருகேசன், வெங்கடேஸ்வரன், ராஜேஷ், அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், நகரசபை கமிஷனர் ஸ்டான்லி பாபு, மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் நற்சான்றிதழ் பெற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் மொழிப் போர் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்துக்கு சென்ற கலெக்டர் அங்கு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவுத் தூணில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் நகரசபை தலைவர் மாதவன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, நகரசபை கமிஷனர் ஸ்டான்லிபாபு, கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதி ராஜசேகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்தி மான்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    • விஜய் 57-60 எடை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை.
    • தங்க பதக்கம் வென்ற மாணவர் இன்பத்தமிழன் மாநில போட்டிக்கு தேர்வு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் குத்தாலம் தாலுக்கா, திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 9-ம் வகுப்பு மாணவன் இன்பத்தமிழன் 75-80 எடை பிரிவில் தங்க பதங்கமும், விஜய் 57-60 எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஆசைத்தம்பி, அருண்ராஜ் மற்றும் வழிகாட்டியாய் இருந்த உதவி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர்களை தலைமை ஆசிரியை பிரேமாவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.

    தங்க பதக்கம் வென்ற மாணவர் இன்பத்தமிழன் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, நடுக்கம்பு போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
    • 27 பேர் கலந்து கொண்டு அதில் 24 தங்கப்பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் ெபற்று பெருமை சேர்த்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    திருச்சி மாவட்டம் நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மழலையர், மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் போன்ற பிரிவுகளில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, நடுக்கம்பு, குத்து வரிசை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

    அதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வீரத்தமிழச்சி சிலம்ப பள்ளி மாணவ-மாணவிகள் 27 பேர் கலந்து கொண்டனர் . அதில் 24 தங்கப்பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் வென்று தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் வீரத்தமிழச்சி சிலம்பப் பள்ளி ஆசான் உமா (தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகம், தஞ்சாவூர் மாவட்ட தலைவர்) ஆகியோருக்கு கழகத் தலைவர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    • அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் விளக்கி பாராட்டினர்.
    • பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவா சராவ் மேனிலைப்பள்ளியில் ஜே.சி. போஸ் அறிவியல் மன்றத்தின் அறிவியல் கண்காட்சி நடந்தது.

    கண்காட்சியை பள்ளித் தலைமையாசிரியர் அனந்த ராமன் தொடங்கி வைத்து மாணவ மாணவி களின் அறிவியல்செயல்தி றனைப் பாராட்டிப் பேசினார்.

    பின்னர்,மாணவர்களின் முயற்சியில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஒளி விலகல், புவி அமைப்பு, பருவநிலை மாற்றம், சூரிய சந்திர கிரகணம், மனித உறுப்பு மண்டலம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் முதலிய 15க்கு மேற்பட்ட அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் விளக்கிச் சொல்லக்கேட்டு மகிழ்ந்து பாராட்டினார்.

    மேலும், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவில் நடந்த 17 வயதினருக்கிடையேயான தடகளப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, திருவண்ணா மலையில் நடக்கும் மாநில அளவில் நடக்கும் தடகளப் போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வாகியுள்ள மாணவன் அஜித்திற்கு பள்ளி செயலர் ரஞ்சன்கோபால் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதனைத் தொடர்ந்து 28ந்தேதி திருவண்ணாமலையில் நடக்கிற மாநிலதடகளப் போட்டியில் கலந்துகொள்ள மாணவர் அஜித் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்நிகழ்ச்சிகளில் திரளான ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

    • 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சம்ரிதா தங்க பதக்கத்தையும், விசாலினி வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
    • மாநில போட்டியில் வெற்றி பெற்று தேர்வாகி தேசிய போட்டியிலும் வெற்றி பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    பெங்களூரில் சி.ஐ.எஸ்.சி.இ. ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ்- 2022 தேசிய அளவிலான கராத்தே போட்டி பதுகோன்-டிராவிட் சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் எக்ஸலென்சியில் நடைபெ ற்றது.

    தலைமை பயிற்சியாளர் சென்சாய் ராஜேஷ் கண்ணா தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சம்ரிதாதங்க பதக்கத்தையும்,விசாலினி வெண்கல பதக்கத்தையும் பெற்றனர். பக்கா லொகேஷ்வர ரெட்டி தர்ஷன் கலந்து கொண்டனர்.

    மாநில போட்டியில் வெற்றி பெற்று தேர்வாகி தேசிய போட்டியிலும் வெற்றி பெற்றனர்.

    சாதனை படைத்த மாணவ ர்களை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வாழ்த்தி பாராட்டினார். ஹயாஷிகா சிட்டோ ரியு கராத்தே கழகத்தின் கிராண்ட் மாஸ்டர் ஹன்சி டாக்டர் டோனி பொன்னையா போன் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.

    இதேப்போல் கிறிஸ்து பன்னாட்டு பள்ளி தாளாளர் ஜெரால்டு பிங்னோரா ராஜ், ராஜ தாமரை மஹால் உரிமையாளர் சிங்காரவேல், உடற்பயிற்சி ஆசிரியர் சியாம் சுந்தர் மற்றும் வின்னர் அகாடமி உரிமையாளர் ரெங்கநாயகி அனைவரும் மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர்.

    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 431 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • 9 வயது முதல் 19 வயதுடையவர்களுக்கு தனித்தனியாக ஆறு சுற்று போட்டிகள் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தகட்டூர் அரசு மேல்நிலைப்ப ள்ளியில் நாகை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் சோழமண்டல செஸ் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 431 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    9 வயது முதல் 19 வயதுடையவர்களுக்கு தனித்தனியாக ஆறு சுற்று போட்டிகள் நடைபெற்றது. செஸ் போட்டியினை வாய்மேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு செஸ் கமிட்டி இணைச் செயலாளர் பாலகுணசேகரன், நாகை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், நாகை மாவட்ட இணைச்செயலாளர் மணிமொழி, பள்ளி தலைமையாசிரியர் சுவாமிநாதன், சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா, ஆசிரியர்கள் சுப்ரமணியன், வைத்தியநாதன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சை கதிர்வேல் உள்ளிட்ட 11 நடுவர்களை கொண்டு செஸ் போட்டி நட த்தப்பட்டது. போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ், நூல்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

    வேதாரண்யத்தில் 7 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட செஸ் போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறை என போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

    • மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டியில் திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் பதக்கம் வென்றனர்.
    • 5 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டிகள் மேலக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் பங்கேற்ற திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தடகளபோட்டிகளில் 5 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். குழுப்போட்டிகளில் 10 போட்டிகளில் இந்த பள்ளி மாணவிகள் முதல் பரிசையும், 5 போட்டிகளில் 2-வது பரிசையும் வென்று மொத்தம் 119 பரிசுகளை பெற்று அரசு பள்ளிகளிலேயே அதிக பரிசு பெற்ற பள்ளி என்ற சாதனையை நிகழ்த்தினர்.

    சாதனை படைத்த மாணவிகளை தலைமையாசிரியர் கர்ணன், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் ஜெயராமன், மேலாண்மைக்குழுத்தலைவர் ஸ்ரீதேவிசண்முகபாண்டி ஆகியோர் பாராட்டினர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியைகள் நவமணி, பாலன், சர்மிளா ஆகியோரையும் பாராட்டினர்.

    • கடந்த 2021- 22-ம் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, வெள்ளி பதக்கம், ரூ.10 ஆயிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கல்வி மாவட்ட அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 6 ஆசிரியர்கள் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோரால் கவுரவிக்கப்பட்டனர்.

    தமிழக அளவில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தில் அனைத்து நிலையிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த 2021 - 2022ம் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 5-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, வெள்ளிப் பதக்கம், ரூ.10 ஆயிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து நடைபெற்ற உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில், மன்னார்குடி கல்வி மாவட்ட அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோட்டூர் ஒன்றியம், ஆலாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ராசகணேசன், நீடாமங்கலம் ஒன்றியம், புள்ளவராயன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள், காளாச்சேரி அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆனந்த், கற்பகநாதபுரம் அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அருளானந்தம் மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சக்கரபாணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    இதில் டாக்டர் ராதாகிரு ஷ்ணன் விருது பெற்ற கோட்டூர் ஒன்றியம் ஆலாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் முதன்மைக் கல்விஅலுவலர் தியாகராஜன், மாவட்டக் கல்வி அலுவலர் மணிவ ண்ணன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவினரிடம் தான் பெற்ற விருது தொகையான ரூ.10 ஆயிரத்தை பள்ளி வளர்ச்சி நிதிக்காக ஒப்படைத்தார்.

    ஏற்பாட்டினை தலைமை ஆசிரியை வசந்தி, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்கபாபு ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆசிரியர்களுக்கு ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • 25 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் முகமது பஷீர், அப்துல் மாலிக் ஆகியோர் சார்பில் ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருமருகல் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.

    இதில் 10 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளியே சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 100, 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு 25 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார். கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிமுன் அன்சாரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி வரவேற்றார்.

    இதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கண்ணன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இதில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ராணி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைக்கள் கலந்துக் கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

    முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார்.

    ×