search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MBBS"

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கூடுதலாக 350 இடங்களை ஒதுக்கீடு செய்து இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 900 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஐ.ஆர்.டி. பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் என மொத்தம் 3 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இதில் ஐ.ஆர்.டி. பெருந்துறை இடங்களை அரசின் கலந்தாய்வு மூலம் தனியாக நிரப்பப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது கூடுதலாக எம்.பி.பி.எஸ். இடங்கள் கேட்டு தமிழக அரசு இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பியது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தற்போது எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கூடுதல் இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    மதுரை மற்றும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே 150 இடங்கள் இருக்கின்றன. இந்த 2 மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக தலா 100 இடங்களும், கரூரில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் மருத்துவ கல்லூரிக்கு 150 இடங்களும் என மொத்தம் 350 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்கீடு செய்து இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    நீட் தேர்வு முடிவு வெளியானதும், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும். அதை தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்பட்டு, எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படும். கூடுதலாக ஒப்புதல் பெறப்பட்டு இருக்கும் இந்த 350 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் இந்த கல்வி ஆண்டிலேயே கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. #MBBS #MedicalEducation

    சென்னை:

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

    புதிதாக கரூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க நிதி ஒதுக்கி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மருத்துவ கல்வி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 23 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு செயலாற்றி வருகிறது.

    ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க 400 கோடி ரூபாய் செலவிட வேண்டிய நிலை உள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதின் மூலம் எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வருடம் கடந்த ஆண்டை காட்டிலும் 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 95 எம்.பி.பி.எஸ். இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 இடங்களும் அதிகரிக்க வேண்டும் என மருத்துவ கவுன்சிலிடம் அரசு முறையிட்டு உள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கூடுதல் இடங்களை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா? என இந்திய மருத்துவ கவுன்சில் பல்வேறு கட்டமாக ஆய்வு செய்துள்ளது.

    அதனால் இந்த வருடம் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

    இது தவிர 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக இடங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் இதன் மூலம் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும் கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கினால் அங்கு 100 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 2,900 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கின்றன.

    இதுதவிர கூடுதலாக 345 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு இடங்கள் கடந்த ஆண்டு வரை 1,250 இருந்தன. இந்த வருடம் கூடுதலாக 112 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MBBS #MedicalEducation

    அடுத்த கல்வி ஆண்டில் (2019-20) கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மருத்துவ கல்வித்துறை இயக்குனர் எட்வின்ஜோ தெரிவித்தார். #MBBS #TN
    சென்னை:

    தமிழ்நாட்டில் தற்போது 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 2900 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன.

    இந்த ஆண்டு கரூரில் புதியதாக அரசு மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்குகிறது. கல்லூரிக்கான கட்டுமானங்கள் முடிவடைந்து தற்போது பணியாற்ற வேண்டிய டாக்டர்கள் நியமனம் நடந்து வருகிறது.

    இந்த கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கும். இத்துடன் மதுரை, திருநெல்வேலி மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே உள்ள இடங்களை விட கூடுதலாக 100 இடங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அது சம்பந்தமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரி கூடுதல் இடங்கள் சேர்ந்து மொத்தம் 350 இடங்கள் அடுத்த கல்வியாண்டில் கூடுதலாக கிடைக்கும்.

    அதன்படி 2019-20ம் கல்வி ஆண்டில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மருத்துவ கல்வித்துறை இயக்குனர் எட்வின்ஜோ தெரிவித்தார்.

    ஏற்கனவே உள்ள 2900 இடங்களுடன், 350 இடங்கள் அதிகரிப்பதால் இனி மருத்துவ கல்லூரிகளின் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3250 ஆக இருக்கும்.



    இதுசம்பந்தமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, கடந்த காலங்களில் மருத்துவ கல்லூரிகளை 100 இடங்களுடன் மட்டுமே ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். புதுக்கோட்டையில் தொடங்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள் பெறப்பட்டது. இனி புதிதாக தொடங்கப்படும் அனைத்து கல்லூரிகளிலும் 150 இடங்கள் இருக்கும் வகையில் தொடங்கப்படும் என்று கூறினார்.

    அடுத்ததாக பெரம்பலூர், ஊட்டி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே போல திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி இடங்களையும் 250 ஆக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், மத்திய மருத்துவ கவுன்சிலின் வழி காட்டுதலின்படி அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் உயர் மருத்துவ படிப்புகள் தொடங்க இருப்பதாகவும், மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ தெரிவித்தார்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலை போக்குவரத்து துறை சார்பில் மருத்துவ கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கல்லூரியை போக்குவரத்து துறை நடத்த முடியாத நிலை இருப்பதால் சுகாதாரத்துறையிடம் கல்லூரியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். அடுத்த கல்வி ஆண்டு முதல் அந்த கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #MBBS #TN
    புதிய மருத்துவ கல்லூரி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்த தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு 1550 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகளும் 13 தனியார் மருத்துவ கல்லூரிகளும், 10 நிகர்நிலை பல்கலைக் கழகங்களும் உள்ளன. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் 2750 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

    இதற்கிடையே தனியார் மருத்துவ கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு இல்லாததால் அதன் உரிமத்தை நீட்டிக்க அகில இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது.

    2017-ம் ஆண்டு மூன்று கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்தது. இதனால் மருத்துவ படிப்பு இடங்கள் குறைந்தது.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். இடங்கள் உயர்கிறது. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க தனியார் கல்வி நிறுவனங்கள் அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளன. இதே போல் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த தனியார் கல்லூரிகளும் தற்போது உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளன.

    கரூரில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. இதில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் இடம் பெறுகிறது. இதே போல் நெல்லை மருத்துவ கல்லூரி, மதுரை மருத்துவ கல்லூரிகளில் தற்போது தலா 150 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை 250-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    மதுரையில் சி.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மற்றும் கோவை மருத்துவ கல்லூரிக்கு தடை இல்லா சான்றிதழ்களை தமிழக அரசு வழங்கி இருக்கிறது. மேலும் தனியார் கல்வி நிறுவனங்களும் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளன.

    இதைதொடர்ந்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் தமிழ்நாட்டில் கல்லூரி தொடங்க விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்களிலும், மாணவர் சேர்க்கை தடைவிதிக்கப்பட்டு தற்போது மீண்டும் விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கும். தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால் 1200 இடங்கள் வரை கிடைக்கும்.

    இதன் மூலம் அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் கூடுதலாக 1550 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
    ‘நீட்’ தேர்வு பாதிப்பால் இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர். #NEET #MBBS
    சென்னை:

    அரசு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் தகுதியாக கருதப்படுமே தவிர அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற இயலாது.

    தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2447 எம்.பி.பி.எஸ். இடங்களில் சி.பி.எஸ்.சி. மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து நீட் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகள்தான் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளனர்.

    அரசு பள்ளிகளில் படித்த ஏழை-எளிய மாணவர்களால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

    இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர். இது ஒரு சதவீதம் கூட இல்லை என்பது வேதனையான வி‌ஷயமாகும்.

    2016-ம் ஆண்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தபோது 3.0 அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவு எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்றனர்.

    2016-ம் ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் மிகவும் குறைந்த அளவிலேயே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் படிக்க முடியாமல் ஏழை மாணவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட நீட் பயிற்சியும் சிறப்பாக அமையவில்லை என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

    தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை அரசு பள்ளி மாணவர்களால் செலுத்த முடியவில்லை.

    மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியினை சில வருடங்களுக்கு முன்பே தொடங்கி இருந்தால் தனியார் பள்ளி மாணவர்களை போல அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று சமுதாய சமத்துவ மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திர நாத் தெரிவித்துள்ளார்.

    அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் குழப்பம் அடைய காரணம் தமிழ் கேள்வித்தாளில் உள்ள தவறுகள்தான் என்று ஆசிரியை ஒருவர் தெரிவித்தார். தமிழில் தேர்வு எழுத மாணவர்களை ஆர்வப்படுத்திய நிலையில் 49 வினாக்கள் தவறாக அமைந்து விட்டதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் நீட் தேர்வு மதிப்பெண் ஒதுக்கீட்டிலும் மாறுபாடு ஏற்பட்டதால் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகளவு சேர முடியாத நிலை ஏற்பட்டது.



    இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே நீட் தேர்வு பயிற்சி அளிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 320 பள்ளி ஆசிரியர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் 32 மாவட்டங்களில் இருந்தும் 320 ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. 400 நீட் பயிற்சி மையங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

    அந்த மையங்களில் தற்போது பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவார்கள். இதுதவிர இந்த பயிற்சியாளர்களுக்கு பாடம் வாரியாக தனி பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

    இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. #NEET #MBBS

    நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசுக்கு ஒதுக்கீடு செய்யும் இடங்களை பெற சட்டம் இயற்ற வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆரம்ப காலம் தொட்டே அரசு தொடர்ந்து மாணவர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. புதுவையில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 600 எம்.பி.பி.எஸ். இடங்களும், பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 3 மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்கள் என மொத்தம் 1050 இடங்கள் உள்ளது.

    இதில் 525 எம்.பி.பி.எஸ். இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும். ஆனால் அதற்குரிய சட்டத்தை கொண்டு வரமால் தொடர்ந்து புதுவை அரசு தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இதில் மிகப்பெரிய ஊழலும் முறைகேடுகளும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    நாடு முழுவதும் நிகர் நிலைப்பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கொடுக்கப்படாத நிலையிலும் ஆண்டுதோறும் 140 இடங்கள் பெறப்பட்டது. ‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுபற்றி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அரசு எடுத்துக்கூறி இந்த இட ஒதுக்கீட்டை தொடர்ந்து பெற்றிருக்க வேண்டும்.

    ஆனால் இதை செய்யாமல் தனியார் முதலாளிகளுக்கு சாதகமான நிலையை அரசு மேற்கொண்டது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தோம். சட்டத்தை கொண்டு வரவும் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    அரசு சட்டத்தை கொண்டுவர எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டத்தின் இறுதி நாளில் சட்டத்தை கொண்டு வருவதாக எங்களை ஏமாற்றினர். தற்போது 2 கட்ட கவுன்சிலிங் முடிவடைந்துள்ள நிலையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒரு இடம் கூட நமக்கு கிடைக்கவில்லை.

    காலியாக உள்ள 450 இடங்களுக்கு மாஆப் கவுன்சிலிங் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்ப உள்ளனர். ஒரு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ரூ. 19 லட்சம் முதல் ரூ. 22 லட்சம் வரை கட்டண குழு நிர்ணயித்து உள்ளது.

    கட்டண குழுவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் சாதகமாக செயல்படுகிறது. தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு பெறப்படுகிறது அதுபோல பகுதியில் பெறாதது ஏன்..?

    இதுதொடர்பாக கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் மருத்துவக் கல்லூரி சீட்டு விவகாரத்தில் முதல் அமைச்சரும் கவர்னரும் இணைந்து செயல்படுகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    உண்மையில் புதுவை மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட்டு பெற்றுத்தர அரசு நினைத்தால் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம்.

    ஆனால் இந்த போராட்டங்களில் 2 சதவீத மாணவர்கள் கூட பங்கேற்பது இல்லை. மாணவர் சங்கங்களும் அமைப்புகளும் அமைச்சர்களின் பாக்கெட்டிலேயே உள்ளது.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.
    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. ஜூன் 19-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். #MBBSAdmission #MBBSApplication
    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் நீட் தேர்வு தகுதி மதிப்பெண் அடிப்படையில்  நடப்பு கல்வியாண்டில் (2018-19) மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடுகிறது. 85 சதவீத இடங்களுக்கு தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் விண்ணப்பங்களை பெறலாம்.



    www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 18-ந்தேதி. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் வருகிற 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தபிறகு தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. #MBBSAdmission #MBBSApplication
    நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 3355 எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. #NEET #NEET2018
    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவி கீர்த்தனா 720க்கு 676 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 12-வது இடம் வகித்தார். சென்னை கே.கே.நகரை சேர்ந்த அந்த மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    தொழில் மற்றும் கல்வி வளர்ச்சியில் பின் தங்கிய பல மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பீகார், ராஜஸ்தான், அரியானா, குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை விட தமிழகம் நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது.

    நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 11-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 19-ந்தேதி கடைசி நாளாகும் தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2900 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. அதில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடான 455 இடங்கள் போக மீதமுள்ள 2445 எம்.பி.பி.எஸ் இடங்கள் நீட் தேர்வு கட்-ஆப் மார்க் மற்றும் இன ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இதுதவிர 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783 மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 127 இடங்கள் என மொத்தம் 3355 எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.


    இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறியதாவது:-

    அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2900 மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள 2445 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

    ஒரு சில தனியார் மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் கேட்டு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளன.

    மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 100 இடங்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 இடங்களும் கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைத்தால் இந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக அமையும்.

    கடந்த ஆண்டு இரட்டை குடியுரிமையுடன் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களால் பிரச்சனை எழுந்து. இந்த ஆண்டு அதுபோன்ற நிலை உருவாகாது. மருத்துவ படிப்பிற்கான வழிகாட்டுதல் கையேட்டில் அதுபற்றி தெளிவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதையும் மீறி முறைகேடாக மாணவர் சேர்க்கை பெற முயன்றால் கடும் நடவடிககை எடுக்கப்படும்.

    மருத்துவ படிப்பில் சேரக்கக்கூடிய மாணவர்கள் 2 மாநிலத்தில் கூட விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் புலம் பெயர்ந்து இருந்தால் கர்நாடகாவிலும், தமிழகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

    ஆனால் கர்நாடகவில் மட்டும் தான் குடியுரிமை சான்றிதழை விண்ணப்பிக்க முடியும். தமிழகத்தில் குடியுரிமை சான்று முறைகேடாக பெற்று விண்ணப்பித்து இருந்தால் அது தவறாகும்.

    இதுபோன்ற தவறுகளை கடந்த வருடம் விண்ணப்பித்தவர்கள் செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இரட்டை குடியுரிமையுடன் விண்ணப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.   #NEET #NEET2018
    ×