search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor Jegan Periyasamy"

    • சிவந்தாகுளம் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் ,வருகிற கல்வி ஆண்டிலேயே இந்த புதிய வகுப்பறைகளை பயன்படுத்தலாம் என்று மேயர் உறுதி அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகின்றது. எனவே அதனை கருத்தில் கொண்டு மாநகராட்சிக்கு உட்பட்ட சிவந்தாகுளம் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது மேயரை வரவேற்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிவந்தாகுளம் தொடக்க பள்ளியில் 'ஷெட்' அமைத்து தருமாறும், மேல்நிலை பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கும் கூடுதல் வகுப்பறை ஒன்று கட்டி தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும், மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் வருகிற கல்வி ஆண்டிலேயே இந்த புதிய வகுப்பறைகளை பயன்படுத்தலாம் என்று மேயர் உறுதி அளித்தார்.

    தொடர்ந்து மேலூர் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் மேயர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வண்ணம் அதன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டிடம் ஒன்று அமைத்து தருவதாக ஆசிரியர்களிடம் அவர் உறுதியளித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னின் திராவிட மாடல் ஆட்சியில் அரசு பள்ளி களில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கான கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து பள்ளிகளை நவீன முறையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பின்னர் திரேஸ்புரம் மீன் மார்கெட் செல்லும் பாதையில் சிமெண்ட் சாலை, தடுப்பு வேலி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது காந்தி இர்வின் உப்பு சங்கம் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு வேலி அமைத்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை நிறைவேற்றி தருவதாக அவர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்தார்.

    ஆய்வின்போது மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார்,மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் பாலன், மார்ஷல் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பொதுமக்கள் இடையூரின்றி செல்லவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும் ,போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கருத்த பாலம் போக்குவரத்திற்கு குறுகியதாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த னர்.

    இது குறித்து மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வுகள் மேற்கொண்டார்.

    பின்னர், அந்த ஒடைப் பாலத்தை அகல படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரி களுக்கு அவர் உத்தர விட்டார்.

    மேலும் பழைய மாநகராட்சி எதிர்புறம் நடைபெற்று வரும் புதிய வணிக வளாக கட்டுமான பணிகளையும் மேயர் ஆய்வுகள் மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள்,மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொதுமக்கள் இடையூரின்றி செல்லவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் டி.எஸ்.பி. சத்தியராஜ் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், தமிழ்நாடு போக்குவரத்து கழக கிளை மேலாளர், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    எட்டையாபுரம் சாலை யில் இருந்து வரக்கூடிய மினி பஸ்கள், ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் 4-ம் ரயில்வே கேட் மேம்பாலம் மேல் வழியாக செல்லாமல் சர்வீஸ் ரோடு வழியாக செல்ல உத்திரவிடப் பட்டுள்ளது.

    புதிய பஸ் நிலைய வெளிப்பகுதிகளில் பஸ் களை நிறுத்தக்கூடாது என்றும் நகரின் முக்கிய சாலைகளில் பொது போக்கு வரத்துக்கு இடையூறாக வாகனங்களை சாலைகளில் நிறுத்தக்கூடாது என்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இன்று முதல் உடனடியாக அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பூபால்ராயர்புரம் 1,2,3, ஆகிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
    • நல்லமுறையில் மக்கள் பயன்பாட்டிற்கு அந்த பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.

    அதே போல் மாநகராட்சி பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க பொதுமக்களுக்கு வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் வரும் குறைபாடுகளை மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலர்களுக்கு தெரிவிக்க ப்பட்டு குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் 2-வது நாளாக மாநகராட்சி 23-வது வார்டு பனை வெல்லம் சங்கம் அருகில் அமைக்கப்பட்ட இடத்தில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    பின்னர் முத்துகிருஷ்ணா புரம், 2 மற்றும் 6-வது தெரு, பூபால்ராயர்புரம் 1,2,3, ஆகிய பகுதிகள் உள்பட பக்கிள் ஓடை இடங்களில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டு, விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்கள்.

    அப்போது இந்த பகுதிகளில் முறையாக சாலை வசதியும், கழிவுநீர் கால்வாய் வசதியும் செய்து கொடுக்க வேண்டும். அதே போல் இந்த பகுதியில் உள்ள ரவுண்டான பகுதியும் இரண்டு பூங்காக்கள் இருந்து வருகின்றன. அதில் ஒன்று தேவையற்ற அசம்பாவித செயல்களில் சிலர் ஈடுபடுவதால் அதில் ஒன்றை சமப்படுத்தி மற்றொன்றை மட்டும் நல்லமுறையில் மக்கள் பயன்பாட்டிற்கு அந்த பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அப்போது அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக குறிப்பெடுத்துக்கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமியிடம் இப்பகுதி ஆய்வின் போது இந்த குறைபாடுகளை எப்படி தீர்த்து வைக்கலாம் என்று இருவரும் பொதுமக்கள் மத்தியில் கலந்து ஆலோசித்து பேசினர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண் குமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் தனலட்சுமி, வட்ட செயலா ளர்கள் சேகர், கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், சீதாராமன், ஜோஸ்வா, சங்கர், அனந்தப்பன், சரவணன், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி மற்றும் அல்பட், மணி, உலகநாதன், ஜோஸ்பர், இந்திய கம்யூனிஸ்கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், முன்னாள்; கவுன்சிலர்கள் ரவீந்திரன், பொன்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
    • மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,பொதுமக்களும், வியாபாரிகளும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் படியும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும்,நிலுவையில் உள்ள, தொடங்கப்பட உள்ள பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கமிஷனர் தினேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்

    திட்டங்களைத் தொடங்கும் போது இருக்கும் ஆர்வம் அதனை நிறைவேற்றி முடிப்பது வரை தொடர்வதை உறுதிசெய்யவே ஆய்வுக் கூட்டங்கள் என்ற

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தலின்படி நடைபெறும் இந்தக் கூட்டத்தின் மூலம் எந்த தொய்வும் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்கவும், இடையூறுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநகராட்சி அதிகாரி களுக்கும், துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும், ஓப்பந்ததாரர்களிடமும் வலியுறித்தினார்,

    கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்தாண்டு மழைநீரை தேங்க விடமாட்டோம். குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்படும் பிரை யண்ட்நகர், சிதம்பரநகர், ரஹ்மத்நகர், ஸ்டேட் பேங்காலனி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளிலும் முடிந்த அளவிற்கு மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,பொதுமக்களும், வியாபாரிகளும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் படியும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகர கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
    • இந்தத் திட்டத்தில் கூடுதலாக 10 பள்ளிகளை சேர்த்து வழங்க ஒருங்கிணைந்த சமையற்கூடம் அமைத்து செயல்படுவதற்கு நிர்வாக அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகர கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

    கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்த அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் கீழ் தூத்துக்குடி மாநகராட்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் கூடுதலாக 10 பள்ளிகளை சேர்த்து வழங்க ஒருங்கிணைந்த சமையற் கூடம் அமைத்து செயல்படுவதற்கு நிர்வாக அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

    எனவே முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாநகராட்சியின் 10 பள்ளிகளில் படிக்கும் 1,819 மாணவ மாணவிகளுக்கு உணவு தயார் செய்து வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தகுதியா னவர்களுக்கு ஒப்பந்தம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பு திறனை அதிகரிக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும், நாட்டின் அன்றாட நிகழ்வுகளை அறிந்திடவும் சமூக உணர்வினை வளர்த்திடவும் அரசு தேர்வுகளுக்கு தயார் செய்திட ஏதுவாக தினசரி நாளிதழ்கள் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் மூலம் மழைநீர் முள்ளக்காடு ஓடையை அடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து புதிய திட்டங்க ளுக்கு ஒப்புதல் வழங்குவது, ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழு தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ்ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி உட்பட அனைத்து கவுன்சி லர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், கமிஷனரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அலுவலர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன்,சேகர், ஹரி கணேஷ் ராஜபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணி மற்றும் பீட்டர் கோவில் தெருவின் அருகில் உள்ள நீர் தேங்கிய பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மீனாட்சிபுரத்தில் உள்ள பழைய பஸ் நிலையத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் நவீன ஓய்வு அறை ஒன்றை அமைப்பற்கான இடத்தினை பார்வையிட்டு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டு ஆலோசனை வழங்கி னார்.

    தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தின் உள்ளே செல்லும் பகுதிகளில் நீர் தேங்கியும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் கற்கள் மற்றும் மணல் திட்டுகள் இடையூறாக இருப்பதாக வந்த தகவலையடுத்து அதனை ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு வந்த புதிய பஸ்நிலைய கடை வியாபாரிகள், ஆட்டோ ஒட்டுனர்கள், மற்றும் பொது மக்களிடம் வரும் நாட்களில் இதனை சீர்படுத்தி பேவர் கற்கள் பதிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.

    தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணி மற்றும் பீட்டர் கோவில் தெருவின் அருகில் உள்ள நீர் தேங்கிய பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பிரபாகரன் ஜஸ்பர், மற்றும் மாநகர கவுன்சிலர்கள், அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 45 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு 14-வது வார்டுக்குட்பட்ட சின்னகன்னுபுரம் பாரதி நகரில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர தி.மு.க. துணை செயயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதா முருகேசன் தலைமை தாங்கினார்.

    உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் அப்பகுதியில் 45 மரக்கன்று களை நடும் திட்டத்தை தொடங்கி வைத்து, 300 பேருக்கு சேலை, நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட வழக்க றிஞர் அணி அமைப்பாளர் மோகன் தாஸ் சாமுவேல், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், வார்டு அவைத்தலைவர் அந்தோணிமுத்து, வட்ட பிரதிநிதிகள் முருகேசன், குமார், தங்கமாரியப்பன், முனியசாமி, ஆல்கன் டிரஸ்ட் நிர்வாகிகள் செந்தில், அய்யப்பன், கேசவன், வேல்பாண்டி, தினேஷ் குமார், ரகுபதி, நாராயணன், கமல் தனசேகரன், மகேஸ்வரசிங், ஊனமுற்றோர் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கருணா, பிரபாகர், பாஸ்கர், ரமேஷ், மகளிர் அணி சீதாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதி வடிகால் களில் இருந்து வரும் நீர், பக்கிள் ஓடையில் வந்து சேருகின்றது.
    • கந்தசாமிபுரம் சந்திப்பு ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதி வடிகால் களில் இருந்து வரும் நீர், பக்கிள் ஓடையில் வந்து சேருகின்றது. எனவே வடிகால்களில் இருந்து வரும் நீரோட்டத்திற்கு உள்ள தடைகளை அகற்றுவது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நீரோட் டத்திற்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்றுவதற்கும் கரைகள் தூர்ந்த பகுதிகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான எஸ்.கே.எஸ்.ஆர் காலனி மற்றும் கந்தசாமிபுரம் சந்திப்பு ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டார்.

    கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் மாற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இதில் மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் மாநகர கவுன்சிலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வாகனம் நிறுத்துவதற்கு என்று பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்களில் மீது வாகனங்களை நிறுத்துமாறு மேயர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    • சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித்தடத்தையும் மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் முடிவற்ற சாலைகளான அண்ணா நகர் மெயின் ரோடு, ஜெயராஜ் ரோடு,போல்டன்புரம் ரோடு, தேவர்புரம் ரோடு, வி.இ.ரோடு, பாலவிநாயகர் கோவில் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்கு வரத்திற்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சாலை யின் இருபுறம் வாகனம் நிறுத்துவதற்கு என்று பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்களில் மீது வாகனங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் அந்த சாலையின் இருபுறமும் பதிக்கப்பட்ட பேவர் கற்களில்1.5 மீட்டரானது பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் நடந்து செல்வதற்கு மட்டுமே, எனவே மீதமுள்ள இடமானது வாகனம் நிறுத்துவதற்கான பகுதியாகும். ஆகவே குழந்தை களும், பொதுமக்களும் நடந்து செல்வதற்கும், வாக னங்களை நிறுத்துவதற்கும் தடை ஏற்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    இந்நிலையில் மாநகரத்திற்குள் மழை நீர்வராமல் இருக்க புற வழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி களையும், மழையினால் அதிக நீர் தேங்கும் பகுதிகளான முத்தம்மாள் காலனி, கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மழைநீர் வரும் புறநகர் பகுதிகளையும், சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித்தடத்தையும் மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அதிகாரி களிடம் நீர்வழி தடங்களை தூர் வரவும்,குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தவும், உத்தர விட்டார். ஆய்வின் போது மாநகர அதிகாரிகள், அலு வலர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பிரபாகரன், ஜாஸ்பர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • தற்போது பத்து நாளைக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது என்றார்.
    • தொட்டில்பட்டியில் ரூ.693 கோடியில் தனி குடிநீர் திட்டம் தேவையில்லாத ஒன்று.

    சேலம்

    சேலம் மாநகராட்சி இன்று காலை மேயர் ராமசந்திரன் தலைமையில் நடந்தது.இதில் 60-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ஆனைவரதன் பேசும்போது, எனது வார்ட்டில் சாலை, சாக்கடை, குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடு பார்க்காமல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்க மாநகராட்சி முன்வர வேண்டும். கடந்த காலங்களில் வாரம் இரு முறை குடிநீர் வந்தது.தற்போது பத்து நாளைக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது என்றார்.

    சேலம் 44-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இமயவர்மன் பேசும்போது, மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அ.தி.மு.கவை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது, மேட்டூர் தொட்டில்பட்டியில் ரூ.693 கோடியில் தனி குடிநீர் திட்டம் தேவையில்லாத ஒன்று. இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றார். மேலும் இத்திட்டத்தை கண்டித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் யாதவமூர்த்தி, ஜனார்த்த னன், மோகனபிரியா, ஆனைவரதன் ஆகியோர் கண்டிக்கிறோம் என்று கூறியபடி மேயர் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து மேயர் ராமசந்தி ரன் அவர்களை வெளி யேற்றுமாறு உத்தரவிட்டார்.

    அப்ேபாது தி.மு.க கவுன்சிலர்கள் முருகன், தெய்வலிங்கம், சாந்தமூர்த்தி, ஈசன் இளங்கோ, அசோகன், சரவணன் மூர்த்தி ஆகியோருக்கும், அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதையடுத்து தி.மு.க கவுன்சிலர்கள், அ.தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற்றினர்.இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி கூறும்போது, தனிக்குடிநீர் திட்டம் நிறைவேற்ற முடியாது. இதற்கு போதுமான நிதி இல்லை. கடந்த ஒரு ஆண்டில் தி.மு.க. அரசு மாநகராட்சிக்கு எந்த நிதியும் வழங்கவில்லை. தற்போது அனைத்து பணிகளும் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் தான் நடைபெறுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும் நேரு, சேலம் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். அவர் இதுவரை மாநகராட்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.சேலம் புதிய பஸ் நிலை யத்தில் புதிய கடைகளுக்கு அனுமதி வழங்கபடுவதால் பல முறைகேடு நடக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஆயிரம் ஒதுக்கப்பட்டு, பல்வேறு பணிகள் நடைபெற்றன என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து தி.மு.க. கவுன்சர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை கூறினார். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சித் தலைவர் ஜெயக்குமார் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றுவதாக கூறினார். சேலம் மாநகர் முழுவதும் அனைத்து தார் சாலைகளும் போடப்படும் என மேயர் தெரிவித்தார். 

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மானிய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
    • மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுதல், முத்தம்மாள் காலனியில் புதிய ரேஷன் கடை கட்டுதல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மான்ய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    உள்ளாட்சி அமைப்பு திட்டப் பணிகளுக்கு மானியம் பெறுவதற்கு மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

    எனவே சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கு மாநகராட்சி பகுதிகளில் கட்டப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு அவற்றின் அமைவிடம், கட்டுமானத்தின் தன்மை அடிப்படையில் பரப்பளவிற்கு ஏற்றவாறு 4 வகைகளாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்ய வேண்டும்.

    அதன்அடிப்படையில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி தீர்மானத்தின்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் 1-4-2022 முதல் காலிமனை வரி உயர்வு செய்து பொது சீராய்வு மேற்கொள்ள மண்டலங்கள் வாரியாக புதிய வரியும், பொது சீராய்வு மேற்கொள்ள அனுமதி கோருதல்,

    உள்ளாட்சி அமைப்பு களில் நிர்வாகத்தை வலுப்ப டுத்தவும், பொதுமக்களின் பங்கேற்பு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தவும் மாநகராட்சி சட்டப்பிரிவுகளின்படி வார்டு குழு மற்றும் பகுதிசபா அமைக்கவும் அதற்கு வார்டு கவுன்சிலர் தலைவராகவும் வாக்குரிமை பெற்ற பகுதி வாசிகள் பகுதிசபா குழு உறுப்பினர்களாகவும் மாநகராட்சி அனுமதி பெற்று நியமித்திடவும் இந்தக் குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படவும் அதற்கான அஜெண்டா தயாரிக்கவும் கவுன்சிலர் கூட்டம் நடத்த தவறினால் ஆணையாளர் கூட்டத்தை நடத்தவும் அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே வார்டு குழு மற்றும் பகுதிசபா 60 வார்டுகளிலும் அமைக்க அரசாணை மற்றும் அரசிதழ் அறிக்கையினை மாமன்றத்தில் சமர்ப்பித்தல் உட்பட பல தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது,

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், குழு தலைவர்கள் ராமகிரு ஷ்ணன், கீதாமுருகேசன், சுரே ஷ்குமார், அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கசாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன்சுரேஷ், பொன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    • தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலைகளை இணைக்கும் 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.
    • இந்த பணிகள் நிறைவுபெற வருகிற 10-ந் தேதி வரை ஆகும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலைகளை இணைக்கும் 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது. அதனை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

    பராமரிப்பு பணி

    அப்போது அவர் கூறுகையில், இந்த பணிகள் நிறைவுபெற வருகிற 10-ந் தேதி வரை ஆகும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 2-ம் கேட் மற்றும் 4-ம் கேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. ஆகையால் போக்குவரத்து நெரிசலை தவிர்பதற்காக 2-ம் கேட் மற்றும் 1-ம் கேட் வழியாக செல்லும் பொதுமக்கள் பீச் ரோட்டையும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார்.

    தொடர்ந்து, கலைஞர் டேங்கில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் கலந்து கொண்டார்,அப்போது முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை தாங்கி நிற்கும் இந்த டேங்கில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மகிழ்ச்சி

    எனது தந்தை சட்டமன்ற உறுப்பினராகவும், நகர்மன்ற தலைவராகவும் இருந்த போது கடந்த 1989-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பெயரில் திறந்து வைத்தார்.

    இன்று மாநகரத்தின் மேயராக இங்கு நடைபெற்ற விழாவில் நான் கலந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. இவ்விழாவில் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம், செல்வம், அனைத்து விதமான காரியங்களிலும் வெற்றி கிடைக்க இறைவனை வேண்டினேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    நிகழ்ச்சியில், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர், பிரபாகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×