search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Renovation Works"

    • கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறித்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாநக ராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட சரவணா நகர் பகுதியில் மாநகராட்சி சிறப்பு நிதியின் கீழ் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் ரூ. 5.03 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சோ நகர், பள்ளி வாசல் தெரு, சீமான் தெரு ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூபாய் 1.27 கோடி மதிப்பீட்டில் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், திருப்பாதிரிப்பு லியூர், தானம் நகர் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், வண்ணாரபாளையம் பகுதியில் ரூபாய் 45.74 லட்சம் மதிப்பீட்டில் கே.கே.நகர் குளம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறித்தினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் , மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி , மாநகர் நல அலுவலர் எழில் மதனா , மாநகர பொறியாளர் குருசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காந்தி மியூசிய புனரமைப்பு பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
    • சிற்பங்கள் மற்றும் ஒவி யங்களையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    தென்னிந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான மதுரை காந்தி மியூசியம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதுப் பிக்கப்படும் என முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

    அதனடிப்படையில் காந்தி மியூசியத்தில் புனர மைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புனரமைப்பு மற்றும் புதுப்பிப்பு பணி களை அமைச்சர் வெள்ளக் ேகாவில் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்படும் இந்தியாவின் பழமையான அருங்காட்சிய கத்தையும், உலக தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு கருத்தரங்க கூடங்கள், ஆய்வரங்கங்கள், பார்வையாளர் அரங்கம் மற்றும் நூலகத்தையும் அமைச்சர் ஆய்வு ெசய்தார்.

    சங்கத்தமிழ் காட்சிக் கூடத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் மற்றும் ஒவியங்களையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • ராஜபாளையத்தில் மாயூரநாதர் கோவில் தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி பெருந் திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் சிம்மன், காமதேனு, யானை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவில் நாளை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. மாயூரநாதரும், அஞ்சல்நாயகியும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். நூற்றுக் கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

    இதை யொட்டி ராஜபாளையம்-மதுரை சாலையில் பெத்தவ நல்லூர் பகுதியில் நிறுத்தப் பட்டுள்ள தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேகவருமான ராமராஜ் மற்றும் சங்கத்தினர் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். சீரமைக்கும் பணியில் தேர் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

    • தாயமங்கலம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
    • குளம் சீரமைப்புப் பணிகளை அறங்காவலர் வெங்கடேசன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாயமங்கலம் கிராமத்தில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் விழா பத்து நாட்கள் நடைபெறும். பங்குனி விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீச்சட்டி, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டு திருவிழா வரும் மார்ச் 29-ந் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி இக்கோவிலில்தற்போது கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் வடக்கு பகுதியில் உள்ள தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக தற்போது தீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிவடைந்த பின்பு அருகே உள்ள வயல்களில் உள்ள மின்மோட்டார் மூலம் தீர்த்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.

    கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் மற்றும் குளம் சீரமைப்புப் பணிகளை அறங்காவலர் வெங்கடேசன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணி மற்றும் பீட்டர் கோவில் தெருவின் அருகில் உள்ள நீர் தேங்கிய பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மீனாட்சிபுரத்தில் உள்ள பழைய பஸ் நிலையத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் நவீன ஓய்வு அறை ஒன்றை அமைப்பற்கான இடத்தினை பார்வையிட்டு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டு ஆலோசனை வழங்கி னார்.

    தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தின் உள்ளே செல்லும் பகுதிகளில் நீர் தேங்கியும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் கற்கள் மற்றும் மணல் திட்டுகள் இடையூறாக இருப்பதாக வந்த தகவலையடுத்து அதனை ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு வந்த புதிய பஸ்நிலைய கடை வியாபாரிகள், ஆட்டோ ஒட்டுனர்கள், மற்றும் பொது மக்களிடம் வரும் நாட்களில் இதனை சீர்படுத்தி பேவர் கற்கள் பதிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.

    தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணி மற்றும் பீட்டர் கோவில் தெருவின் அருகில் உள்ள நீர் தேங்கிய பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பிரபாகரன் ஜஸ்பர், மற்றும் மாநகர கவுன்சிலர்கள், அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ஒகேனக்கல் மெயினருவில் உள்ள தடுப்பு கம்பிகளை சரிசெய்ய அருவில் தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிவிட மணல் மூட்டை அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

    இதனால் கர்நாடக- தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    கர்நாடக மாநில அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடடப்பட்டது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயினருவி, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு கம்பிகள், சுவர்கள் சேதமடைந்தது.

    மெயினருவில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் தொடர்ந்து 61-வது நாளாக இன்றும் மெயினருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சிதலமடைந்துள்ள தடுப்பு கம்பிகள், சுவர்களை சீரமைக்க வேண்டும்என்று சுற்றுலா பயணிகள் மற்றும் அந்தபகுதி பொதுமக்கள் ஆகியோர் கடந்த சில நாட்களாகவே வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வந்தனர். நீர்வரத்து குறைந்த பின்னரே அருவிக்கு தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிவிட்டு சிதலமடைந்த பகுதிகளை சரிசெய்ய முடியும் என்றார்.

    இன்று நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் முதற்கட்டமாக ஒகேனக்கல் மெயினருவில் உள்ள தடுப்பு கம்பிகளை சரிசெய்ய அருவில் தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிவிட மணல் மூட்டை அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக எண்ணெய் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பைகளில் மணல்களை நிரப்பி மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கி வருகின்றனர். மெயினருவிக்கு செல்லும் தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிட சுமார் 400 முதல் 500 மணல் மூட்டைகள் தேவைப்படுவதால், இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    மெயினருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றங்கரையோரம், சினிபால்ஸ், முதலை பண்ணை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை இயக்கப்படும் பரிசலில் சென்றனர். #Hogenakkal
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகளின் வசதிக்காக புதிதாக 14 குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகிறது.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் மிகவும் பழமையான ரெயில் நிலையம். பஸ்நிலையத்துக்கு அருகாமையில் ரெயில் நிலையம் அமைந்து இருப்பதால் இங்கு ஏராளமான பொதுமக்கள் ரெயில் பயணம் செய்ய வருகிறார்கள். இதனால் 24 மணி நேரமும் பயணிகள் வந்து சென்றவண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது.

    ஆனால் பயணிகளின் வருகைக்கு ஏற்ப போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ரெயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட அதிகாரிகள், திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்க இருப்பதாகவும், ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என தெரிவித்தார்.

    அதன்படி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த டிக்கெட் முன்பதிவு மையம் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    மேலும் ரெயில் நிலைய நடைமேடையில் பயணிகளின் வசதிக்காக 14 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நடைமேடையை உடைத்து குழாய்கள் அமைக்கும் பணியும், கட்டிடங்களை சீரமைக்கும் வகையில் வர்ணம் பூசும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் தற்போது நடைபெறும் சீரமைப்பு பணியின் போதே, ரெயில் நிலையத்தில் கழிப்பறை, மேற்கூரை போன்ற வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×