search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
    X

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகளின் வசதிக்காக புதிதாக 14 குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகிறது.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் மிகவும் பழமையான ரெயில் நிலையம். பஸ்நிலையத்துக்கு அருகாமையில் ரெயில் நிலையம் அமைந்து இருப்பதால் இங்கு ஏராளமான பொதுமக்கள் ரெயில் பயணம் செய்ய வருகிறார்கள். இதனால் 24 மணி நேரமும் பயணிகள் வந்து சென்றவண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது.

    ஆனால் பயணிகளின் வருகைக்கு ஏற்ப போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ரெயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட அதிகாரிகள், திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்க இருப்பதாகவும், ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என தெரிவித்தார்.

    அதன்படி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த டிக்கெட் முன்பதிவு மையம் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    மேலும் ரெயில் நிலைய நடைமேடையில் பயணிகளின் வசதிக்காக 14 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நடைமேடையை உடைத்து குழாய்கள் அமைக்கும் பணியும், கட்டிடங்களை சீரமைக்கும் வகையில் வர்ணம் பூசும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் தற்போது நடைபெறும் சீரமைப்பு பணியின் போதே, ரெயில் நிலையத்தில் கழிப்பறை, மேற்கூரை போன்ற வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×