search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lottery"

    • லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் ருத்ரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த சுப்ரமணி சேகர் (வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர்
    • அவரிடம் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


    திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் ருத்ரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த சுப்ரமணி சேகர் (வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1000 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விட்டுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் லாலாதோப்பு தெருவை சேர்ந்த ராஜா (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர. அவரிடம் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி போலீசார் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அரசினால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தங்கம், விஷ்வா, நல்ல நேரம்-1396 சீட்டுகள் விற்பனைசெய்தது தெரியவந்தது

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும்போலீசார்இன்று தீவிரரோந்துபணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசினால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தங்கம், விஷ்வா, நல்ல நேரம்-1396 சீட்டுகள் விற்பனைசெய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி அவுலியா நகர் நூர் முகமது (54),என்பவரை கைது செய்தனர்.

    • புதுவை வில்லியனூர் கணுவாப்பேட் மாதா கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.
    • வாடிக்கையாளர்களை பிடிக்கும் ஏஜெண்டாக அந்தோணி செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் கணுவாப்பேட் மாதா கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.

    இன்ஸ்பெக்டர் வேலைய்யன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார்  அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஒருவர் சந்தேகத்திற்கிடமாக செல்போனில் பேசியபடி ஒரு சில துண்டு சீட்டுகளை கையில் வைத்து எழுதி கொண்டு இருந்தார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் ஏற்கனவே அந்த பகுதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த அந்தோணி (வயது 70) என்பது தெரியவந்தது. வில்லியனூர் பகுதியில் வாடிக்கையாளர்களை பிடிக்கும் ஏஜெண்டாக அந்தோணி செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் இதற்கு உதவியாக செயல்பட்டு வரும் புதுவையைச் சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அந்தோணியிடம் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம்,2 செல்போன்கள் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
    • தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தினர்.

    அதில் அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த சரவணன் (வயது 35) என்பதும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    • பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தனர்.
    • லாட்டரி சீட்டு விற்றதன் மூலம் கிடைத்த ரூ.200 பறிமுதல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் பெரியகுத்தகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரி த்தனர்.

    விசாரணை யில் அவர் அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன் (வயது63) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது.

    அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டு விற்றதன் மூலம் கிடைத்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்த சசிகுமார் (வயது 22), குமார் (35) என்பதும், சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.
    • இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், இதுகுறித்து கிச்சிபாளையம் மற்றும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கூலி வேலை செய்து நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி . இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்
    • கடந்த சில நாட்களாக இவர் வாட்ஸ்-அப்பில் குழு அமைத்து அதில் லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார்

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 35). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக இவர் வாட்ஸ்-அப்பில் குழு அமைத்து அதில் லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து செல்போனை சோதனை செய்தபோது அவர் குழு மூலமாக கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், செல்போன், ரூ.8 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • தடை செய்யப்பட்ட 7 ஆன்லைன் நம்பா் சீட்டு விற்று கொண்டிருந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வேதாரண்யம் கரியாப்பட்டினம் சாலை, தூண்டிக்காரன்சுவாமி கோவில் அருகில் வேதாரண்யம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணிமாறன் (வயது 35) என்பவா் தடை செய்யப்பட்ட 7 ஆன்லைன் நம்பா் சீட்டு விற்று கொண்டிருந்தார்.

    உடனே போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.

    • தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
    • போலீசார் அழகேசனை பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து பணம் ரூ.1100-யை பறிமுதல் செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியைசேர்ந்த அழகேசன் (வயது 65). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து சென்ற தாரமங்கலம் போலீசார் அழகேசனை பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து பணம் ரூ.1100-யை பறிமுதல் செய்தனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் சோதனை மேற்கொண்டு கேரள லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.2பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஊத்துக்குளி : 

    ஊத்துக்குளி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்கப்படுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஊத்துக்குளி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மொரட்டு பாளையம் பகுதியை சேர்ந்த கந்தசாமி ,தூத்துக்குடி சாத்தான்குளத்தை சேர்ந்த வேல் முத்து ஆகியோர் கேரள லாட்டரி விற்றது தெரியவந்தது.இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் சிலர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
    • இவரிடமிருந்து ரூ.53 ஆயிரம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் சிலர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

    போலி லாட்டரி சீட்டு விற்பனை

    இந்த லாட்டரி சீட்டுகளை இவர்களே பிரிண்ட் அடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பரமத்தி வேலூர் மற்றும் பரமத்தி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனையாவதாக பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    8 பேர் கைது

    தகவலின் அடிப்படையிலா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது 24), ராஜ்குமார் (24), சதாசிவம் (25), கரூர் மாவட்டம், வெங்கமேட்டை சேர்ந்த மகாதேவன் (37), காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (51),நாமக்கல் அருகே உள்ள வரப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (60), சுங்ககாரன்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி (37) மற்றும் ஒருவர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.52 ஆயிரத்து 700 ரொக்கத்தையும், 3 இருசக்கர வாகனங்களையும், ஏராளமான வெளி மாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் பரமத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பரமத்தியைச் சேர்ந்த திருக்கேதீஸ்வரன் (29), திலீபன் (27) மற்றும் மரவாபாளையத்தைச் சேர்ந்த ரகு(26) ஆகிய 3 பேர்களையும் பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

    வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

    அவர்களிடமிருந்து ரூ.700-ஜ பறிமுதல் செய்து விற்பனைக்கு வைத்திருந்த வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×