search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏலச்"

    • கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.
    • இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், இதுகுறித்து கிச்சிபாளையம் மற்றும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கூலி வேலை செய்து நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×