

தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியைசேர்ந்த அழகேசன் (வயது 65). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து சென்ற தாரமங்கலம் போலீசார் அழகேசனை பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து பணம் ரூ.1100-யை பறிமுதல் செய்தனர்.