search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnagiri"

    கிருஷ்ணகிரி அருகே கால்வாயில் மூழ்கி அண்ணன் - தங்கை பரிதாபமாக இறந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே உள்ள சின்ன பேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (8) என்ற மகனும், நந்தினி (3) என்ற மகளும் இருந்தனர். தமிழ்ச்செல்வன் அருகில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று நரசிம்மன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பூப்பறிப்பதற்காக சென்றார். மேலும் ஆட்டையும் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது சிறுவன் தமிழ்ச்செல்வனும், சிறுமி நந்தினியும் உடன் சென்றனர். அந்த நேரம் நரசிம்மன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற ஆடு வேறு பக்கம் சென்றது.

    இதைப் பார்த்த நரசிம்மன் அந்த ஆட்டை பிடித்து வருமாறு தமிழ்ச்செல்வனிடம் கூறினார். இதனால் தமிழ்ச்செல்வனும், நந்தினியும் ஆட்டை பிடிப்பதற்காக ஓடிச் சென்றனர். அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள கே.ஆர்.பி. அணை தண்ணீர் செல்லும் கால்வாயில் இறங்கினர். அந்த நேரம் இருவரும் சேற்றில் சிக்கினார்கள்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு நரசிம்மன் அங்கு ஓடி சென்றார். ஆனால் அதற்குள் தமிழ்ச்செல்வனும், நந்தினியும் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். குழந்தைகளின் உடலை நரசிம்மன் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது 2 பேரின் உடல்களை பார்த்து நரசிம்மன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி அணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அவர்கள் பலியான சிறுவன் தமிழ்ச்செல்வன், சிறுமி நந்தினி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கால்வாயில் மூழ்கி அண்ணன் - தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்து வந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

    கிருஷ்ணகிரி நகரில் நேற்று முன்தினம் மின்சார பராமரிப்பு பணிகள் என காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மாலை 5 மணிக்கு பிறகும் நகரில் மின்சாரம் வரவில்லை. இரவு 10.30 மணி அளவிலேயே மின்சாரம் வந்தது.

    அதன் பிறகும் இரவு அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    தளி-40, ராயக்கோட்டை-29, தேன்கனிக்கோட்டை-18, சூளகிரி-14, ஓசூர்-9, பாரூர்-8.60, ஊத்தங்கரை-8.20, நெடுங்கல்-8, கிருஷ்ணகிரி-7, போச்சம்பள்ளி-4.90, பெனுகொண்டாபுரம்-3.20 என மொத்தம் 149.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 83.60 சதவீதம் பேரும், மாணவிகள் 90.56 சதவீதம் பேரும் என மொத்தம் 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #Plus2Result
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் 176 பள்ளிகளில் இருந்து 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத தகுதி பெற்று 10 ஆயிரத்து 899 மாணவர்களும்,11 ஆயிரத்து 311 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 210 பேர் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 27 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும் என மொத்தம் 66 மையங்களில் தேர்வு எழுதினர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    தேர்வு முடிவுகளில் 9ஆயிரத்து 112 மாணவர்களும், 10 ஆயிரத்து 240 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 352 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 83.60 சதவீதம் பேரும், மாணவிகள் 90.56 சதவீதம் பேரும் என மொத்தம் 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு 88.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதால் இது கடந்த ஆண்டைவிட 0.89 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி அடைந்துள்ளனர். #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அசோக்குமார் எம்.பி. கூறினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்காணிப்புக்குழுத் தலைவர் கே.அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் 6 வழிச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தடுக்க விபத்து நடைபெறும் இடங்களில் சாலையை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள், உயர்மட்ட நடைபாதைகள், மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் உள்ள 191.20 கிலோ மீட்டர் சாலையில் விபத்துகள் ஏற்படாத வகையில் மேம்பாலங்கள், உயர் மின்கோபுரங்கள், சர்வீஸ் சாலைகளில் வேகத்தடைகள் போன்ற பணிகள் விரைந்து மத்திய அரசின் அனுமதி பெற்று செய்து தரப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர்கள் சிவாஜி, நாராயணன், ரிலையன்ஸ் மேலாளர் முத்துகுமார், மண்டல போக்குவரத்து ஆணையர் செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், செந்தில்வேலவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன் (கிருஷ்ணகிரி), சங்கர் (தேன்கனிக்கோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அகரம் வெப்பாளம்பட்டி துர்க்கம் அருகே பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே அகரம் வெப்பாளம்பட்டி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மலை உள்ளது. இந்த மலை மீது மராட்டியர் காலத்தில் பாதி கட்டப்பட்ட நிலையில் கோட்டை சுவர்கள் உள்ளன. மேலும் நீரை தேக்க சிறிய தாழ்வான பகுதியும் உள்ளது. இந்த மலைப்பகுதியில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆவண பதிவுக்குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் மலையின் பாதி உயரத்தில் இயற்கையாக அமைந்துள்ள குகையில் பழமையான பாறை ஓவியங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து கிருஷ்ணகிரி வரலாற்று ஆவண பதிவுக்குழு நிர்வாகி தமிழ்செல்வன் கூறியதாவது:-

    இந்த பாறை ஓவியங்கள் தேர் போன்ற அமைப்புடனும், கோவில் போன்ற அமைப்புடனும் காணப்படுகிறது. இதன் அருகில் நட்சத்திரம் போன்ற அமைப்புடன் பாறை ஓவியங்கள் உள்ளன. இவை வெண்சாந்து ஓவியங்களாக உள்ளது. இது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓவியங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வரலாற்று ஆவண பதிவுக்குழு நிர்வாகிகள் டேவிஸ், மதிவாணன், சென்னப்பன், காவேரி, ரவி, பாலாஜி மற்றும் பலர் உடன் இருந்தனர். 
    ×