search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public happiness"

    • நேற்று மாலை திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மிக பலத்த மழையாக இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.
    • பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணிய னூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழ சிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, இருக்கூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மிக பலத்த மழையாக இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.

    அதேபோல் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. மிக பலத்த மழையின் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், மண்பானை விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், பலகார கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் பலத்த மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயிலின் தாக்கம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். நேற்று முதல் அக்கினி நட்சத்திரம் தொடங்கிவிட்ட காரணமாக அக்னிவெயில் தொடங்கி யது.

    இந்நிலையில் மிகப் பலத்த மழை பெய்து கொண்டிருப்பதால் பூமியின் சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் கடும் தாக்கம் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் வறண்ட கிணறுகளில் ஊற்றெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பலத்த மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்து வந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

    கிருஷ்ணகிரி நகரில் நேற்று முன்தினம் மின்சார பராமரிப்பு பணிகள் என காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மாலை 5 மணிக்கு பிறகும் நகரில் மின்சாரம் வரவில்லை. இரவு 10.30 மணி அளவிலேயே மின்சாரம் வந்தது.

    அதன் பிறகும் இரவு அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    தளி-40, ராயக்கோட்டை-29, தேன்கனிக்கோட்டை-18, சூளகிரி-14, ஓசூர்-9, பாரூர்-8.60, ஊத்தங்கரை-8.20, நெடுங்கல்-8, கிருஷ்ணகிரி-7, போச்சம்பள்ளி-4.90, பெனுகொண்டாபுரம்-3.20 என மொத்தம் 149.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
    ×