search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் பகுதிகளில் பலத்த மழை; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    பரமத்தி வேலூர் பகுதிகளில் பலத்த மழை; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

    • நேற்று மாலை திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மிக பலத்த மழையாக இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.
    • பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணிய னூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழ சிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, இருக்கூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மிக பலத்த மழையாக இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.

    அதேபோல் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. மிக பலத்த மழையின் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், மண்பானை விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், பலகார கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் பலத்த மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயிலின் தாக்கம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். நேற்று முதல் அக்கினி நட்சத்திரம் தொடங்கிவிட்ட காரணமாக அக்னிவெயில் தொடங்கி யது.

    இந்நிலையில் மிகப் பலத்த மழை பெய்து கொண்டிருப்பதால் பூமியின் சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் கடும் தாக்கம் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் வறண்ட கிணறுகளில் ஊற்றெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பலத்த மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×