search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed"

    • மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த விபத்து குறித்து வெள்ளிபணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் :

    ஜெகதாபி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 67). விவசாயி. இவர் கடந்த 28-ந்தேதி ஜெகதாபி- காணியாளம்பட்டி சாலையில் மதுக்கரை நால்ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராத விதமாக பெருமாள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெருமாள் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளிபணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • ஆம்னி பஸ்கள்-கார் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • மேலும் இந்த விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆம்னி பஸ் ஒன்று திருப்பூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் பிரிவு சாலையில் இருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ், காரில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் சாலையில் இருந்து பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தாமல் விபத்து குறித்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் டிரைவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த உத்திரமொழி (வயது 42) முன்னால் சாலையில் காரும், பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்ததை கண்டார். இதனால் அந்த வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக உத்திரமொழி திடீரென்று பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் அந்த பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் தள்ளாடினர். இந்த நிலையில் அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு ஆம்னி பஸ், நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் அந்த பஸ்சின் முன்பக்கம் அமர்ந்திருந்த கிளீனர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, குருவம்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமியின் மகன் விஜய் (24) பஸ்சின் படிக்கட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டனர். இந்த விபத்தினால் அந்தப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றி தகவலறிந்த பாடாலூர் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பஸ் கிளீனர் விஜயின் உடல் பஸ்சின் பாகங்களுக்கிடையே சிக்கியிருந்ததால் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்த 12 பயணிகளை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:- திடீரென பிரேக் போட்டதில் உத்திரமொழி ஓட்டிச்சென்ற ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னை திருவேற்காடு மகாலட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜ்மோகனின் மனைவி செல்வி (49), பின்னால் வந்து மோதிய பஸ்சின் டிரைவர் சிவகங்கை மாவட்டம், மாத்தூரை சோ்ந்த சோனை மகன் முருகன் (35), அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகளான காரைக்குடி தாலுகா, கழனிவாசலை சேர்ந்த சோனைமுத்துவின் மனைவி ராஜேஸ்வரி (48), மகள் சவுமியா (20), காரைக்குடியை சேர்ந்த பெருமாளின் மனைவி ஜோதிலட்சுமி (37), தேவகோட்டை தாலுகா, நகரமங்கலத்தை சேர்ந்த அப்துல் ஹமீதுவின் மனைவி பாத்திமா சோபியா (30), சிவகங்கையை சேர்ந்த மீனாட்சி சுந்தரத்தின் மனைவி உமையாள் (53), மாற்று டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அண்ணா நகரை சேர்ந்த ஜெயபாலன் (53), திருமயம் தாலுகா, ஒணங்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவி கிருஷ்ணவேணி (32), காஞ்சீபுரம் எம்.ஜி.ஆர். சாலை, திருவள்ளுவர் நகரை சேர்ந்த பஷீர்கானின் மனைவி சைலானி (33), மகன் முகமது பஷீர் (9), மகள் பர்கான் (6) ஆகிய 12 பேர் காயமடைந்தனர்.

    இதில் சிறுமி பர்கான் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தாள். செல்வி மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா த.பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 56). இவரது மகன் மணிகண்டபிரபு (21). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை மணிகண்டபிரபு தனது மோட்டார் சைக்கிளில் கீழப்பழுவூரில் உள்ள போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று அவர் விண்ணப்பித்திருந்த ஓட்டுனர் உரிமம் பெற்று கொண்டு மீண்டும் சொந்த ஊரான த.பொட்டகொல்லை கிராமத்திற்கு திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.

    அப்போது பொய்யூர் சுண்டக்குடி பிரிவு பாதை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் அருகே லாரி மோதி ஓட்டல் உரிமையாளர் பலியானார்
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் பாலத்துறை பஜனை மடத்தெரு பகுதி சேர்ந்தவர் வீரப்பன் (வயது 60). பாலத்துறை பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் இவர், பரமத்தி வேலூர் சென்று விட்டு டவுன் பஸ்சில் திரும்பி உள்ளார். பாலத்துறையில் உள்ள தேசிய கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கரூர் நோக்கி வந்த லாரி ஒன்று வீரப்பன் மீது மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த வீரப்பன், ஆம்புலன்ஸ் உதவியுடன், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீரப்பனின் மனைவி ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிந்து, கரூர் அருகம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற லாரி டிரைவர் மீது வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மற்றொரு சம்பவத்தில் வாலிபர் கார் மோதி உயிரிழந்தார்.
    • 2 விபத்து குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    அசாமை சேர்ந்தவர் அதூர் ரகுமான்(37). இவரது மனைவி ஜூஸனரா பேகம்(36).

    கடந்த சில வருடங்களாக அதூர் ரகுமான் தனது மனைவியுடன் கோவை வடிவேலம்பாளையத்தில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜூஸனரா பேகம் வேலையை முடித்து விட்டு பொருட்கள் வாங்குவதற்காக அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றார். பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்தார்.

    வடிவேலம்பாளையம்-பூலுவப்பட்டி ரோட்டில் வந்த போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஜூஸனரா பேகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜூஸனரா பேகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்தவர் பிரபுசங்கர்(37). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    இவர் அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த கார் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பிரபுசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்
    • புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள ஒகளூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி செல்லம்மாள். கட்டிட தொழிலாளியான இவர் ஒகளூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக அங்கனூர் கிராமத்தை சேர்ந்த மணவழகன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் செல்லம்மாள் மீது மோதியது. இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓடும் ெரயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் பலியானார்.
    • அந்த வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரா?

    மதுரை

    சென்னையிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை ெரயிலில் சென்னையை சேர்ந்த அருண்சுந்தர் என்பவரின் மனைவி மாலதி (48), தனது மாமனார் மாமியார் மற்றும் குடும்பத்தினருடன் கடையநல்லூர் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்

    அப்போது மதுரை கூடல் நகர் ெரயில்வே ஜங்ஷன் முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஓடும் ரெயிலில் மாலதியிடமிருந்து செயினை பறித்துக் கொண்டு ெரயிலில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் அணிந்திருந்த நாலு பவுன் செயினில் ஒரு பாதியை தன் கையில் பிடித்ததினால் இரண்டு பவுன் மட்டும் பறிக்கப்பட்டது.

    இது குறித்து மாலதி மதுரை ெரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் அதே ெரயிலில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கீழே விழுந்து இரண்டு கால்களும் உடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • லாரி மோதி ஓட்டல் தொழிலாளி பலியானார்
    • இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே உள்ள மீமிசல் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 36). இவர் கரூரில் உள்ள ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுபாஷ் சந்திரபோஷ் ஓட்டல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி சுபாஷ் சந்திரபோஸ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிேசாதித்த டாக்டர்கள் சுபாஷ் சந்திரபோஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை ஒன்றியம், வங்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே மாத்தூர்-ஆவூர் சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளார். அப்போது தொண்டைமான் நல்லூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவிந்தராஜ் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக செல்வராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் மோதி மூதாட்டி பலியானார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சோ்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூரில் இருந்து எதுமலை செல்லும் சாலையில் ஒரு வயல் அருகே நேற்று முன்தினம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தலை நசுங்கி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மூதாட்டி சாலையை கடந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அவர் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த மூதாட்டி சிகப்பு, வாடாமல்லி நிற சேலை அணிந்திருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சோ்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி அருகே பாம்பு கடித்து வட மாநிலத் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டியைச் சேர்ந்தவர் பொன்னர்.இவரது விவசாய தோட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம்,கொண்டேகாவ் மாவட்டம், கிரோலா பகுதியை சேர்ந்த பஜாருகொர்ரம் என்பவரது மகன் சன்னத்ராம்(20)  கூலி வேலை பார்த்து வந்தார். 

    கடந்த 20-ந் தேதி இரவு சன்னத்ராமை பாம்பு கடித்தது. சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி    உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பரமத்தி வேலூரை அடுத்த ‌‌எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து.‌இவரது மனைவி பாப்பாத்தி (70). இவரை கடந்த 22-ந் தேதி  பாம்பு கடித்தது.

    சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×