என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில இளம்பெண் பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில இளம்பெண் பலி

    • மற்றொரு சம்பவத்தில் வாலிபர் கார் மோதி உயிரிழந்தார்.
    • 2 விபத்து குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    அசாமை சேர்ந்தவர் அதூர் ரகுமான்(37). இவரது மனைவி ஜூஸனரா பேகம்(36).

    கடந்த சில வருடங்களாக அதூர் ரகுமான் தனது மனைவியுடன் கோவை வடிவேலம்பாளையத்தில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜூஸனரா பேகம் வேலையை முடித்து விட்டு பொருட்கள் வாங்குவதற்காக அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றார். பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்தார்.

    வடிவேலம்பாளையம்-பூலுவப்பட்டி ரோட்டில் வந்த போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஜூஸனரா பேகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜூஸனரா பேகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்தவர் பிரபுசங்கர்(37). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    இவர் அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த கார் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பிரபுசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×