search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed"

    • அரசு பஸ்சின் மீது செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே நீலம்பூரில் இருந்து வாளையார் நோக்கி எல் அண்ட் டி புறவழிச்சாலை செல்கிறது.

    இந்த சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கிராம சாலைகளும் உள்ளன. அந்த கிராமங்களில் உள்ளவர்களும் இந்த சாலைக்கு வந்து பின்னர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

    நேற்று இரவு காந்திபுரத்தில் இருந்து குளத்தூர் நோக்கி அரசு பஸ் வந்தது. எதிரே புறவழிச்சாலையில் அரசம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது40) என்ற வாலிபர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.

    அரசு பஸ் எல் அண்டி புறவழிச்சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த செந்தில்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த செந்தில்குமாரை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அரசு பஸ்சின் மீது செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது பார்ப்பவர்கள் நெஞ்சை பதை பதைக்கும் வகையில் உள்ளது.

    • கொடிசியா அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
    • விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(50).

    இவர் நேற்று முன்தினம் கொடிசியா அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது.

    அந்த கார் எதிர்பாராத விதமாக பாலாஜி மீது மோதியது. இதில் பாலாஜி தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாலாஜியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்
    • போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் சிவகிரி கந்தசாமிபாளைய த்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது 38). இவரது கணவர் சரவணகுமார் (42) கட்டிட வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பழுதாகி உள்ள மின் மோட்டாரை சரவணகுமார் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மின் ஒயர்கள் பழுதடைந்து உள்ளதால் திடீரென மின்கசிவு ஏற்ப ட்டு சரவணகுமாரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. உடனே அக்கம் பக்கத்தினர் சரவணகு மாரை ஆம்புலன்ஸ மூலம் கொடுமுடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரவண குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் நிர்மலா இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பால் வியாபாரி பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த புகலூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன்(60). பால் வியாபாரி. நேற்று இரவு காளியப்பன் தனது மொபட்டில் கோபி -அந்தியூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மொபைட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த காளியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைக்க ப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காளி யப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் பலியானார்
    • புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    வேலாயுதம்பாளையம்,

    நாமக்கல் மாவட்டம் பூசாரிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 46). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று ஈரோடு-கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் நொய்யல் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு தார் சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சசிகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் சசிகுமாருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அவருடன் வந்த மற்றொரு டிரைவர் நந்தகுமார் சசிகுமாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சசிகுமாரின் மனைவி மோகனாம்பாள் (40) வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்துளை கிணறு மின் மோட்டார் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • உயர் அழுத்த மின்சார கம்பியை தொட்டதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையம் ஊராட்சி புள்ளியாண்டம்பாளையத்தை சேர்ந்த சடையப்பன் என்பவரது மகன் பெரியசாமி (வயது 44). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று நாச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்துளை கிணறு மின் மோட்டார் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அங்கு அவருடன் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர் ஒருவரும் உடன் சென்றுள்ளார்.

    இந்தநிலையில் டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு எலக்ட்ரீசியன் பெரியசாமி மின் கம்பத்தில் ஏறி உள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியை தொட்டதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மின்சார வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு வராமல் தாமாக சென்று பழுதை சரி செய்ய மின்கம்பத்தில் ஏறி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பஞ்சாயத்து தண்ணீர் டேங்க் ஆபரேட்டர் விபத்தில் பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புது வேட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 66). பஞ்சாயத்து தண்ணீர் டேங்க் ஆபரேட்டராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தற்போது ஒப்பந்த அடிப்படையில் புது வேட்டைகுடி பஞ்சாயத்தில் மேற்கண்ட அதே பணிகளை கவனித்து வந்தார். வழக்கம்போல் கடந்த 1-ம் தேதி அதிகாலை பொது மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவ தற்காக புது வேட்டைகுடி -வேப்பூர் சாலையில் மொபட்டில் சென்றார்.

    அப்போது எதிர்பாரா தவிதமாக ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமியின் தலையில் காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் பெரியசா மி சிகிச்சை பலன் அளிக்கா மல் இன்று அதிகாலை இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராணி குன்னம் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விராலிமலையில் ஆம்னி பஸ் மோதி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை :

    விராலிமலை அருண்கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 73). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர், நேற்று காலை சொந்த வேலை காரணமாக தனது மொபட்டில் வீட்டிலிருந்து அருண்கார்டன் அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக முத்து ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் நண்பர்கள்.
    • மது அருந்துவதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லால் கடுமையாக தாக்கியதில், ராஜா படுகாயம் அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி - கபிலர்மலை சாலையில் வசிப்பவர் ராஜா (வயது 44). டெய்லரிங் வேலை பார்த்து வந்தார். பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (49), கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    கல்லால் தாக்கினார்

    கடந்த 27-ந் தேதி, இருவரும் பரமத்தி அருகே உள்ள பில்லூர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே மது அருந்துவதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லால் கடுமையாக தாக்கியதில், ராஜா படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கைது

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது.

    இதனிடையே ராஜாவை கல்லால் தாக்கிய கோவிந்தன் மீது பரமத்தி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    சிகிச்சை பலனின்றி...

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனோஜின் மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதி கொண்டன.
    • மனோஜ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன்.

    இவரது மகன் மனோஜ் (வயது29). இவர் சுற்றுலா வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மனோஜ் சேலாசில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக குன்னூரில் இருந்து சேலாசுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அங்கு சென்று தனது உறவினரை சந்தித்து விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் குன்னூருக்கு வந்தார்.

    காட்டேரியை அடுத்த கரும்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது.

    அப்போது எதிர்பாராத விதமாக மனோஜின் மோட்டார் சைக்கிளும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த மனோஜ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த விபத்து குறித்து வெள்ளிபணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் :

    ஜெகதாபி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 67). விவசாயி. இவர் கடந்த 28-ந்தேதி ஜெகதாபி- காணியாளம்பட்டி சாலையில் மதுக்கரை நால்ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராத விதமாக பெருமாள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெருமாள் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளிபணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • ஆம்னி பஸ்கள்-கார் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • மேலும் இந்த விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆம்னி பஸ் ஒன்று திருப்பூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் பிரிவு சாலையில் இருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ், காரில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் சாலையில் இருந்து பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தாமல் விபத்து குறித்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் டிரைவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த உத்திரமொழி (வயது 42) முன்னால் சாலையில் காரும், பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்ததை கண்டார். இதனால் அந்த வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக உத்திரமொழி திடீரென்று பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் அந்த பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் தள்ளாடினர். இந்த நிலையில் அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு ஆம்னி பஸ், நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் அந்த பஸ்சின் முன்பக்கம் அமர்ந்திருந்த கிளீனர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, குருவம்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமியின் மகன் விஜய் (24) பஸ்சின் படிக்கட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டனர். இந்த விபத்தினால் அந்தப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றி தகவலறிந்த பாடாலூர் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பஸ் கிளீனர் விஜயின் உடல் பஸ்சின் பாகங்களுக்கிடையே சிக்கியிருந்ததால் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்த 12 பயணிகளை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:- திடீரென பிரேக் போட்டதில் உத்திரமொழி ஓட்டிச்சென்ற ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னை திருவேற்காடு மகாலட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜ்மோகனின் மனைவி செல்வி (49), பின்னால் வந்து மோதிய பஸ்சின் டிரைவர் சிவகங்கை மாவட்டம், மாத்தூரை சோ்ந்த சோனை மகன் முருகன் (35), அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகளான காரைக்குடி தாலுகா, கழனிவாசலை சேர்ந்த சோனைமுத்துவின் மனைவி ராஜேஸ்வரி (48), மகள் சவுமியா (20), காரைக்குடியை சேர்ந்த பெருமாளின் மனைவி ஜோதிலட்சுமி (37), தேவகோட்டை தாலுகா, நகரமங்கலத்தை சேர்ந்த அப்துல் ஹமீதுவின் மனைவி பாத்திமா சோபியா (30), சிவகங்கையை சேர்ந்த மீனாட்சி சுந்தரத்தின் மனைவி உமையாள் (53), மாற்று டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அண்ணா நகரை சேர்ந்த ஜெயபாலன் (53), திருமயம் தாலுகா, ஒணங்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவி கிருஷ்ணவேணி (32), காஞ்சீபுரம் எம்.ஜி.ஆர். சாலை, திருவள்ளுவர் நகரை சேர்ந்த பஷீர்கானின் மனைவி சைலானி (33), மகன் முகமது பஷீர் (9), மகள் பர்கான் (6) ஆகிய 12 பேர் காயமடைந்தனர்.

    இதில் சிறுமி பர்கான் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தாள். செல்வி மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×