search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சாயத்து தண்ணீர் டேங்க்  ஆபரேட்டர் விபத்தில் பலி
    X

    பஞ்சாயத்து தண்ணீர் டேங்க் ஆபரேட்டர் விபத்தில் பலி

    • பஞ்சாயத்து தண்ணீர் டேங்க் ஆபரேட்டர் விபத்தில் பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புது வேட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 66). பஞ்சாயத்து தண்ணீர் டேங்க் ஆபரேட்டராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தற்போது ஒப்பந்த அடிப்படையில் புது வேட்டைகுடி பஞ்சாயத்தில் மேற்கண்ட அதே பணிகளை கவனித்து வந்தார். வழக்கம்போல் கடந்த 1-ம் தேதி அதிகாலை பொது மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவ தற்காக புது வேட்டைகுடி -வேப்பூர் சாலையில் மொபட்டில் சென்றார்.

    அப்போது எதிர்பாரா தவிதமாக ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமியின் தலையில் காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் பெரியசா மி சிகிச்சை பலன் அளிக்கா மல் இன்று அதிகாலை இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராணி குன்னம் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×