search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
    X

    சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

    • சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்
    • போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் சிவகிரி கந்தசாமிபாளைய த்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது 38). இவரது கணவர் சரவணகுமார் (42) கட்டிட வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பழுதாகி உள்ள மின் மோட்டாரை சரவணகுமார் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மின் ஒயர்கள் பழுதடைந்து உள்ளதால் திடீரென மின்கசிவு ஏற்ப ட்டு சரவணகுமாரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. உடனே அக்கம் பக்கத்தினர் சரவணகு மாரை ஆம்புலன்ஸ மூலம் கொடுமுடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரவண குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் நிர்மலா இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×