search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stoned"

    • பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் நண்பர்கள்.
    • மது அருந்துவதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லால் கடுமையாக தாக்கியதில், ராஜா படுகாயம் அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி - கபிலர்மலை சாலையில் வசிப்பவர் ராஜா (வயது 44). டெய்லரிங் வேலை பார்த்து வந்தார். பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (49), கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    கல்லால் தாக்கினார்

    கடந்த 27-ந் தேதி, இருவரும் பரமத்தி அருகே உள்ள பில்லூர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே மது அருந்துவதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லால் கடுமையாக தாக்கியதில், ராஜா படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கைது

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது.

    இதனிடையே ராஜாவை கல்லால் தாக்கிய கோவிந்தன் மீது பரமத்தி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    சிகிச்சை பலனின்றி...

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாண்லே பாலகத்தை கல்வீசி தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
    • புதுவையில் பால்தட்டுப்பாட்டை போக்க வேண்டும், பாண்லே கொள்முதலை உயர்த்த வேண்டும்.

    புதுச்சேரி:

    பாண்லே பாலகத்தை கல்வீசி தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

    புதுவையில் பால்தட்டுப்பாட்டை போக்க வேண்டும், பாண்லே கொள்முதலை உயர்த்த வேண்டும், நிர்வாக திறமையற்ற பாண்லே அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோரி சமூக அமைப்பினர் நேற்று புதுவை மிஷன் வீதியில் உள்ள பாண்லே நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் திடீரென பாண்லே அலுவலகம் மீது கல்வீசி தாக்கினார். இதில் பால் பொருட்கள் வைத்திருந்த கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து பாண்லே விற்பனை பிரிவு மேலாளர் கமலக்கண்ணன் பெரியக்டை போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் பாண்லே பாலகத்தின் கண்ணா டியை புதுவை வம்பா கீரப்பாளையம் திப்புராய பேட்டையை சேர்ந்த சம்சுதீன் சைமன் என்பவர் உடைத்து சேதப்படுத்தியதாக தெரிவித்தார். இதன் பேரில் சம்சுதீன் சைமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×