என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் பலி
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் பலியானார்
- புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
வேலாயுதம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் பூசாரிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 46). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று ஈரோடு-கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் நொய்யல் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு தார் சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சசிகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சசிகுமாருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அவருடன் வந்த மற்றொரு டிரைவர் நந்தகுமார் சசிகுமாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சசிகுமாரின் மனைவி மோகனாம்பாள் (40) வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்