search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed"

    • வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • ரூ.2½ லட்சம் மோசடி ெசய்து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கீரனூர் அருகே முதுகுளத்தூரை சேர்ந்தவர் அன்பரசு (வயது 35). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவர், மூளிப்பட்டி கிராமத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை மேய்த்து வருவதற்கு கீரனூர் அருகே உள்ள வாலியம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான செல்லையா என்பவரை அணுகினார்.

    அப்போது அவரிடம் குடும்பத்தோடு ஆடு மேய்ப்பதற்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை அன்பரசு கொடுத்துள்ளார். ஆனால் 3 மாதம் மட்டுமே வேலைக்கு சென்று விட்டு பின்னர் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் கொடுத்த பணத்தை செல்லையாவிடம் திருப்பி கேட்ட போது அவர் தகாத வார்த்தையால் அன்பரசுவை திட்டியுள்ளார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் அன்பரசு புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்த முதியவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார்
    • கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 80). அதே ஊரை சேர்ந்தவர் காமராஜ் மகன் ராமமூர்த்தி (23). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இருவரது வயல்காடும் அருகே அருகே உள்ளது. இருவரும் வரப்பில் மாடு மேய்க்கும் பொழுது இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை நாராயணன் வரப்பில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது ராமமூர்த்தி எனது வயலில் எதற்கு மாடு மேய்கிறாய் எனக் கேட்டதால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். அப்போது நாராயணனின் கழுத்தை பிடித்து ராமமூர்த்தி நெறித்துள்ளார். அதனை தூரத்தில் இருந்து பார்த்த நாராயணன் மனைவி அழகம்மாள் விடுடா என கூறிக் கொண்டே ஓடிவந்துள்ளார். இதற்குள் நாராயணன் மயக்கம் போடவே கீழே விட்டுவிட்டு ராமமூர்த்தி ஓடிவிட்டார். அழகம்மாள் வந்து பார்த்தபோது நாராயணன் இறந்துகிடந்தது தெரியவந்தது.இது பற்றி தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன நாராயணணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரன்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து நாராயணண்னை கொலை செய்த ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார்.
    • அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவ ரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார். சத்யமூர்த்தி லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    சேலம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மீன்தொட்டி பஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவரது மகன் பிரதீப் கண்ணா (வயது 27),

    இவர் சேலம் குகையில் உள்ள பர்பிகுயின் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிள் சேலம் குரங்குச்சாவடி சந்தை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது பிரதீப் கண்ணா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி அவர் கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் ப ரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் விரைந்து வந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பிரதீப்கண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது, விபத்துக்கு காரணமான வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்காமல் இருந்ததும், இரவு நேரத்தில் பிரதீப் கண்ணா மோட்டார் சைக்கிளில் வந்தபோது வேகத்தடையை கவனிக்காமல் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த சோக சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபி அருகே வாகன விபத்திலி 2 கட்டிட தொழிலாளிகள் பலியானார்
    • காயம் அடைந்த தம்பதிக்கு தீவிர சிகிச்சை

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த இ புது கொத்துக்காடு பகுதி சேர்ந்தவர் விக்னேஷ் (20). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (47). கட்டிட தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்னேஷ், ராமன் ஒரே இடத்தில் கட்டிட வேலை பார்த்து வருவதால் இருவரும் நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் விக்னேஷ், ராமன் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சென்று கொண்டு இருந்தனர். வண்டியை விக்னேஷ் ஒட்டி வர பின்னால் ராமன் அமர்ந்து வந்துள்ளார்.

    கோபி-சக்தி மெயின் ரோடு, புதுக்கொத்துக்காடு பேக்கரி கடை அருகே சென்று கொண்டிருந்த போது தனக்கு முன்னால் சென்ற ஆம்னி வேனை முந்தி செல்ல முயன்று ள்ளனர். அப்போது எதிர்தி சையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விக்னேஷ், ராமன் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தி லேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இருந்தார். ராமன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டி ருந்தார்.

    விபத்து பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவத்துக்கு விரைந்து வந்து ராமனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.

    சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் நீல நிற டிசர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷம் கலந்த ஜூஸ் குடித்த சிறுவன் பலியானார்
    • தாய்- மற்றொரு மகனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது

    ஈரோடு,

    ஈரோடு அருகே ரகுபதி நாயக்கன்பாளையம் வாய்க்கால்மேடு ஜீவா னந்தம் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட தொழி லாளி. இவருடைய மனைவி காவிரி. இவர்களுக்கு விஷ்ணு (9), விஸ்வா (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.இவர்கள் காவிரியின் தந்தை சுப்பிரமணியின் வீட்டில் வசித்து வருகி ன்றனர். விஷ்ணுவுக்கு பிறந்ததில் இருந்தே பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்தான். விஸ்வா 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த 30-ந் தேதி இரவு சக்திவேல் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது சாப்பாட்டுக்கு பொறியல் இல்லையென்று காவிரி யிடம் சக்திவேல் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவிரி கோபித்து கொண்டு தனது குழந்தை களுடன் அருகில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை யில் சக்திவேல் வேலைக்கு சென்ற பிறகு காவிரி மீண்டும் வீட்டுக்கு திரும்பி னார்.இந்தநிலையில் காவிரி திடீரென வீட்டுக்கு வெளியில் நின்று வாந்தி எடுத்தார். அப்போது அங்கு வந்த காவிரியின் சகோதரன் மணிகண்டன், உடலுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டு உள்ளார். அதற்கு காவிரி, 3 பாட்டிலில் மாங்காய் ஜூஸ் வாங்கி வந்து விஷத்தை கலந்ததா கவும், அதில் ஒரு பாட்டில் ஜூசை குடித்து விட்டதாக வும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி கண்டன் உடனடியாக வீட்டு க்குள் சென்று பார்த்தார்.

    அப்போது மீதமுள்ள 2 பாட்டில்களில் இருந்த ஜூசையும் விஷ்ணுவும், விஸ்வாவும் குடித்து கொண்டு இருந்ததை பார்த்த மணிகண்டன், விரைந்து சென்று பாட்டில்க ளை பிடிங்கி வெளியில் வீசினார். இதைத்தொடர்ந்து காவிரி மற்றும் 2 குழந்தை களையும் மணிகண்டன் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.அங்கு அவருக்கு டாக்ட ர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் விஷ்ணு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாப மாக உயிரிழந்தான். காவிரிக்கும், விஸ்வாவுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகிரி அருகே கார் மோதியதில் 1½ வயது சிறுமி பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    சிவகிரி,

    சிவகிரி முத்தூர் ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 32). இவரது மனைவி மோகன பிரியா (29). இவர்களுக்கு தமிழ் மாறன் (6) என்ற மகனும், 1 1/2 வயதில் தமிழினி என்ற மகளும் உள்ளனர். பூபாலனின் தாய் விஜயா (60) சிவகிரி ஜீவா தெருவில் உள்ள ஒரு தனியார் பனியன் தைக்கும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் விஜயா வேலைக்கு செல்லும் போது தனது பேத்தி தமிழினியை அழைத்து சென்றுள்ளார். சம்பவத்தன்று பனியன் தைக்கும் நிறுவனத்தின் முன்பு தமிழினி நின்று கொண்டிருந்தார்.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் காரை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது தமிழினி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த தமிழினியை அங்கிருந்தவர்கள் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தமிழினி இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து குழந்தையின் உடலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • நம்பியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலதரகர் பலியானார்
    • சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

    நம்பியூர்,

    ஈரோடு மாவட்டம், நம்பியூர், குருமந்தூர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (70). நிலதரகர். இவரது மனைவி மாசிலாமணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தெய்வ சிகாமணி காளி யம்மன் நகர், குருமந்தூர் மேடு பகுதி யில் காலைக்கடன் கழிப்ப தற்காக ரோட்டில் இடது புறம் நின்று கொண்டி ரு ந்தார். அப்போது அந்த வழி யாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக தெய்வசி காமணி மீது மோதியது.

    இதில் அவருக்கு தலை யில் பலத்த காயம் மற்றும் இடது தொடையில் வலது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இற ந்தார். விபத்தை ஏற்படு த்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து நம்பியூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தின் அருகே பொரு த்தப்பட்டி ருக்கும் சிசி.டி.வி. கேமரா காட்சி களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • வீட்டில் தண்ணீர் ஏற்றுவதற்காக மோட்டாரை சங்கர் ஆன் செய்தும் தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.
    • இதனால் மோட்டாரை ஆன் செய்து வைத்தபடி அதில் தண்ணீர் ஊற்றி உள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆசிர்வாத நகர் 1-வது தெருவை சேர்ந்த வர் சங்கர் (வயது28). கட்டிட தொழிலாளி. இவருக்கு மகா லட்சுமி என்ற மனைவி யும், மகேஸ்வரன் என்ற 8 மாத மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் வீட்டில் தண்ணீர் ஏற்றுவதற்காக மோட்டாரை சங்கர் ஆன் செய்தும் தண்ணீர் வர வில்லை என தெரிகிறது. இதனால் மோட்டாரை ஆன் செய்து வைத்தபடி அதில் தண்ணீர் ஊற்றி உள்ளார். அப்போது சங்கர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை க்காக தூத்து க்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோ தித்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண் முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மதுபோதையில் இருந்த ராஜேசிடம் சம்பளம் பாக்கி கேட்டு தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான ராஜேஷ்(வயது30) என்பவர் சம்பளம் பேசி அழைத்து வந்திருந்ததாக தெரிகிறது. அவர் மொத்தமாக சம்பளத்தை வாங்கி மற்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சிலருக்கு ரூ.20 ஆயிரம்வரை சம்பள பணத்தை ராஜேஷ் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் மதுபோதையில் இருந்த ராஜேசிடம் சம்பளம் பாக்கி கேட்டு தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெள்ளவேடு போலீசார் சம்பவ இடதுக்கு விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாள நிஷாத் (20) சச்சின் ( 20 ) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இதன் பின்புறம் இன்று காலை மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயி லில் அடிபட்டு 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தின் அருகே பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக் டர் கேசவன் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி னார். அப்போது அந்த வாலிபர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவரவில்லை.

    அவர் மஞ்சள் நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், நீல நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார். பூணூல் அணிந்திருந்தார். சட்டையில் வில்லாபுரத்தில் உள்ள ஒரு டெய்லர் கடையின் பெயர் இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் அணிந்திருந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பு தைத்தது என்பது தெரிய வந்தது. வேறு விவரம் ஏதும் தெரியவில்லை.

    இதுகுறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்த–வர்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×