என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

    • மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை ஒன்றியம், வங்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே மாத்தூர்-ஆவூர் சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளார். அப்போது தொண்டைமான் நல்லூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவிந்தராஜ் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக செல்வராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×