search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Centenary celebration"

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
    • தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    ஒடிசா ரெயில் விபத்துக் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஒடிசா ரெயில் விபத்தைத் தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இப்பொதுக்கூட்டம் நாளை (ஜூன் 7-ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    • மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்தநாளுக்காக 100 ரூபாய நாணய மொசைக் ஆர்ட்டை உருவாக்கினேன்.
    • அன்றாட பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போது இந்த மொசைக் ஆர்ட்டை இரு மாதங்களில் செய்து முடித்தேன்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் லுாகாஸ் (33). இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்.

    திருக்குறள் மற்றும் தமிழ் மீது பற்றுள்ள இவர், ஏற்கனவே ஐஸ் குச்சிகளில் தனித்தனியாக 1,330 திருக்குறள்களை எழுதியும், வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு 5000 காகித துண்டுகளால் அவரது உருவத்தை வரைந்தும் சாதனை படைத்துள்ளார்.

    இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, 10 ஆயிரம் காகித துண்டுகள் மூலம் 100 ரூபாய் நாணயத்தில் கருணாநிதி உருவம் இடம் பெற்றுள்ளது போல் மொசைக் ஆர்ட்டை லூகாஸ் உருவாக்கி உள்ளார்.

    இந்த மொசைக் ஆர்ட்டில் கீழ் பகுதியில் கருணாநிதி கூறிய இமயமலைக்கு பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன் என்ற வரிகளை எழுதி குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து லூகாஸ் கூறுகையில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்தநாளுக்காக 100 ரூபாய நாணய மொசைக் ஆர்ட்டை உருவாக்கினேன்.

    இதற்கு, 10 ஆயிரம் பேப்பர் துண்டுகள் தேவைப்பட்டன. எனது அன்றாட பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போது இந்த மொசைக் ஆர்ட்டை இரு மாதங்களில் செய்து முடித்தேன். இன்னும் பல சாதனைகளை படைப்பேன் என கூறினார்.

    • சிறையில் கைதிகளுக்கு புதிய உணவு முறை, உணவின் அளவை மாற்றி அமைக்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
    • அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் சிறைத் துறையின் மானிய கோரிக்கையின்போது சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறை துறைகள் துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்பு வெளியிட்டார்.

    அதன்படி கைதிகளின் நலனுக்காக நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் கைதிகளின் உணவு முறை மற்றும் உணவின் அளவை ஆண்டுக்கு ரூ.26 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்தும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு புதிய உணவு முறை மற்றும் உணவின் அளவை மாற்றி அமைக்கும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி, டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டுகள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மாலை புளியந்தோப்பு பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மாலை புளியந்தோப்பு பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசுகிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், பேராசிரியர் காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசு கிறார்கள்.

    முடிவில் திரு.வி.க.நகர் வடக்கு பகுதிச் செயலாளர் செ.தமிழ்வேந்தன் நன்றி கூறுகிறார்.

    • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் நடைபெறும்.
    • தொடக்க விழா மட்டும் வருகிற 4-ந்தேதி (ஞாயிறு) தொடங்குகிறது.

    சென்னை:

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒரு ஆண்டு இலக்கிய திருவிழாவாக சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கொண்டாடப்படுகிறது.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    எத்திசையும் புகழ் மணக்கும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை பாராண்டு தமிழ் செய்த நூறாண்டு தலைவருக்கு ஓராண்டு முழுவதும் விழா கொண்டாடுகிறோம்.

    கவியரங்கம், கருத்தரங்கம்-இசையரங்கம், இனிய தமிழ்ப் பாட்டரங்கம், சொல்லரங்கம், வல்லரங்கம், தெம்மாங்குத் தேனரங்கம், பட்டிமன்றம்-பாவையர் மன்றம், பட்டொளிவீசும் பகுத்தறிவு மன்றம், மாண்பு நிறை மாணவர் மன்றம், கான மன்றம், கானா மன்றம், கவிதை மன்றம், கருத்தியல் மன்றம், அறிவுடை மன்றம், ஆன்மீக மன்றம், இனஎழுச்சி மன்றம், எழுத்தாளர் மன்றம்.

    பாவைக்கூத்து, தெருக்கூத்து, மண்ணிசைப் பொழிவு, மக்களிசைப் பொழிவு, கரகாட்டம், ஒயிலாட்டம், நடன மேடை, நகைச்சுவை மேடை, கருத்தைக் கவரும் கவின்மிகு மேடை... என வருடம் நெடுக வசந்த விழாக்கள் நடைபெறும்.

    மொத்தம் 53 கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் நடைபெறும். தொடக்க விழா மட்டும் வருகிற 4-ந்தேதி (ஞாயிறு) தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி (சனிக்கிழமை) நிறைவு பெறும்.

    தொடக்க நாள் நிகழ்ச்சி இன்முகத் தலைவரை பாடும் இசைபடு கவியரங்கம் என்ற தலைப்பில் குருநானக் கலைக்கல்லூரி அரங்கில் நடக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், விவேகா ஆகியோரின் பாடல்களை பாடகர்கள் அனந்து, ஸ்ரவன், ஹரித்தா, விஜயலட்சுமி, டாக்டர் கற்பகம் ஆகியோர் பாடுகிறார்கள். இசை பரத் வாஜ்.

    13-ந்தேதி (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் கலைஞரின் நிலைத்த புகழுக்கு காரணம் தாராள மனமே, போராடும் குணமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

    அடுத்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு கலைஞர் வழங்கியது ஒளிரும் தன் மானமே, மலரும் நலத்திட்டங்களே என்ற தலைப்பில் பட்டிமன்றத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

    இதுதவிர கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பொதுக்கூட்டங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், சேவை திட்ட முகாம்களும் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 2-ந்தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந்தேதி வருகிறது.

    இந்த ஆண்டு கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா என்பதால் தி.மு.க. சார்பில் மிகப்பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது பிறந்த நாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.

    ஊர்கள் தோறும் தி.மு.க. எனும் தலைப்பில் கொடிக் கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, எங்கெங்கும் கலைஞர் என்ற அடிப்படையில் மாவட்டம் தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த முன்னோர்களுக்கு பொற்கிழி வழங்குவது தி.மு.க. குடும்ப மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, கருத்தரங்கம் பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    3-ந்தேதி சென்னை புளியந்தோப்பில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    இதே போல் அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள் அரசு ஊழியர்கள் பயன் அடைந்த மக்கள் ஆகியோரை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதன் முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 2-ந்தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலட்சினை) வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் தலைமைச்செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும்.
    • அரசு சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கட்சி சார்பில் ஒரு வருடம் கொண்டாட முடிவெடுத்து உள்ள நிலையில் அரசு சார்பிலும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும். அதே நேரத்தில் அரசு சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழா என்பது கலைஞர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வதாக இருக்க வேண்டும்.

    நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர். எனவே அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் விழாவாக இந்த விழாவை நடத்த வேண்டும்.

    5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்ந்தவர் தலைவர் கலைஞர். 13 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர். தமிழக மேல்-சபை உறுப்பினராகவும் அமர்ந்து அரிய விவாதங்களை எடுத்து வைத்தவர்.

    அவர் தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாது இந்திய அரசியல் திசையை தீர்மானிப்பவராகவும் இருந்தவர். முதல் முறையாக அவர் ஆட்சிக்கு வந்த போது, கூறிய வார்த்தை நான் முதலமைச்சராக இருந்தாலும் அங்கிருந்தபடியே குடிசைகளை பற்றி சிந்திப்பேன் என்றார். தன்னுடைய ஆட்சிக்கு 3 இலக்கணம் இருப்பதாக கலைஞர் கூறுவார்.

    சமுதாய சீர்திருத்த தொண்டு, வளர்ச்சிப் பணிகள், சமதர்ம நோக்கு இவை மூன்றும்தான் ஆட்சியின் இலக்கணமாக இருந்தது.

    அந்த இலக்கணத்தின் அடிப்படையில் தான் ஆட்சி நடத்தினார். அதனால் அனைத்து துறைகளும் ஒரு சேர வளர்ந்தது.

    அன்னை தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி, ஒன்றிய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம், மகளிருக்கு சொத்தில் சமஉரிமை சட்டம், சமூகநீதி உரிமைகள், உழவர்களுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி கடன் ரத்து, சென்னை தரமணியில் டைடல் பார்க் என பல்வேறு சாதனை திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    மொத்தத்தில் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர் என்று சொன்னால் அது மிகையாகாது.

    கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந்தேதி முதல் நடைபெற உள்ளதால் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நூற்றாண்டு விழா, தலைமைக்குழு, விழாக்குழு, மலர்க்குழு, கண்காட்சி குழு போன்ற குழுக்கள் அமைச்சர்கள் கொடுத்த ஆலோசனைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி தொகுத்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    கலைஞர் ஆற்றிய நலத்திட்டங்களை பட்டியலிட்டு நிகழ்ச்சிகள் அமைய வேண்டும்.

    ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வதாக இருக்க வேண்டும். எனவே அமைச்சர்கள் குழுக்களுடன் அடிக்கடி கலந்து பேசி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்து நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க உள்ளதால் அவரது வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜூன் 3-ந்தேதி வடசென்னையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜூன் 3-ந்தேதி வடசென்னையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கிங் ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்தர மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார்.

    இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    • விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு.
    • ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பாக வாதாட செய்து நல்ல தீர்ப்பு வாங்கி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாநில இலக்கிய அணி தலைவர் புலவர் இந்திரகுமாரி தலைமையில் மாநில செயலாளர் வி.பி. கலைராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

    தமிழாய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி தமிழால் வாழ்த்தரங்கம் நடத்துவது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பது. தொழில் துறையில் தமிழ்நாட்டை முதல் இரண்டு இடங்களுக்குள் கொண்டு வந்ததோடு கல்வி, மருத்துவம், மகளிர் நலன், விவசாயம், இளைஞர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது.

    விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிகச்சிறந்த விளையாட்டு மைதானம் அமைப்பதுடன் ஆசிய ஆக்கி போட்டியை சென்னையில் நடத்தவும், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நடத்தவும் அரும்பாடு பட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உழைப்பை பாராட்டுவதோடு அவரது தோளோடு தோள் நின்று கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவது.

    ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பாக வாதாட செய்து நல்ல தீர்ப்பு வாங்கி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் நந்தனம் நம்பிராஜன், ஈரோடு இறைவன், சந்திரபாபு, வெங்கடாசலம், தசரதன், ஆர்.எம்.டி. ரவீந்திரன், செந்தில், கே.எம். நாதன், திராவிட மணி, பிரம்மபுரம் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜூன் 3-ந்தேதி வட சென்னையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கிங் ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்தர மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி ஜூன் 3-ந்தேதி வட சென்னையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கிங் ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்தர மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

    அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார்.

    இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

    ×