search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Governor"

    கர்நாடக கவர்னர் பா.ஜனதாவின் ஏஜெண்டுபோல செயல்படுகிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
    களக்காடு:

    ம.தி.மு.க. வெள்ளி விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நாங்குநேரியில் இன்று நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் மெஜாரிட்டி இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். கர்நாடக கவர்னர் பா.ஜனதாவின் ஏஜெண்டுபோல செயல்படுகிறார். 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள குமாரசாமியை அழைக்காமல் எடியூரப்பாவை அழைத்தது மற்ற கட்சிகளில் இருந்து ஆள் பிடியுங்கள் என்று கூறுவதுபோல் உள்ளது.

    தமிழகத்திற்கு விரோதமாக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையிலும் கூட மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) மனு தாக்கல் செய்தன. #KarnatakaCMRace #AngloIndianMLA
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தன. அதில், பா.ஜனதா கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் வஜூபாய் வாலா கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது.



    இது சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் சட்டவிரோத முயற்சி. இது நியாயமற்றதும், ஜனநாயக நடைமுறையை கேலிக்கூத்தாக்குவதும் ஆகும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த கட்சிகள் ஏற்கனவே எடியூரப்பா முதல்-மந்திரி பதவி ஏற்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. முன்னதாக காலையில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க மறுத்துவிட்டது. #KarnatakaCMRace #AngloIndianMLA
    எடியூரப்பாவுக்கு கவர்னர் 15நாள் அவகாசம் கொடுத்தது சரியான நடைமுறைதான் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றது மட்டற்ற மகிழ்ச்சி. மீண்டும் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றது கர்நாடக விவசாயிகளுக்கு அடிதட்டாகவும், மக்களுக்கு பக்க பலமாகவும் அமைந்துள்ளது. இனி கர்நாடக மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அவர் ஏற்படுத்தி கொடுப்பார்.

    இந்த வெற்றியை பெற்று தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    பா.ஜனதா தனி ஒரு கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ளார். வேறு யாருக்கு அழைப்பு கொடுக்க முடியும்? எடியூரப்பாவுக்கு கவர்னர் 15நாள் அவகாசம் கொடுத்தது சரியான நடைமுறைதான்.


    கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா ரூ.56 ஆயிரம் கோடி விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்தது அவரது முதல் பெரிய முயற்சியாகும். பா.ஜனதா ஆட்சி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகவில் பா.ஜனதா ஆட்சி மூலம் காவிரி தண்ணீர் உறுதியாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கர்நாடக தேர்தலுக்கு முன்பே அங்கு பா.ஜனதா ஆட்சி அமையும் என்று நான் கூறியிருந்தேன். முதல்வர் எடியூரப்பாவிடம் காவிரி பிரச்சினை, இரு மாநில உறவு பிரச்சினை, தமிழ் சொந்தங்களுக்கு உள்ள பிரச்சினை குறித்து பேசுவேன். இன்னும் ஒரு மாதத்தில் அவரை சந்திப்பேன்.

    காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது. இதை போட்டது தி.மு.கவும் காங்கிரசும் தான். அதை கிழியாமல் கவனமாக எடுக்க வேண்டும். இந்த முறை காவிரி தண்ணீர் கண்டிபாக வரும்.

    தமிழகத்தில் எது தேவை,எது வேலை வாய்ப்பை கொடுக்கும் என்பதை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மற்றவர்களின் சதி திட்டம் காரணமாக மக்கள் புறக்கணித்து வருகிறார்கள்.

    ஒரு சுப நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். அங்கு நடிகர் எஸ்.வி.சேகர் வந்தது எனக்கு தெரியாது. அவரை கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தஞ்சை சுற்றுலா பயணியர் மாளிகையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை வைத்திலிங்கம் எம்.பி. மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.  #ponradhakrishnan #yeddyurappa #karnatakagovernor

    குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை மோடி அரசு மீறி விட்டதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து எடியூரப்பா முதல்- மந்திரியாக இன்று பதவி ஏற்றார்.

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த வி‌ஷயத்தை நாங்கள் எளிதாக விட்டுவிட மாட்டோம். ஏனெனில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாங்கள் அளித்துள்ளோம். ஆனால் எங்கள் கூட்டணிக்கு பதிலாக பெரும்பான்மை இல்லாத பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.



    மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 3 அல்லது 4 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை. அவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்து உள்ளார்.

    கவர்னரை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தியதன் மூலம் மோடி தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளது.

    எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்போம்.

    இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
    கர்நாடக கவர்னர் ஒருதலைபட்சமாக எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பது ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் செயலாகும் என்று திருமாவளவன் குற்றச்சாட்டி உள்ளார்.#KarnatakaElections2018 #Thirumavalavan
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் யாரால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமோ, எந்த அணியால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமா அவர்களை அழைக்க வேண்டும் என்பது தான் சட்ட நடைமுறையாகும்.

    அந்த வகையில் அதிக எண்ணிக்கையில் உள்ள காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தை தான் ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும்.

    ஆனால் கவர்னர் ஒருதலைபட்சமாக பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பது ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் செயலாகும். இதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

    இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் பதவி ஏற்பை இப்போதைக்கு தடை செய்ய முடியாது என்று கூறினாலும் நாளை நடைபெற உள்ள வழக்கில் அளிக்கப்படுகிற இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று வழிகாட்டுகிறது. எடியூரப்பா தங்களது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கவர்னரிடம் சமர்ப்பித்து உள்ளார்.



    அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கூறப்பட்டுள்ளது. மணிப்பூர், கோவா, மேகாலயா போன்ற 3 மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது மிகவும் குறைவான இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார்.

    குறிப்பாக மேகலாலயாவில் 2 இடங்களில்தான் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. அதை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார். அங்கே ஒரு நீதி, கர்நாடகாவில் ஒரு நீதி என்பது மத்திய அரசு கவர்னரை தங்களின் எடுபிடிகளாக கைப்பாவைகளாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது மிகவும் வேதனைக்குரியது.

    ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒருங்கே அணி திரள வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது.

    உச்சநீதிமன்றத்தின் நாளைய தீர்ப்பை பொறுத்திருந்து பார்ப்போம். அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி ஒரு கலாசார பாசிசத்தை தட்டி எழுப்பி வருகிறது. அரசியலிலும் ஒரு கொடுங்கோன்மையை நிலை நாட்டுகிறது. தேசத்துக்கு இது மிகவும் ஆபத்தானது.

    இவ்வாறு அவர் கூறினார்.#KarnatakaElections2018 #Thirumavalavan
    குஜராத் சட்டசபை தேர்தலில் வஜூபாய் வாலா தனது எம்.எல்.ஏ. பதவியை(ராஜ்கோட் மேற்கு) ராஜினாமா செய்து மோடி போட்டியிடுவதற்கு வழிவிட்டார். #KarnatakaElection2018 #KarnatakaElections #VajubhaiVala
    ஆமதாபாத்:

    கர்நாடக தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்திருப்பதால் தற்போது அனைவரின் கவனமும் மாநில கவர்னர் வஜூபாய் வாலா எடுக்கும் முடிவுகளை நோக்கி திரும்பி இருக்கிறது.

    79 வயது வஜூபாய் வாலா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் குஜராத்தில் பா.ஜனதாவின் ஆட்சியில் 18 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி என்ற சாதனைக்கும் உரியவர். மோடிக்கு மிக நெருக்கமானவரும் ஆவார்.



    2001-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக குஜராத் முதல்-மந்திரி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 6 மாதத்துக்குள் அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆனால் மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ஒரு சில எம்.எல்.ஏ.கள் தங்களது தொகுதியை விட்டுத்தர விரும்பவில்லை.

    இந்த நிலையில், வஜூபாய் வாலா தனது எம்.எல்.ஏ. பதவியை(ராஜ்கோட் மேற்கு) ராஜினாமா செய்து மோடி போட்டியிடுவதற்கு வழிவிட்டார். 2002-2012 ஆண்டுகள் இடையே மோடியின் மந்திரிசபையில் 2-வது மந்திரி என்ற அந்தஸ்திலும் இருந்தார். அதற்கு முன்பாக கேசுபாய் பட்டேல் முதல்-மந்திரியாக இருந்தபோதும் இதே நிலையை வகித்துள்ளார்.

    தனது சொந்த ஊரான ராஜ்கோட்டில் இருந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் முதலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார். பிறகு ஜனசங்கத்தில் சேர்ந்தார். நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து போராடியதற்காக வஜூபாய் வாலா சிறைக்கும் சென்றுள்ளார்.  #KarnatakaElection2018 #KarnatakaElections #VajubhaiVala
    அதிக இடங்களில் வெற்றிபெற்ற கட்சியான பா.ஜ.க.வை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கர்நாடக கவர்னரை எடியூரப்பா சந்திக்கிறார். #KarnatakaElections2018 #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் 5 மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 56 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில், மற்ற கட்சிகளை விட அதிகப்படியான தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சி என்பதால் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவிப்பதற்காக இன்று மாலை 5 மணியளவில் மாநில கவர்னர் வஜுபாய் வாலா-வை சந்திக்கப் போவதாக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். #KarnatakaElections2018 #Yeddyurappa
    ×